தோழமையுடன்

Wednesday, September 12, 2012

ஆன்மீகத்தை வசைபாடும் பெயரில்லாத உங்களுக்கு!

 மாற்று கருத்துகளை வைக்கும் பெயர் வெளிடாத சகோதருக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

முதலில் ஒரு சின்ன வேண்டுகோள்: குர்ஆன், ஹதீஸின்  பொருளை விருப்பம் போல திரித்து கூறி இஸ்லாமியர்களிடையே கொள்கை குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு போலிபெயர்களில் சிலர் உலாவி வரும் நேரத்தில் உங்கள் இஸ்லாமிய அடையாளத்தை - குறைந்தபட்சம் பெயர், மின்னஞ்சல் என்ற அளவிலாவது வெளியிடுங்கள். நீங்கள் வலைத் தளம் வைத்திருப்பவர் என்றால் அதன் முகவரியை தருவது இன்னும் சிறப்பு.


அடையாளத்தை மறைத்து கொள்வதால் தாக்குதல் வார்த்தைகளை சரளமாக பிரயோகிக்கின்றீர்கள். அதனால் உங்கள் பின்னூட்டங்களில் சிலவற்றை வெளிடவில்லை. மேலும் அப்படி வெளிடாத பின்னூட்டங்கள் ஏதும் குர்ஆன், ஹதீஸ் சம்பந்தப்பட்ட கருத்துகள் அல்ல. தஸவ்வுஃப் பற்றிய உங்கள் விளக்கமின்மையால் விளைந்த உங்கள் தனிப்பட்ட வெறுப்புகளின் வெளிப்பாடு. இவைகளை போன்றவற்றை வெளியிட்டு அதனால் புண்படும் மனங்களின்  உங்கள் பாணியிலான பதிலையும்  பதிவிடத் துவங்கினால். நியாயமான எந்த தெளிவுக்கும் அது வழி வகுக்காது.  

மூஸா நபி பிர்அவ்னின் சபைக்கு செல்லும் போது பிர்அவ்னிடம் கூட சங்கையான வார்த்தைகளில் (கௌலன் கரீமா) கருத்தை எடுத்து சொல்ல உத்தரவிடுகிறது குர்ஆன். கருத்து பகிர்வு ஒரு நல்ல விஷயம். அதன் மூலம் உங்கள் நோக்கம் உணமையை எடுத்துக் கூறி எங்களை தெளிய வைப்பது என்றால் அதை கண்ணியமான முறையில் எடுத்துக் கூறுங்கள். 

 கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் என் சீதேவி சகோ(தரா? தரி?)!

அடுத்து உங்கள் கேள்விகளில் குர்ஆன் ஹதீஸை சம்பந்தப்படுத்தி எங்களை வசைபாடி இருந்த இந்த கருத்தை வெளியிட்டதுடன் நண்பர்கள் நவாஸ், நாகூர் இஸ்மாயில் ஆகியோரின் கருத்துகளையும் தஸவ்வுஃப் சம்பந்தபட்ட பல்வேறு கொள்கை சார்ந்தவர்களின் சில கருத்துகளையும் (அதன் லிங்கை)  புரிதலை வேண்டி நன்றியுடன் முன்வைக்கின்றேன்: 

முதலில் உங்கள் கேள்வி:


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மார்க்க விஷயத்தில் யாருக்கும் எதையும் ரகசியமாக சொல்லிக் கொடுக்க வில்லை. இறுதி ஹஜ்ஜின் போது அரபாத் பெருவெளியில் கூடி நின்ற ஒரு இலட்சத்துக்கும் அதிகமான ஸஹாபாக்களின் முன்னர் நான் எல்லாவற்றையும் உங்களுக்குச் சொல்லி விட்டேனா?’ என்று கேட்கிறார்கள். அதற்கு அத்தனை பேரும் ஏகோபித்த குரலில் ஆம்! அல்லாஹ்வின் தூதரேஎனச் சாட்சி பகர்ந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இறைவா! நீயே சாட்சி!என்று அல்லாஹ்வை சாட்சியாக்கினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) ஆதாரம்: புகாரி) 

September 11, 2012 9:54 AM

fazhan nawas said...
ஹஜ்ஜதுல் விதாவின் போது யவ்முல் அரபாவில் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் அவர்கள், அரபாவில் உரைநிகழ்த்தினார்கள், உரையின் இறுதியில்
கண்களும் கலங்கியவர்களாக ' இறைவனின் செய்தியை நான் உங்களிடம் எத்திவைத்தேனா என்று கேட்டார்கள். அதற்கு சஹாபாக்கள் ஆம் என்று பதில்அளித்தார்கள். வானத்தை பார்த்து இறைவா இதற்கு நீயே சாட்சி என்றார்கள் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் அவர்கள், 'எல்லாவற்றையும் நான்; உங்களுக்கு சொல்லிவிட்டேனா என்று நாயகம் அவர்கள் கேட்கவில்ல.

nagoreismail said..
Mr.Mohamed Ismail from Singapore replied to your query :

Bukhari, Volume 1, Book 3, Number 121:
Narrated Abu Huraira:

I have memorized two kinds of knowledge from Allah's Apostle. I have propagated one of them to you and if I propagated the second, then my throat would be cut (i.e. killed).”

On the strenght of what I've read till now, I'm more persuaded by the interpretation that relates the "second kind" of knowledge as a political one, related to the political situation under Yazid.

For example, see this article:
Two Vessels of Knowledge, by Sh. G. F. Haddad - http://www.livingislam.org/n/ahtv_e.html

But, I think of having read the position of Imam Rabbani Shaykh Sirhindi , who relates this "second kind" to spiritual knowledge.

Since I deeply love Shaykh Sirhindi, I'd like to understand this matter,

And please, does anyone have the quotation of Shaykh Sirhindi about this hadith? I didn't manage to find it more!!

Abu Hurayra's Two Vessels of Knowledge
www.livingislam.org


nagoreismail said...
சொல்வதற்கு இரண்டு செய்திகள் இருக்கிறது...

1. பெருமானார் (ஸல்) அவர்கள் எல்லாவற்றையும் சொல்லவில்லை என்பது, அதற்கு காரணம் சொல்ல கூடாது என்பதல்ல.. பெற்றுக் கொள்ள கூடிய பக்குவம் இருந்தால் நிச்சயம் சொல்ல தான் வேண்டும், ஆனால் எல்லாவற்றையும் எல்லோருக்கும் சொல்ல முடியாது,

பெருமானார் (ஸல்) அவர்கள் கூறிய் இந்த ஹதீதை சிந்தித்து பார்க்க வேண்டுகிறேன், “மக்களிடம் பேசும் போது அவர்களின் அறிவுக்கு தக்கவாறு பேசுங்கள்..என்று.

பெற்றுக் கொள்ள பக்குவத்தை வளர்த்து கொள்ளாதவர்களிடத்திலே ஆன்மிக அறிவை சொல்வது என்பது பச்சை குழந்தைக்கு மாட்டிறைச்சியை கொடுப்பதற்கு சம்ம் என்று எங்கள் ஹஜ்ரத் (பன்னூலாசிரியர் அப்துல் வஹாப் பாகவி) எழுதியிருக்கிறார்கள்.

இன்னொரு ஹதீதும் இங்கே நினைவு கூறத்தக்கது, “எனக்கு தெரிந்தது எல்லாம் உங்களுக்கு தெரிந்தால் குறைவாக சிரிப்பீர்கள், அதிகமாக அழுவீர்கள்..

அனுபவத்தில் கிடைக்கும் செய்தியை வார்த்தையில் விளக்க முடியாது என்பதை உணரலாம்.

