தோழமையுடன்

Monday, September 24, 2012

நாகூர் ஹனிபாவை நெகிழ வைத்த மதுரை ஆதீனம்


பக்ரீத்து பாய் வீட்டு பிரியாணி நம் வீட்டிற்கும் நம் வீட்டு தீபாவளி பலகாரம் பாய் வீட்டுக்கும் பரிமாற்றப்பட்ட காலங்கள் ஏக்கத்திற்குரிய இறந்த காலங்களாகி விட்டன.”என்று சகோ. ராஜாராம் கோமகன்  தன் முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருந்த ஆதங்கத்தை ஆபிதீன் பக்கங்களில்  கண்டேன்.


 இன்றைய இந்த மோசமான சமூக சீரளிவிற்கு தனிமனிதனாகிய நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் காரணம் என்ற குற்ற உணர்வும் அதன் மீட்சிக்கு நாம் செய்ய வேண்டியது என்ன? என்ற சிந்தனையும் மனதில் ஓடியது. சற்றே அந்த வேதனைக்கு ஒத்தடமாக அமைந்த இந்த பதிவை படித்ததும் இது போன்ற செய்திகள் அதிகமானவர்களை சென்றடைய வேண்டும் என எண்ணம் எழுந்தது. அந்த நோக்கத்துடன் எளிமையாகவும், நகைசுவையாகவும் எழுதும் கவிஞர் அப்துல்கையூமின்  “ நாகூர் மண்வாசனை” பக்கத்திலிருந்து இந்த பதிவை நன்றியுடன் மீள்பதிவு செய்துள்ளேன்.

Sunday, September 16, 2012

மடமையின் தந்தைகள் மண்ணாய் போகட்டும்!

வழக்கம் போல் தனிதனி குழுவாய் தான்

என்றாலும்

எல்லா முஸ்லிம்களும் கருத்தொறுமித்து

பெருமானாரின் மேலுள்ள காதலை காட்டும் இந்நாளில்

எங்கள் வேதனை நிஜம்,

எங்கள் கோபம், கைசேதம் எல்லாம் நிஜமென நீ அறிவாய்!


உன்னையே வணங்குகின்றோம்!
உன்னிடமே உதவி தேடுகின்றோம்!.


Wednesday, September 12, 2012

ஆன்மீகத்தை வசைபாடும் பெயரில்லாத உங்களுக்கு!

 மாற்று கருத்துகளை வைக்கும் பெயர் வெளிடாத சகோதருக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

முதலில் ஒரு சின்ன வேண்டுகோள்: குர்ஆன், ஹதீஸின்  பொருளை விருப்பம் போல திரித்து கூறி இஸ்லாமியர்களிடையே கொள்கை குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு போலிபெயர்களில் சிலர் உலாவி வரும் நேரத்தில் உங்கள் இஸ்லாமிய அடையாளத்தை - குறைந்தபட்சம் பெயர், மின்னஞ்சல் என்ற அளவிலாவது வெளியிடுங்கள். நீங்கள் வலைத் தளம் வைத்திருப்பவர் என்றால் அதன் முகவரியை தருவது இன்னும் சிறப்பு.

Thursday, September 6, 2012

முரீது எனும் ஆன்மீகப் பயணி Vs. ஷைத்தான்

 நீங்கள்லாம் முரீது முரீதுன்னு சொல்றீங்களே  அதுக்கு என்ன அர்த்தம் என்பது ஒரு FAQ (Frequently Asked Question).
 
முரீது என்ற வார்த்தை இராதத் என்பதிலிருந்து வந்தது. இராதத் என்றால் நாட்டம் என பொருள்.

முரீது என்றால் நாடக் கூடியவர் ன்பது பொருள்.

எதை நாடக் கூடியவர்?

செய்யதுனா கௌதுல்அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜெய்லானி(ரலி) அவர்கள் நாடக்கூடியவரை குர்ஆனில் மூன்று வகையாக கூறப்பட்டிருக்கிறது என வகைப்படுத்துகிறார்கள்.