(நபியே!) உம்முடைய ரப்பு (மனித இனத்தின் ஆதி பிதாவான) ஆதமின் மக்களாகிய அவர்களது (தந்தையின் )முதுகுகளிலிருந்து, அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக்கி வைத்த போது, ( அவர்களை நோக்கி,) “நான் உங்கள் ரப்பு அல்லவா?” (என்று கேட்டான்) ஆம். “நாங்கள் (அதற்கு) சாட்சி கூறுகின்றோம்” என்று அவர்கள் சாட்சி கூறியதை (நீர் அவர்களுக்கு) நினைவூட்டும், ஏனென்றால் “நிச்சயமாக நாங்கள் இதனை விட்டும் மறதியாளர்களாக இருந்து விட்டோம்” என்று மறுமை நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்காக. (7:172)