இரண்டாவது செய்தி. அபுஹுரைரா (றலி) அவர்கள் அறிவித்த ஒரு ஹதீதில் வருகிறது...பெருமானார் (ஸல்) அவர்களிடமிருந்து இரண்டு வகையான அறிவை பெற்றுக் கொண்டோம். பெற்றூக் கொண்டதில் ஒன்றினை உங்களுக்கு தெரியப்படுத்தி விட்டொம், ஆனால் மற்றொன்றை தெரிவித்தால் எங்கள் தொண்டை சங்கு வெட்டி எரியப்படும்..என்று சொல்லியிருக்கிறார்கள்.

இரண்டு வகையான அறிவில் பொதுவில் வைக்க வேண்டியதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டியதை அறிவித்து விட்டார்கள்.

அனுபவித்து பெறக்கூடிய அறிவை பொதுவில் வைத்தால்... வேண்டாம்.. ஒரு மன்சூர் ஹல்லாஜே (றஹ்) போதும்..



 உங்கள் இரண்டாவது கேள்வி:

புஹாரியில் இடம் பெற்றுள்ள இந்த ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு ரகசிய ஞானம் என்று ஒன்று உள்ளதாகக் கூறுகின்றனர்.இந்த ஹதீஸை மட்டும் மேலோட்டமாகக் கவனிக்கும்போது அவர்களின் முடிவு சரியானதென்று சிலருக்குத் தோன்றலாம்.

என்னிடமிருந்து (பெற்ற) சிறு வசனமாக இருந்தாலும், பிறருக்கு சொல்லி விடுங்கள்.(புகாரி) இது நபிமொழி. நபிصلى الله عليه وسلم   எவன் ஒருவன் தான் கற்ற கல்வியை மறைக்கிறானோ, அவனுக்கு நெருப்புக் கடிவாளம் போடப்படும் என்று நபிصلى الله عليه وسلم கல்வியில் ஒரு பகுதியை மறைக்க அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அஞ்சியிருக்கின்றனர். அதை அவர்களே பின் வருமாறு கூறவும் செய்கின்றனர். இந்த வேதத்தில் மக்களுக்காக நாம் தெளிவாக்கிய பின்னரும் நாம் இறக்கியருளிய தெளிவான வசனங்களையும், நேர்வழியையும் யார் மறைக்கின்றார்களோ, அவர்களை அல்லாஹ் சபிக்கின்றான். சபிப்பவர்களும் சபிக்கின்றார்கள் என்று தொடங்கக்கூடிய இரண்டு குர்ஆன் வசனங்கள் இல்லாவிட்டால், நான் எந்த ஒரு ஹதீஸையும் அறிவித்திருக்க மாட்டேன். என்று அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் கூறுகிறார்கள்.(புகாரி)

மார்க்கத்தின் எந்த ஒரு பகுதியையும் மறைக்க கூடாது என்பதை உணர்ந்து வைத்துள்ள அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ 
அவர்கள் நிச்சயம் மார்க்கத்தை மறைத்திருக்க மாட்டார்கள் என்று உணரலாம். நான் ஒரு பகுதியை சொல்லவில்லை என்று அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் கூறியது நிச்சயமாக மார்க்க சம்பந்தப்பட்ட விஷயங்களாக இருக்க முடியாது. ஏனெனில் மார்க்க சம்மந்தப்பட்ட எதனையும் மறைக்கக்கூடாது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கின்றது. அப்படியானால் அவர்கள் மறைத்த விபரங்கள் என்ன?

பிற்காலத்தில் கொடுங்கோல் ஆட்சி நடத்தகூடிய மன்னர்கள் அவர்களின் காலம், போன்றவைகளை முன்னறிவுப்பாக நபி صلى الله عليه وسلم அவர்கள் அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ
அவர்களுக்குச் சொல்லி இருந்தனர். அவற்றை வெளிப்படுத்தினால், ஆட்சியாளர்களால் தமக்கு ஆபத்து நேரலாம் என்பதற்காக அவற்றை அபூஹுரைரா  ரகசிய ஞானத்தை அவர்கள் மறைத்து வைத்து இருந்தார்கள் என்று கருத இந்த ஹதீஸில் எவ்வித ஆதாரமும் இல்லை. ஒரு வாதத்துக்காக ரகசிய ஞானத்தைத் தான் மறைத்தார்கள் என்று ஏற்றுக் கொண்டாலும் முரீது வியாபாரிகளுக்கு இதில் ஆதாரம் எதுவுமில்லை.

அவர்கள் கருத்துப்படி நபி صلى الله عليه وسلم அவர்கள் அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ
அவர்களுக்கு ரகசிய ஞானத்தைத் கற்றுக் கொடுத்திருந்தனர் என்று வைத்துக்கொண்டால் அந்த ரகசிய ஞானத்தை அபூஹுரைரா ரகசிய ஞானம் இருப்பதாக வைத்துக் கொண்டால் அது அபூஹுரரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.அவர்கள் எவரிடமும் சொல்லாமல் மறைத்து விட்டுச் சென்று விட்ட நிலையில் வேறு எவருக்கும் அது தெரிவதற்கு எவ்வித முகாந்திரமுமில்லை.

அலிرَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களுக்கு மட்டும் நபி صلى الله عليه وسلم அவர்கள் ரகசிய ஞானம் கற்றுக் கொடுத்திருந்தனர், அவர்கள் வழியாக தொடர்ந்து அந்த ரகசிய ஞானம் ஷேக்குகளுக்குத் தெரிவிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றது என்பது ரகசிய ஞானக்காரர்களின் இரண்டாவது ஆதாரம். மனிதர்களை வழி கெடுப்பதற்காக என்றே இஸ்லாத்தில் திட்டமிட்டு நுழைக்கப்பட்ட அத்தனை தரீக்காக்களும், அலி குர்ஆனில் இல்லாத (விஷேச) ஞானம் எதுவும் உங்களிடம் உண்டோ? என்று நான் அலி رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை விளங்குவதில் ஒரு மனிதனுக்கு கொடுக்கப்படுகின்ற ஞானத்தைத் தவிர வேறு எதுவும் அல்லாஹ்வின் மீது ஆணையாக எங்களிடமில்லை. இதோ(என் கையில்) உள்ள இந்த ஏட்டின் உள்ளவற்றையும் தவிர வேறு எதுவுமில்லை, என்று கூறினார்கள். ஏட்டில் உள்ளது என்னவென்று நான் கேட்டபோது அதையும் சொல்லிவிட்டார்கள். நஷ்ட ஈடு பற்றிய சட்டங்கள், கைதிகளை விடுதலை செய்வது போன்ற சட்டங்கள் இவைதான் அந்த ஏட்டில் உள்ளவை என்றும் கூறிவிட்டார்கள் (அறிவிப்பவர்:அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ புகாரி)

அலிرَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களே தன்னிடம் ரகசிய ஞானம் எதுவுமில்லை என்று திட்டவட்டமாக மறுத்து விட்டனர். இதன் பின்னரும் ரகசிய ஞானம் உள்ளது என்று கூறி ஷேக்குகள் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

முனாபிக்களின் பெயர் பட்டியலை ஹுதைபதுல் யமானرَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களுக்கு நபிصلى الله عليه وسلم   இது போன்ற பிரச்சனைகளில் சிலவற்றைத் தான் சிலரிடம் ரகசியமாக சொல்லி இருந்தனர். இவர்கள் நினைப்பது போல் ரகசிய ஞானம் என்று எதனையும் சிலருக்கு மட்டும் குறிப்பாகச் சொல்லித்தரவில்லை. மக்களை ஆட்டு மந்தைகளாகக் கருதிக் கொண்டு தங்களுக்கு மட்டுமே எல்லாம் விளங்கும் என்று அகந்தை கொண்ட போலிகளின் பேச்சில் ஏமாற வேண்டாம்.

விளக்கங்கள்:

1.    அபுஹுரைரா அவர்களின் ஹதீஸிலிருந்து நீங்கள் எல்லா ஞானங்களை எல்லோருக்கும் பெருமானார் ஒரே மாதிரியாக வழங்கவில்லை என்பதை தெரிந்து கொண்டிருந்திருப்பீர்கள்.

2.   அபுஹுரைரா(ரலி) அவர்களின் ஹதீஸும் தஸவ்வுஃப் என்ற கலைக்கு ஆதரவாக முன்வைக்கப்படுகின்றது. ஒரு வாதத்திற்காக இந்த ஹதீஸையே எடுத்து கொள்ளாவிட்டாலும் கூட அறிந்து கொள்ளுங்கள்  தஸவ்வுஃபின் அடிப்படையே ஹதிஸே ஜிப்ரயீல் எனப்படும் இஹ்சான் சம்பந்தப்பட்ட ஹதீஸாகும். இதன் விளக்கம் தாங்கள் அறிந்திருக்கிறீர்களா? என்பதை சிந்திக்க வேண்டுகின்றேன். இந்த சுட்டியை பார்வையிட உங்களை அழைக்கின்றேன் யார் அந்த வினோத மனிதர்?

 

3.  தஸவ்வுப் பற்றி ஆய்வு செய்த தஸவ்வுஃபை சாராத அறிஞர் கலாநிதி சுக்ரி அவர்களின் இந்த கட்டுரையையும் படித்து பாருங்கள். தஸவ்வுப் - அதன் தோற்றம், வளர்ச்சி, பங்களிப்புகள் 

4.    அலி (ரலி) அவர்களின் வழியாக வந்த ஞானம் குர் ஆன், ஹதீஸுக்கு மாற்றமானது அல்ல என்பதைத் தான் அபுஹுரைராவைக் கொண்டு நீங்கள் கூறும் ஹதீஸ் அறிவிக்கிறது. குர்ஆன் கூறும் ஏகத்துவ மெய்ஞானம் ஓர் எளிய விளக்கம்  என்ற கட்டுரையின் கீழ் உங்கள் கருத்தை பதிந்திருக்கின்றீர்கள். அந்த கட்டுரையில் உள்ளவை குர்ஆன், ஹதீஸிலிருந்து தானே எழுதப்பட்டிருக்கிறது. அதைப்பற்றிய உங்கள் விளக்கம் என்ன என்பதை சிந்தித்து பாருங்கள்.

5.    நாம் ஒரு கருத்தை முன் வைக்கும் போதும், எதிர் கருத்தை முன்வைக்கும் போதும் அல்லாஹ்வின் பொருத்தம் நாடி செய்தால் தேவையற்ற ஃபத்வாக்கள், மனோஇச்சையின் படியான சர்ச்சைகள் இல்லாமல் போகக்கூடும் இன்ஷா அல்லாஹ். நம் உள்ளத்தில் உள்ளதை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வுடனும் செயல்படும் இறைஞானத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்வானாக! ஆமீன்.

படித்துவிட்டு ஒரு கருத்தும் கூறாத பலருக்கு மத்தியில் எதிர்கருத்தாயிருந்தாலும் அதை பதிவு செய்யும் உங்கள் செயலை நான் ஒரு வகையில் நன்றியுடன் வரவேற்கின்றேன். அல்லாஹ்விடம் உங்களுக்காக துவா செய்கின்றேன். நீங்களும் எனக்காக துவா செய்யுங்கள்.   





உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.

29 comments:

Mail of Islam said...

நாம் ஒரு கருத்தை முன் வைக்கும் போதும், எதிர் கருத்தை முன்வைக்கும் போதும் அல்லாஹ்வின் பொருத்தம் நாடி செய்தால் தேவையற்ற ஃபத்வாக்கள், மனோஇச்சையின் படியான சர்ச்சைகள் எல்லாம் இல்லாமல் போகக்கூடும்.உண்மையான வார்த்தை

Unknown said...

மாஷா அல்லாஹ் அருமையான கட்டுரை. தெளிவான பதில்கள்.

fazhan nawas said...

எல்லாவற்றையும் என்ற சொல்லில் மறைமுகமான ஒரு விடயம் மறைந்துகிடக்கிறது.
அது இல்முல் ஹைப் என்பதாகும். எல்லாவற்றையும் என்ற விஷயம் தனித்தலைப்பில் ஆராய வேண்டிய ஒரு தலைப்பாகும்.
பெருமானார் உடன் இருந்த ஹ_தைபா யமானி றழியல்லாஹ் அன்ஹ் அவர்களுடன் தொடர்புடைய சம்பவங்கள் இதற்கான சிறந்த உதாரணங்களாகும். பிற்றபட்ட
ஸலபிஸத்தின் பாதுகாவலராக கருதப்படும் நஸ்ரூத்தின் அல் பானி தனக்கு ஏற்றால் போல் ஹதீஸை விளக்க முற்பட்டதற்கும் பெயர் இல்லாத சகோதரருக்கும் வித்தியாசம் இல்லை என்று நினைக்கிறேன். (ஹதீஸ் துறையில் புகுத்தப்பட்ட நூதனங்களை அறிய செய்யித் ஹசன் அல் ஸக்காப் அவர்களின் ஆய்வுக் கட்டுரைகளை பார்வையிட முடியும்)

rilvan said...


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

//மூஸா நபி பிர்அவ்னின் சபைக்கு செல்லும் போது பிர்அவ்னிடம் கூட சங்கையான வார்த்தைகளில் (கௌலன் கரீமா) கருத்தை எடுத்து சொல்ல உத்தரவிடுகிறது குர்ஆன். கருத்து பகிர்வு ஒரு நல்ல விஷயம். அதன் மூலம் உங்கள் நோக்கம் உணமையை எடுத்துக் கூறி எங்களை தெளிய வைப்பது என்றால் அதை கண்ணியமான முறையில் எடுத்துக் கூறுங்கள்.//

மூஸா கலீமுல்லா என்ற புகழுக்குறிய சங்கைமிகு மூஸா (அலை) அவர்களுக்கே! அல்லாஹ் இந்தகைய அழகிய கட்டளையை இடுகிறான் என்றால் அது நமக்கான படிப்பினைக்குத்தான்.

தனக்கு விளங்காத,புரியாத,அறியாத கருத்துக்களை
அவசர அவசரமாக எடுத்த எடுப்பிலேயே மறுப்பது,கேலி கின்டல் செய்வது, அவதூராகப் பேசுவது, தான் கொன்ட எதிர்மறை சிந்தனையில் மட்டும் பார்ப்பதால் அந்தக் கருத்துக்களில் உள்ள கருவை நாம்மால் ஒருபோதும் விளங்கிக் கொள்ளவே முடியாது.

“எந்த சிருஷ்டியும் தன் புறத்திலிருந்து கொடுப்பதாக நினைப்பவன் காஃபிராகிவிட்டான்” என சைய்யதினா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) கூறுகின்றார்கள். (பத்ஹுர் ரப்பானி பக்கம் 87)

யா அல்லாஹ் உன் ஹபீப் நாயகம் ரசூலே கரீம் முஹம்மது(ஸல்) அவர்களின் வழித்தோன்றலாம் சைய்யதினா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் இக்கூற்றை உன் கிருபையைக் கொண்டு எங்கள் கல்பில் நிலைத்திருக்க செய்வாயாக ஆமீன்!!!

அல்ஹாஜ் m.i.மன்சூர் அலி said...

இறைஞானம் சார்ந்த விசயங்கள்...எல்லோருக்கும் புரிவதில்லை..குறிப்பாக மூடர்களுக்கு,மேலும் இவர்கள் ஒரு தட்டையான, பரிமாணங்களற்ற வழிமுறையையே முன்னிருத்துகிறார்கள்...இது எளிதில் வழிகேட்டிற்கு அழைத்துச் சொல்லும்..எல்லாக் கேள்விகளுக்கும் பதில் ஞானமார்க்கத்தில் மட்டுமே கிடைக்கும்

HM Rashid said...

விவதங்களாலோ,விமர்சனங்களாலோ தஸவுஃப் எனும் அல்லாஹ்வுடைய ஜோதியை அனைத்துவிடமுடியாது!!!நம்முடைய ஹிருதயத்தை(தஸ்கியத்துன் நஃப்ஸ்) இதைவிட்டால் எங்குபோய் பரிசுத்தப்ப்டுத்த முடியும்???நஸீபு கெட்டவர்கள் தவிர வேறுயார் இதனை மறுக்கமுடியும்???நம்முடைய அறிவுக்கு விளங்க முடியாதவைகளை மறுப்பது,கேளிசெய்வது புத்திசாளித்தனமாகாது!!!ஏனெனில் நமக்கு அல்லாஹ்வால் கொடுக்கப்பட்ட அறிவு ஒரு எல்லைக்கு உட்பட்டதே!!!கைர்,அல்லாஹு ஹாதி!!!ரஸீத்...

nagoreismail said...

"என்னிடமிருந்து (பெற்ற) சிறு வசனமாக இருந்தாலும், பிறருக்கு சொல்லி விடுங்கள்."

- நிச்சயமாக சொல்ல வேண்டும் தான், ஆனால் அவர்கள் பக்குவம் பெற்றவர்களாக இருந்தால், ஏனெனில் பெருமானார் (ஸல்) அவர்கள் “மக்களிடம் அவர்களின் அறிவுக்கு தக்கவாறு பேசுங்கள்..” என்று சொல்லியிருக்கிறார்கள்.

அறிவுக்கு தக்கவாறு என்றால், உதாரணமாக ஒரு சோம்பேறியிடம் போய், “கலிமா சொன்னால் சொர்க்கம்” என்று சொல்ல கூடாது.. அப்ப சரி, நான் ஏன் தொழுவணும் ஜகாத் கொடுக்கணும்.. அதான் கலிமா சொன்னாலே சொர்க்கம் போயிடுவேனே என்பார்.

(இதே மாதிரி தௌஹீது வியாபாரிகளிடம் போய் எதை பற்றியுமே பேசக்கூடாது.. ஏனெனில் நமக்கு அவர்களின் தான் தாங்குற நினைப்பும் திமிரான பேச்சு நடைமுறையும் நம்மிடம் ஒட்டிக் கொள்ளும்)

ஒரு தகுதி படைத்த ஒருவர் இருக்கிறார், அவரிடம் மறைவான ஞான் செய்திகளை மறைப்பதும் ஹராமாகும் என்பது தான் நாங்கள் விளங்கி வைத்திருப்பது.

அறிவை மறைப்பது ஹராம், அதே சமயத்தில் எவருக்கு தகுதி இருக்கிறதோ அவர் புரிந்து கொள்வார்.

தெளிவான குரான் ஷரீஃபின் வசனத்தை எந்த கண்கள் வேண்டுமானாலும் காணலாம், ஆனால் தெளிவான இதயம் படைத்திருந்தால் தான் மட்டுமே அதில் புதைந்துள்ள மறைவான ஞானத்தை அறிய முடியும்.

இதனால் தான் இறைவன் குரான் ஷரீஃபில், ‘குருடாக இருப்பது கண்கள் அல்ல, இதயம் தான்.. “ என்கிறான்.

இதயம் குருடாக இல்லாதாவர்களிடம் இருக்கும் வசனங்களிலிருந்து அதன் வேரின் வேரை (root of roots)அறிந்து கொள்வார்கள் அல்லது அவர்களுக்கு விளக்கம் பெற வேண்டி வழி காட்டுதல் வழங்கப்படும் என்பது தான் எனது தாழ்மையான கருத்தாகும்.
---------------
”பிற்காலத்தில் கொடுங்கோல் ஆட்சி நடத்தகூடிய மன்னர்கள் அவர்களின் காலம், போன்றவைகளை முன்னறிவுப்பாக நபி صلى الله عليه وسلم அவர்கள் அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களுக்குச் சொல்லி இருந்தனர். அவற்றை வெளிப்படுத்தினால், ஆட்சியாளர்களால் தமக்கு ஆபத்து நேரலாம் என்பதற்காக அவற்றை..”

- கொடுங்கோல் ஆட்சியாளர்களால் தங்கள் உயிருக்கு ஆபத்து வரும் என்று பயந்தார்கள் என்று நீங்கள் சொல்வது வேதனையாக இருக்கிறது, அவர்கள் அல்லாஹ்வை தவிர யாருக்கும் பயப்படவில்லை என்பது தான் எங்களது உறுதியான கருத்தாகும். ஆகையினால் தௌஹீது வியாபாரிகள் கூறுவது போல் இதில் அவர்கள் ஆட்சியாளர்களுக்கு பயந்தார்கள் என்ற அவர்களின் யூத மனவியல் யூகத்திற்கு எனக்கு உடன்பாடில்லை





nagoreismail said...

”மக்களை ஆட்டு மந்தைகளாகக் கருதிக் கொண்டு தங்களுக்கு மட்டுமே எல்லாம் விளங்கும் என்று அகந்தை கொண்ட போலிகளின் பேச்சில் ஏமாற வேண்டாம்.”

- சரிங்க சார், நாங்க உங்க கிட்டே ஜாக்கிரதையாக ஏமாறாமல் இருக்கிறோம். மற்றவர்களையும் எச்சரிக்கிறோம். நன்றி. ஸலாம்.

Ais said...

Surah al-Furqan: 59

59. Who created the heavens and the earth and all that is between them in six Days. Then He rose over (Istawa) the Throne. The Most Gracious! Ask Him, as He is the All-Knower.

Alhamdulillah, Ya Muslimoon the tafsir is beautiful and should cause more reflection inshaAllah:

(Who created the heavens and the earth...) means, He is the Ever-Living Who never dies, He is the Creator, Sustainer and Sovereign of all things, Who by His might and power created the seven heavens with their vast height and width, and the seven earths with their great depths and density.

(in six Days. Then He rose over the Throne.) means, He is running all affairs and He decrees according to the truth, and He is the best of those who decide.

(Then He rose over (Istawa) the Throne. The Most Gracious! Ask Him, as He is the All-Knower.) meaning, find out about Him from one who knows most about Him, and follow him and take him as your example. It is known that there is no one who knows more about Allah than His servant and Messenger Muhammad , the absolute leader of the sons of Adam in this world and the Hereafter, who does not speak of his own desire, but conveys revelation revealed to him. What he says is true, and he is the leader whose decision counts; when there is a dispute, people are obliged to refer to him, and whatever is in accordance with his words and deeds is right, and whatever goes against them should be rejected no matter who says or does it.

Ais said...

இஸ&ரதத ல நமஞஞரனமர ?
(ப கள (ரயகம மஹமமத (ஸல) அவரகள மழ மன த சம தரயததககலம (ப யரக
அனபபபபடடவரகள. அவரகளகக அல&ரஹ மககள ல(ரவழ நபறலவணடம
எனபதறகரக அலகரஆரன அரள னரன . (ப யவரகளம உ&க மககள அரன வரககம
இவவ&க ல ஒரமன தன ப றநதத லரநத மரண ககம வரர அவன எத ர ல(ரககம
லதரவகள, ப ரசச ரனகள அரனதத றகம த
ரவ ரன இன லத கற ச நசனற ரகக னறரரகள
. அவரகளத வழ மரறய ரன (ரம 'ஸ4னனர' எனற அரழகக னலறரம. (ப யவரகள
இவவ&ரக வ டட மரறநத நசலலம லபரத இவவரற கற னரரகள.
'மககலள (ரன உஙகரளத நதடடத நதள வரனநதரர பரரதய ல& வ டடச நசலக னலறன
அதன இரள சழநத இரவபபகத கட படடபபகர&ப லபரல ப ரகரசம ககதரய
வ ளஙகமளவகக அவவழ ம கத நதள வரன வழ யரகம. தனரனத தரலன அழ வ ன பககம
லபரடடக நகரளளம தரத ஷடம ககவரனத தவ ர லவற எவரம இவவழ ரய வ டடம தடம
பரணட நசல& மரடடரரகள' (இபன மரஜர 43)
லமலம கற யளளரரகள '(ரன உஙகள மதத ய ல இரணட வ டயஙகரள வ டடச
நசலக னலறன . அவவ ரணரடயம ப&மரகப பறற ப ப டதத ரககம கர&நமல&ரம (
ஙகள
வழ தவற வ ட மரடடரகள , அரவதரன ஒனற அலகரஆன அடததத எனத
கடமபதத னர ன வழ மரறயரகம' எனறரரகள .
(மஸலம 2137)
(ப தலதரழர இபன மஸஊத (ரழ ) அவரகள அற வ கக னறரரகள. 'ஒர மரற (ப யவரகள
(
ணடநதரர லகரடடரன வரரநதரரகள. ப ன அகலகரடடகக வ&த இடத பறமரகப
ப&லகரடகரள வரரநதரரகள. ப னப இலதர இரககம ல(ரலகரட (லபரனறத) தரன (ரன
உஙகளககக கரடடய வழ மரறயரகம. அதறகக கறகலக இர மரஙக லம இரககம
பரரதகள ரஷததரனரடய பரரதகளரகம . அரவ ஒவநவரனற லம ஒவநவரர
ரஷததரன இரநத நகரணட அதன பககம அரழபப வ டததக நகரணடரகக னறரன
எனற கற வ டடப ப னவரம வசனதரத ஓத க கரடடனரரகள .
'( சசயமரக இத தரன எனத ல(ரரன பரரதயரகம , எனலவ இரதலய (
ஙகள
ப னபறறஙகள (இதவல&ரத) லவற பரரதகரளப ப னபறற லவணடரம. ஏநனன ல அரவ
ல(ரரன வழ ரய வ டடம உஙகரளப ப ர ததத தடதத டம. (
ஙகள (ல&ற வ
நபறலவணடநமனபதறகரக அல&ரஹ உஙகளகக இநத உபலதசதரதச நசயக னறரன.
(அலஅனஆம153 )
. எனலவ லமறபட (


நமரழ
கள
லரநத (


யவரகள அரனதத மஸலமகரளயம
அலகரஆன அலஹத
ஸ வழ ய ல&லய (டகக லவணடநமனற வலயறதத ய ரபபதடன
அரதப பறககண தத லவற வழ ய ல (டகக மறபடம லபரத ( சசயமரக அத வழ லகடடன
பககலம இடடச நசலலம எனறம எசசர தத ரபபரத அற ய மடக னறத.

புல்லாங்குழல் said...

அன்பு/ள்ள குலாம் பாய்,

நீங்கள் பதிவிட்டது விளங்கவில்லை. ஆயினும் உங்கள் மெஸேஜின் அடிப்படையில் இந்த பதிலை பதிகின்றேன்:

குர்ஆன் ஹதீஸ் தான் நமக்கு வழிகாட்டி. ஆனால் அதன் விளக்கங்களை - வழிகாட்டலை பெறும் வழி என்ன?

இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களான குர்ஆன், ஸுன்னாவின் அடிப்படையில் தோன்றி வளர்ந்தது, ஹதீஸ், தப்ஸீர், பிக்ஹ், இல்முல் கலாம் போன்ற ஏனைய இஸ்லாமிய கலைகள் போன்று இஸ்லாத்தின் நிழலில் உருவாகிய தஸவ்வுப் பலராலும் தவறாகப்புரியப்பட்ட ஒரு கலையாக விளங்குகின்றது.

தொழுகை பற்றிக் குறிப்பிடும் குர்ஆன், ருகூஃ, ஸுஜுது போன்று புறக்கிரியைகள்பற்றி மட்டுமன்றி உள்ளத் தோடு தொடர்புடைய இறையச்சம், பணிவு, உளத்தூய்மை ஆகிய அம்சங்கள் பற்றியும் குறிப்பிடுகின்றது.

நோன்பு, ஹஜ் போன்ற வணக்கங்களோடுதொடர்புடைய கிரியைகள் அனைத்தையும் பற்றிக் குர்ஆன் விளக்கும் போது அவற்றில் உள்ளடங்கியுள்ள, மனிதனின் உள்ளம் ஆத்மாவோடுதொடர்புடைய அம்சங்களையும் விளக்குகின்றது.

இது போன்ற அனைத்து வணக்கங்கள், கிரியைகள் பற்றி விளக்கும்போது அவற்றுடன் தொடர்புடைய உளநிலை பற்றியும் குறிப்பிடுகின்றது. புகஹாக்கள் என்னும்சட்ட அறிஞர்கள் இந்தப் புறக் கிரியைகளோடு தொடர்புடைய சட்டவிதிகளை குர்ஆன் ஸுன்னாவின்அடிப்படையில் விளக்கிய கலையை பிக்ஹ் உள்-ளாஹிர் புறம் சார்ந்த அல்லது வெளிப்படையானபிக்ஹ் என நாம் அழைத்தால் அககிரியைகளோடு தொடர்புடைய உள்ளம் அதன் தன்மை, செயல்பாடுகள், உளத்தூய்மை, பரிசுத்தமான எண்ணம் ஆகியவற்றுடன் தொடர்புடைய விதிகளை விளக்கும் கலையை பிக்ஹுல் பாதின் - மறைவான பிக்ஹ்எனக் குறிப்பிடலாம். இந்த பிக்ஹ் பாதினையே நாம் தஸவ்வுப் என அழைக்கின்றோம்.

நன்றி : கலாநிதி சுக்ரி

ஒரு வேளை குர்ஆன், ஹதீஸிலிருந்து நேரடியாக உங்களால் விளக்கம் பெற முடியம் என்றால் ஒழு செய்வது எப்படி? என்பதை நீங்களாகவே கூற முடியுமா என பாருங்கள். அதுவே முடியாது. இந்த நிலையில் நம் அகீதாவின் அடிப்படையான தவ்ஹீது, ஷிர்க் இவைகளைப்பற்றிய விளக்கங்களை அறியும் வழியென்ன? நபிவழியில் சஹாபாக்கள், தாபியீன்கள், தாபாத்தாபியீன்கள் என இப்படி சங்கிலி தொடராக இந்த இல்மை அடைந்த வலியே முர்ஷித்களின் வழிகாட்டலே தஸவ்வ்ஃபு..
(நபியே!) யாரை அல்லாஹ் வழிக்கேட்டில் விட்டு விட்டானோ அவருக்கு நேரான வழியினை அறிவிக்கக் கூடிய வலியே முர்ஷிதை நீர் காணவே மாட்டீர்.(18:17) என்கிறது குர்ஆன். சிந்திக்க வேண்டுகின்றேன்.

Ais said...

அஸ்ஸ்லாமு அலைக்கும்
நீங்கள் சொல்லுவது போல் எல்லாம் குரனில் இல்லை ஆனால் அத்ற்கான விளக்கம் எல்லாம் ஆதர்வ்பூர்வமன ஹதிஸில் உள்ளது ஆதலால் நமக்கு குரான் ஹதிஸ் இரண்டும் போதும்

புல்லாங்குழல் said...

அன்புள்ள குலாம் காதர்,
அடிப்படையில் நீங்களும் நானும் வெவ்வேறு School of thoughtsன் அடிப்படையில் குர்ஆன், ஹதீஸை விளங்கிக் கொண்டவர்கள்.

சகோதரி அஸ்மாவுக்கு அளித்த பதில்களில் உங்கள் கேள்விக்கான பதில் இருக்கிறது. சுட்டி இதோ:

அன்பு சகோதரி அஸ்மாவுக்கு!
http://onameen.blogspot.com/2012/06/blog-post.html

நீங்கள் சுட்டி காட்டும் விசயங்களை
ஹஸ்னுல் பன்னா, அப்துல் காதர் அவ்தா, ஸைனப் அல் கஸ்ஸாலி முதலிய இஹ்வான்களின் புத்தகங்கள்.

இப்னு தைமிய்யா அவர்களின் வசீலா தேடுவதன் தெளிவான சட்டங்கள்.(அரபியில்:சிராத்தல் முஸ்தகீம்)

அப்துல் வஹாப் நஜதியின் கித்தாபுத் தவ்ஹீது முதலிய நூல்களையும்,

உங்கள் பார்வையில் படித்தறிந்த பின் தான் நான் சூஃபியாக்களின் ஆன்மீக வழிகாட்டலை பெற்றேன்.

இன்றும் கூட தவ்ஹீது & ஷிர்க் பற்றி யார் எழுதினாலும் படிப்பது என் வழக்கம். அவர்களின் புரிதலின் போதமையை (inadequacy ) உணரும் போது யஅல்லாஹ்!, என் போன்றவர்களுக்கு ஹக்கை ஹக்காக உணரும் பாக்கியம் தந்தாயே என கண்ணீர் மல்க ஓர் இறைக்கு சஜ்தா செய்வது என் வழக்கம். அல்ஹம்துலில்லாஹ்.

இளம் வயதில், யாஅல்லாஹ் நான் இருப்பது நேர்வழியானால் என்னை அதில் நிலைக்கச் செய்வாயாக. தவறான வழியானால் என்னை அதை விட்டும் காத்து நீ நேர்வழிகாட்டிய முன்னோர்களான நபிமார்கள் வழிவந்த ஷுஹதாக்கள், சாலிஹீன்கள், சித்திக்கீன்களின் பாதையில் சேர்ப்பாயாக! என துவா கேட்பது வழக்கம்!.

அல்லாஹ் வஹபியத்தான தன் அருட்கொடையால் சூஃபியாக்களின் நேர் வழியை எனக்கு பாக்கியமாக்கினான், அல்ஹம்துலில்லாஹ்.

நீங்களும் அல்லாஹ்விடம் துவா செய்யுங்கள். நம் அனைவருக்கும் நேர்வழிகாட்ட அல்லாஹ் போதுமானவன்.

அன்தல் ஹாதி அன்தல் ஹக்கு. லைசல் ஹாதி இல்லாஹு.

பின் குறிப்பு : என் வலைத் தளத்தில் உள்ள குர்ஆன், ஹதீஸ் வழியான தவ்ஹீது விளக்கங்களையும் கொஞ்சம் சிரமம் பாராமக் படித்து ஆய்ந்து பார்க்க அன்புடன் வேண்டுகின்றேன்.

Ais said...

நேர்வழி எது? (திருக்குர்ஆன் விளக்கம்)

وَأَنَّ هذا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ ولا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عن سَبِيلِهِ 6:153

‘இதுதான் எனது நேரான வழியாகும், இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்ற வேண்டாம்! (பலவழி செல்வது) அவனுடைய ஒரே வழியை விட்டும் உங்களை அகற்றி விடும்!’ (அல்குர்ஆன் 6:153)

நபி (ஸல்) அவர்கள் இந்த வசனத்தை கீழ் காணும் ஹதீஸில் விளக்குகிறார்கள்.

حدثنا أبو سَعِيدٍ عبد اللَّهِ بن سَعِيدٍ ثنا أبو خَالِدٍ الْأَحْمَرُ قال سمعت مُجَالِدًا يَذْكُرُ عن الشَّعْبِيِّ عن جَابِرِ بن عبد اللَّهِ قال كنا عِنْدَ النبي فَخَطَّ خَطًّا وَخَطَّ خَطَّيْنِ عن يَمِينِهِ وَخَطَّ خَطَّيْنِ عن يَسَارِهِ ثُمَّ وَضَعَ يَدَهُ في الْخَطِّ الْأَوْسَطِ فقال هذا سَبِيلُ اللَّهِ ثُمَّ تَلَا هذه الْآيَةَ وَأَنَّ هذا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ ولا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عن سَبِيلِهِ

‘நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்த போது, ஒரு நேர்கோடு வரைந்தார்கள். பிறகு அந்தக் கோட்டுக்கு வலது புறமாக இருகோடுகளையும், இடது புறமாக இரண்டு கோடுகளையும் வரைந்தார்கள். பின்னர் நடுவில் உள்ள நேர்கோட்டில் தமது கையை வைத்துக் கொண்டு, இது தான் இறைவனின் நேரான வழியாகும் என்று கூறி விட்டு, ‘இதுதான் எனது நேரான வழியாகும், இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்ற வேண்டாம்! (பலவழி செல்வது) அவனுடைய ஒரே வழியை விட்டும் உங்களை அகற்றி விடும்!’ (அல்குர்ஆன் 6:153) என்ற வசனத்தையும் ஓதிக் காட்டினார்கள்’ என்று ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இப்னுமாஜா 11, அஹ்மத் 4142,4437,15312, தாரிமி 202, இப்னுஹிப்பான் 6,7 ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.

புல்லாங்குழல் said...

அன்புள்ள சகோ. குலாம் காதருக்கு,

எது அந்த நேர்வழி என்பதை குர் ஆன் இப்படி கூறுகின்றது:

நபியே!) நீர் கூறும்: "இதுவே எனது (நேரான ) வழியாகும் நான் உங்களை இறைவனின் பக்கம் அழைக்கின்றேன். அகப்பார்வையின் மீதே நான் இருக்கின்றேன். என்னைப் பின்பற்றியவர்களும். இறைவன் மிகத் தூயவன். மேலும் (அந்த அகப்பார்வையினால்) நான் இணைவைப்பவர்களில் ஒருவனல்ல". (12:108)

அந்த நபிவழி அகப்பார்வை பற்றிய சுட்டி:

அல் குர்ஆனின் ஒளியில் அகப்பார்வை
http://onameen.blogspot.com/2011/12/blog-post_11.html

Ais said...

12:108. (நபியே!) நீர் சொல்வீராக! “இதுவே என்னுடைய (நேரிய) வழியாகும்; நான் அல்லாஹ்வின் பால் (உங்களை) அழைக்கின்றேன்; நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம்; அல்லாஹ் மிகத் தூய்மையானவன்; ஆகவே, அவனுக்கு இணைவைப்போரில் நானும் ஒருவனல்லன்.

Ais said...

நீங்கள் குறிப்பிட்ட‌ வ‌ச‌ன‌த்தில் அக‌பார்வை என்ப‌து இல்லை ,ஆனால் 12:108. (நபியே!) நீர் சொல்வீராக! “இதுவே என்னுடைய (நேரிய) வழியாகும்; நான் அல்லாஹ்வின் பால் (உங்களை) அழைக்கின்றேன்; நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம்; அல்லாஹ் மிகத் தூய்மையானவன்; ஆகவே, அவனுக்கு இணைவைப்போரில் நானும் ஒருவனல்லன்

Ais said...

அக‌பார்வை என்ன‌ என்ப‌தை தெளிவாக‌ குரான் ஹ‌திஸ் மூல‌ம் விள‌க்க‌வும்

புல்லாங்குழல் said...

அன்புள்ள குலாம் பாய்,
عَلَى بَصِيرَةٍ أَنَاْ وَمَنِ اتَّبَعَنِي “அகப்பார்வையின் மீதே நான் இருக்கின்றேன். என்னை பின்பற்றியவர்களும்” (12:110)

இந்த வசனத்தில் வரும் 'பஸீரத்' என்பதற்கு அகப்பார்வை என்பது பொருள். அதாவது ஞானம் கொண்டு பார்க்கும் பார்வை.

வஹியின் மூலம் வழங்கப்பட்ட குர்ஆனிய அத்தாட்சிகளைக்(ஆயத்களைக்) கொண்டு பிரபஞ்ச அத்தாட்சிகளை நாம் முன்னோக்க கூடிய அகவிழிப்புணர்வு பார்வையே அகப்பார்வை.

அகப்பார்வை பற்றி புல்லாங்குழலில் உள்ள கட்டுரைகளை ஒரு முறை வாசித்து பாருங்கள். மேலும் விளக்கம் வேண்டின் உங்கள் முகவரி தந்தால் “அகப்பார்வை” புத்தகம் அனுப்பி வைக்கின்றேன். வஸ்ஸலாம்.

Ais said...

عَلَى بَصِيرَةٍ أَنَاْ وَمَنِ اتَّبَعَنِي “அகப்பார்வையின் மீதே நான் இருக்கின்றேன். என்னை பின்பற்றியவர்களும்” (12:110

please check above ayat is right ?

புல்லாங்குழல் said...

நான் முந்திய பதிலில் கூறியிருப்பது போல ஆயத் எண் 12:108 தான். 12:110 என்பது தவறு. சுட்டிகாட்டியதற்கு நன்றி!.

ஆயத் 12:108

நபியே!) நீர் கூறும்: "இதுவே எனது (நேரான ) வழியாகும் நான் உங்களை இறைவனின் பக்கம் அழைக்கின்றேன். அகப்பார்வையின் மீதே நான் இருக்கின்றேன். என்னைப் பின்பற்றியவர்களும். இறைவன் மிகத் தூயவன். மேலும் (அந்த அகப்பார்வையினால்) நான் இணைவைப்பவர்களில் ஒருவனல்ல". (12:108)

shuaib said...

அஸ்ஸலாமு அலைக்கும்
நபியே!அவர்கள் விளங்கும் பொருட்டு விளக்கங்களை சொல்லுங்கள் என்று வல்ல நாயன் சொன்னான்.உங்கள் சேவையை அல்லாஹ் பொருந்தி கொண்டு,அஹக்கண் குருடனாகவும்,மறதியிலும் இல்லாமல் நம் அனைவர்களையும் பாதுகாப்பானக!!!!
NagoreShuaib

Ais said...

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர்.

அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக் கொண்டு),முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே?நாம் எங்கே என்று சொல்லிக் கொண்டனர்.

அவர்களில் ஒருவர், (இனிமேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுது கொண்டே இருக்கப்போகிறேன்என்றார்.

இன்னொருவர், நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன் என்று கூறினார்.

மூன்றாம் நபர் நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒரு போதும் மணமுடித்துக் கொள்ளமாட்டேன் என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்களிடம்) வந்து, இப்படி இப்படியெல்லாம் பேசிக் கொண்டது நீங்கள்தாமே! அறிந்துகொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன்,உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோஅவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று சொன்னார்கள். (புகாரி -5063 )

மேற்கண்ட செய்தி உணர்த்தும் தகவல் என்ன? மூன்று பேர் வருகிறார்கள் ஒருவர் இரவு முழுவதும் தொழுது கொண்டே இருக்கப் போவதாக சொல்கிறார். இரண்டாவது நபர் ஒரு நாள் கூட விடாமல் காலம் முழுவதும் நோன்பு நோற்கப் போகிறேன் என்கிறார். மூன்றாவது நபரோ தான் திருமணமே செய்து கொள்ளாமல் பெண்களை விட்டும் ஒதிங்கியிருக்கப் போவதாக சொல்கிறார்.

சூபியாக்கள் சொல்வதைப் போல் ஒரு நிலை இஸ்லாத்தில் இருக்கும் என்றால் நபியவர்கள் குறிப்பிட்ட நபித் தோழர்களின் கருத்துக்களை வரவேற்றுப் பாராட்டியிருக்க வேண்டும்.

ஆனால் நபியவர்களோ அதனை கண்டிக்கிறார்கள். கண்டிக்கும் நபியவர்கள் சொன்ன வார்த்தை மிக முக்கியமாக கவணிக்கத் தக்கதாகும். உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன்,உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். என்று சொல்லி விட்டு என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோஅவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று தெளிவாக இப்படிப்பட்டவர்களுக்கு உரிய மார்க்கத் தீர்ப்பையும் நபியவர்களே வழங்கிவிடுகிறார்கள்.

அன்பின் இஸ்லாமி நெஞ்சங்களே!

ஷாதுலிய்யா, காதிரிய்யா, நக்ஷபந்திய்யா என்று எந்த பெயரை வைத்துக் கொண்டாலும் சரி எந்த நாட்டில் இவர்கள் வாழ்ந்தாலும் சரி இவர்களின் கொள்கைக்கும், இஸ்லாத்தின் அடிப்படைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை இவர்கள் இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றும் இந்த வழிகேட்டிற்கு மறுமையில் நிச்சயம் மாட்டிக் கொண்டு கைசேதப் படுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

இப்படிப்பட்ட வழி கெட்ட கொள்கைகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவோமாக.
Thanks to Rasminmisc

புல்லாங்குழல் said...

சகோ குலாம்,

மீண்டும் வசைபாடலில் இறங்கி விட்டீர்கள் என்பதால் பெரியோர்களை அவமதிக்கும் உங்கள் மற்ற கேள்விகளை வெளியிடவில்லை.மேலும் அவற்றுக்கான பதில் இதிலேயே இருக்கிறது.

ஆன்மீக குரு சகவாசத்தின் நோக்கம்
http://onameen.blogspot.com/2011/10/blog-post_19.html

என்ற இந்த இடுகையை பார்க்கவும்

ஆன்மீக குரு சகவாசத்தின் நோக்கம் என்ன? அனுமதிக்கபட்ட உலக இன்பங்களை துறக்கும் துறவறமா? என்றால் பதில் நிச்சயமாக இல்லை என்பது தான்.

இறைனிடம் லட்சக்கணக்கில் வேண்டுமென பிட்சைக்காரத்தனமாக கேட்காமல் கோடி கணக்கில் வேண்டுமென கோரிக்கை வையுங்கள். நம் அல்லாஹ் பிச்சைகாரனல்ல சர்வலோக சக்கரவர்த்தி என்பார்கள் என் ஆன்மீக குருநாதர் ஃபைஜி ஷாஹ் நூரி (ரஹ்) அவர்கள்.

ஆன்மீகத்தின் நோக்கம் தக்வா,தவ்ஹீத் அதற்கான பாதை இஹ்சான். பார்வையில்லாதவர்களுக்கு நிறங்களை விளக்க முடியாது. நீங்கள் கண்களை இறுக்க மூடிக் கொண்டு நிறங்களை மறுப்பவர் என நம்புவதால் தான் அல்லாஹ் உங்களுக்கு நேர்வழியைத் தருவான் என ஆசை வைத்து இறுதியாக இந்த பதிலை வைக்கின்றேன்.

R.Puratchimani said...

// Gulamkader H said...

//சூபியாக்கள் சொல்வதைப் போல் ஒரு நிலை இஸ்லாத்தில் இருக்கும் என்றால் நபியவர்கள் குறிப்பிட்ட நபித் தோழர்களின் கருத்துக்களை வரவேற்றுப் பாராட்டியிருக்க வேண்டும்.

ஆனால் நபியவர்களோ அதனை கண்டிக்கிறார்கள். //

ஐயா உங்கள் புரிதல் தவறு.

நபியவர்கள் எதை கண்டிக்கிறார் பாருங்கள்.

ஒருவர் தொழுகை மட்டுமே செய்வேன் என்கிறார். எனவே அதை கண்டிக்கிறார்.
ஒருவர் நோன்பு மட்டுமே செய்வேன் என்கிறார். எனவே அதை கண்டிக்கிறார்.
ஒருவர் நான் பெண்களை விட்டு விலகப்போகிறேன் என்கிறார்.எனவே அதை கண்டிக்கிறார்.

ஆனால் நபியவர்கள் என்ன சொல்கிறார் பாருங்கள்.

// நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன்,உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். //

நபியவர்கள் என்ன சொல்கிறார் எனில் ஒரு செயலை "மட்டுமே" செய்யாதிர்கள் என்னைப்போல மூன்றையும் செய்யுங்கள் என்கிறார்.
அதாவது தொழுகை "மட்டுமே" செய்வது தவறு, நோன்பு "மட்டுமே" செய்வது தவறு.

இதன் மூலம் உங்களுக்கு நிச்சயம் புரியும் நபியவர்கள் எதை கண்டிக்கிறார் என்றும் எதை வரவேற்கிறார் என்றும்.
நபியவர்கள் தொழுகையையும் செய்ய சொல்கிறார், நோன்பையும் கடைபிடிக்க சொல்கிறார்கள், திருமணம் முடித்தும் வாழ சொல்கிறார்கள்.
பிற ஹதீஸ்கள் மூலம் அவர் அகப்பார்வை மீதும் கவனம் செலுத்த சொல்கிறார் எனபது உங்களுக்கு புரியும்.
ஆனால் பெரும்பாலான் இசுலாமியர்கள் ஆகப்பார்வை பற்றி அக்கறை கொள்வதே இல்லை.
தொழுகையின் மறைமுக நோக்கமே அகப்பார்வை நோக்கி இட்டு சொல்வது தான்.அதைதான் சுபி ஞானிகள் செய்கிறார்கள். இசுலாம், ஈமான், இசான் என்பதன் பொருளை உள்வாங்க முயலுங்கள். உங்களுக்கு பல உண்மைகள் கிடைக்கும். இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக .

ஐயா ஒ.நூருல் அமீன் நான் சொல்வது சரிதானே? தவறு இருந்தால் திருத்துங்கள் நன்றி.

R.Puratchimani said...

ஐயா ஒ.நூருல் அமீன் உங்கள் தளத்தை மீண்டும் கண்டத்தில் மிக்க மகிழ்ச்சி (ஒருமுறை படித்து விட்டு பிறகு உங்கள் தளத்தை தேடி கிடைக்கவில்லை).

உண்மையான இசுலாமை பல இசுலாமியர்கள் புரிந்து கொள்ளாதது தான் இன்று இசுலாம் சந்திக்கும் மிகப்பெரிய சவால்.

அடிப்படைவாதிகளை ஆன்மீகவாதிகளாக மாற்றுவதன் மூலம் மட்டுமே இசுலாமை அமைதி மார்க்கமாக புத்துணர்வு ஊட்ட முடியும். அது உங்களை போன்ற ஆன்மீகவாதிகளால் மட்டுமே சாத்தியம். உங்கள செயலை பல அடிப்படைவாதிகள் விமர்சித்தாலும் தொடர்ந்து எழுதிக்கொண்டும் வழிகாட்டி கொண்டும் இருங்கள்.
இறைவன் விரும்பினால் நாம் ஒருநாள் சந்திப்போம்.
என்றும் அன்புடனும் இறைப்பற்றுடனும்
இராச.புரட்சிமணி

புல்லாங்குழல் said...

ஆன்மீகம் தான் ஒரு மார்க்கத்தின் அடிப்படை. ஆகவே அடிப்படைவாதிகளால் அமைதியே நிலவும்.

R.Puratchimani said...

//ஒ.நூருல் அமீன் said...
ஆன்மீகம் தான் ஒரு மார்க்கத்தின் அடிப்படை. ஆகவே அடிப்படைவாதிகளால் அமைதியே நிலவும்.//

:) ஐயா, வாகபிய இசுலாமியர்களைத்தான் நான் அடிப்படைவாதிகள் என்று குறிப்பிட்டேன்.என்னைப்பொருத்த வரை இவர்கள் இசுலாமை மட்டுமே புரிந்து கொள்பவர்கள்...ஈமானையும் ஈசானையும் அல்ல.
நன்றி

புல்லாங்குழல் said...

புரட்சி மணி ஐயா சொன்னது அழகான ஒரு விளக்கம். நண்பர் குலாம் வணக்கம் என்ற பெயரில் உலகை துறக்கும் வாழ்வியல் நபிவழியல்ல என்பதை முன் வைக்கின்றார். இருவர் சொல்வதும் சரிதான்.

இதில் வணக்கம் என்பதை வெளிரங்க சடங்காக பார்க்கும் பார்வை தான் குலாமின் குழாம் செய்யும் மகத்தான தவறு.

வணக்கம் என்பதன் உயிர் இஹ்சான். இஹசான் என்றால் என்ன?

• நீ வணங்குவதாக இருக்கும்

• அல்லாஹுவை அவனைப் பார்ப்பது போன்று,

• அப்படி (அகப்பார்வையினால்) நீ அவனைப் பார்ப்பவனாக ஆகியிருக்கவில்லையானால்,


• அவன் உன்னை நிச்சயமாக பார்த்தவனாகவே இருக்கின்றான்.”

இது (புகாரி, முஸ்லிம் நபிமொழி தொகுப்பில் உள்ள) பிரபலமான நபிமொழி.

இந்த நபிமொழி தான் ஆன்மீகத்தின் அடிப்படை. இதன் அடிப்படையில் பார்த்தால் இஹ்சானிய நிலையில் இருக்கும் இறை நம்பிக்கையாளனின் எல்லா நிலைகளும் வணக்கமேயாகும். தொழுகை, நோன்பு முதலிய கட்டாய கடமைகளுடன் அவன் ஆகுமான உணவை உண்பதும் வணக்கம், அன்பான மனைவியுடன் இல்லறம் கொள்வதும் வணக்கம். அலுவலகத்தில் உழைப்பதும் வணக்கம், அன்பு குழந்தைகளுடன் கொஞ்சி மகிழ்வதும் வணக்கம். இப்படி நபி (ஸல்) காட்டித் தந்த முறையில் வாழும் வாழ்வின் எல்லா நிலைகளுமே வணக்கம் தான். வாழ்வின் முழுமையிலும் சிருஷ்டிகளின் மூலம் அவன் முன்னோக்குவது இறைமையே.

இதை புரட்சிமணி ஐயா புரிந்து கொண்டிருப்பது பாராட்டுக்குரியது. நன்றி ஐயா!