தோழமையுடன்

Saturday, August 18, 2012

என் இதயமதின் இன்னுயிரே செய்யிதே நூரி!

ஹஜ்ரத் நூரிஷாஹ் (ரஹ்)
 எந்த சிருஷ்டியும் தன் புறத்திலிருந்து கொடுப்பதாக நினைப்பவன் காஃபிராகிவிட்டான்  என சைய்யதினா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) கூறுகின்றார்கள். (த்ஹுர் ரப்பானி பக்கம் 87)

அதனால் தான் 

"அன்தல் ஹாதி அன்தல் ஹக்கு லைஸல்  ஹாதி இல்லாஹு"  என  அல்லாஹ்வைத் தவிர வழிகாட்டி இல்லை என்ற ஏகத்துவ பண் பாடினார்கள் ஆன்மீக நாதர்கள். 

 "யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட நாடி விட்டானோ அவர்களுக்கு நேர்வழியை காட்டும் வலிமார்களை (நபியே!) நீங்கள் பெற்றுக் கொள்ள மாட்டீர்கள்" என்கிறது இறைவேதம். 

அல்லாஹ்வே வலிமார்கள் மூலம் நேர்வழியில் செலுத்தும்  ஏகத்துவ மெய்ஞானத்தை அறிய இங்கே சொடுக்கி உள்நுழையுங்கள்.




இது மறைந்தும் மறையாமல் எங்கள் நெஞ்சங்களில் நிறைந்து அல்லாஹ், ரஸூலின் நேசத்தின் பால் எம்மை செலுத்திக் கொண்டிருக்கும் ஹஜ்ரத் நூருல்மஷாயிக் நூரிஷாஹ் (ரஹ்) அவர்களின் நூரியா ஞானவழித்தொடரைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம்.
  
இறைவன் தன் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மூலம் உலகிற்கு அளித்த புனித தீனை பாதுக்காக்க உலகெங்கும் தன் நேசர்கள அனுப்பிக் கொண்டே இருக்கின்றான். குர்ஆனுடைய ஓதும் முறைகளை ஏழுகாரிகள் மூலமாகவும், ஃபிக்ஹ் சட்ட திட்டங்களை நான்கு இமாம்கள் மூலமாகவும், ஹதீஸ்களை ஸிஹாஹ் சித்தாவின் ஆசிரியர்களான ஆறு இமாம்கள் மற்றும் முஹத்திஸ்கள் எனும் ஹதீஸ்கலை வல்லுனர்கள் மூலமாகவும் இன்று வரை அவனே பாதுகாத்து வருகின்றான்.


அது போல அண்ணலாரின் புனித இதயத்தில் பொதிந்திருந்த இறைஞானத்தை அலி(ரலி) அவர்களைக் கொண்டும், அவர்களின் மாணவர் ஹஸன் பசரி(ரலி) அவர்களைக் கொண்டும் வெளிப்படுத்திய இறைவன் வரிசையாக ஆயிரக்கணக்கான் வலிமார்களைக் கொண்டு இது வரை பாதுகாத்து வருகின்றான். இந்த ஞானவழி பாதை தரீக்கா எனும் பெயரில் அறியப்படுகின்றது.

இந்த தரீக்கா எனும் வலிமார்களின் ஞானவழி பாதையில் புழங்கப்படும் ஷஜ்ரா, ஸில்ஸிலா எனும் வார்த்தைகளை சுருக்கமாக அறிந்து கொள்வது இந்த கட்டுரையை விளங்க உதவும்.

மூஃமீன்களின் உயிரினும் மேலான, சர்வ கோடி சிருஷ்டிகளின் ரகசிய பெட்டகம் - ஹக்கீகத்துல் ஹகாயிக், ஈருலகையும் சிருஷ்டிப்பதற்குண்டான காரண புருஷர் பாயிஸே ஈஜாபே கௌனைன் பெருமானாரின் ரவ்லா ஷஃரீபின் வாயிலில் சவுதி ஆட்சியாளர் அப்துல்லா.
'ஷஜ்ரா' என்ற அரபி வார்த்தைக்கு மரம் என்று பொருள். ஒரு விதையிலிருந்து கிளம்பிய  ஒரு சிறு தண்டு பல் கிளைகளாக பிரிந்து பெரும் மரமாய் விளைந்து நிற்கிறது. அது போல நபி (ஸல்) அவர்களிலிருந்து தொடங்கிய ஞானவழி பல கிளைகளாக பிரிந்து பல்லாயிரம் கனிகளை ஈன்று பெரும் மரமாய் நிற்கிறது. இதையே 'ஷஜ்ரா' என்று கூறுகின்றார்கள்.

'ஸில்ஸிலா' என்றால் சங்கிலி என்று பொருள். பெருமானார்(ஸல்) அவர்களுடைய செய்தி, ஒருவர் பின் ஒருவராக மாறி மாறி இடையில் அறுந்து விடாமல் சங்கிலித் தொடர் போல் நம் வரை வந்து சேர்கிறது. இதையே ஸில்ஸிலா என்ரு கூறுவர். ஹதீஸ் கலையில் இதை 'ஸனது' என்று கூறுவார்கள்.


29:69   وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا َ

29:69. "மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்" என்று இறைவன் கூறுகின்றான்.ஒரு வழி என்று கூறவில்லை. பல வழி என்று கூறுகின்றான். 

நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ் பல வழிகளில், பல ஸனதுகளில் நம்மை வந்து சேர்வது போல இறைஞானமும் பல வழிகளில், பல ஸனதுகளில் நம்மை வந்து சேர்ந்திருக்கிறது.  இறைஞான பாடத்தின் அடிப்படை ஒன்றாக இருந்தாலும் கற்பிக்கும் வழிமுறைகளைப் பொருத்து இந்த ஞான வழித் தொடர் காதிரியா, சிஷ்தியா, சுஹ்ரவர்த்தியா, நக்‌ஷபந்தியா, ஷாதுலியா, தபகாத்தியா,அக்பரியா, உவைஸியா என பல்வேறு  ஞானபாதைகளாக பயிற்றுவிக்கப்படுகின்றது. இவற்றுல் குறிப்பாக சைய்யிதினா குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல்காதர் ஜெய்லானி (ரலி) அவர்களின் காதிரியா ஸில்ஸிலா மற்றும் காஜா முயீனுத்தீன் சிஷ்தி அஜ்மீரி ( ரலி) அவர்களின் மூலம் பிரபலமான சிஷ்தியா  ஞானபாட்டையின் வழியில் வந்தது தான் எங்கள் சிஷ்தியுல் காதிரி ஆன்மீகப்பாதை.

முந்தைய காலத்தில் நிஜாமுத்தீன் மஹ்பூபே இலாஹி அவர்களை கொண்டு 'நிஜாமியா சில்சிலா' என்றும், காஜா அலாவுத்தீன் கல்யரீ சாபிரி(ரஹ்) அவர்களின் பெயரில் 'சாபிரிய்யா' என்றும் புகழ் பெற்ற ஷெய்குமார்களின் பெயரால் அழைக்கப்படுவதைப் போல லட்சக்கணக்கான சீடர்களின் ஷெய்கான நூருல் மஷாயிக் ஹஜ்ரத் நூரி ஷாஹ்(ரஹ்) அவர்களின் பெயரால் எங்கள் ஞானவழித் தொடர் 'நூரியா ஸில்ஸிலா' எனவும் அழைக்கப்படுகின்றது. இப்படி கிளைத் தொடர்களுக்கு பல பெயர்கள் இருந்தாலும் இவை அடிப்படையில் ஒரே ஸில்ஸிலா தான் என்பதை மறக்க வேண்டாம்.

நூரிய்யா ஸில்ஸிலாவின் முழுமையான ஞான வழி தொடரின் ஷஜரா இந்த கட்டுரையின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல்காதர் ஜெய்லானி (ரலி), காஜா முயீனுத்தீன் சிஷ்தி அஜ்மீரி( ரலி) முதல் பல்வேறு மகத்தான ஷெய்குமார்களை தன்னகத்தே கொண்ட இந்த ஸில்ஸிலாவில்  கடந்த 200 வருடங்களில் உள்ள ஷெய்குமார்களின் சுருக்கமான அறிமுகம்  மட்டும் இங்கே முன் வைக்கப்படுகின்றது.

செய்யது சுல்தான் மஹ்மூதுல்லாஹ் ஷாஹ் (ரஹ்)

'ஷாஹ்ஜீ' என மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட ஹஜ்ரத் மஹ்மூதுல்லாஹ் ஷாஹ் (ரஹ்) அவர்கள் மூலம் தான் சிஷ்திய்யா சில்சிலா ஹைதராபாத்தில் வளர ஆரம்பித்தது. ஹஜ்ரத் மஹ்மூதுல்லாஹ் ஷாஹ் (ரஹ்) அவர்கள் மிகச் சிறந்த ஆலிமாக இருந்தார்கள். நீங்கள் ஹைதராபாத் சென்று தௌஹீதை பரப்புங்கள் என்று அவர்களின் ஷைகு உத்தரவிட்டதன் பேரில் ஹைதராபாத் நகர் வந்து அங்கு ஏகத்துவ மெய்ஞான ஒளியை பல லட்சம் இதயங்களில் ஏற்றி வைத்தார்கள்.

ஹிஜ்ரி 1311 துல்ஹஜ் பிறை 7ல் உலகை பிரிந்த இவர்களின் புனித மண்ணறை ஹைதராபாத்தில் 'அப்துல் கன்ஜ்' எனுமிடத்தில் உஸ்மானிய்யா தவா கானாவுக்குப் பின்புறம் அமைந்துள்ளது.

   இவர்களின் பேரப்பிள்ளை முரீது ஒருவர் இவர்களின் மண்ணறை மீது மணி மண்டபம் எழுப்ப நாடியபோது அவர் கனவில் தோன்றி ‘மாடீ மிலே கோ மட்டீ மே ஹீ ரஹ்னே தோ’ – ‘இந்த தாழ்ந்த அடியானை மண்ணிலேயே இருக்க விட்டுவிடுங்கள்’என்று கூறினார்கள். எனவே இன்று வரை இவர்களின் புனித மண்ணறை நீல வானத்தைப் பார்த்ததாகவே காட்சியளிக்கிறது.

ஹஜ்ரத் அவர்கள் சிஷ்தி, காதிரீ, நக்‌ஷபந்தி, சுஹ்ரவர்தீ, தபகாத்தீ முதலிய பல ஸில்ஸிலாக்களை தங்களில் ஒன்று சேர்த்திருந்தார்கள். இவர்களின் கலீபாக்களில் ‘மச்லீ வாலே’ என்று அழைக்கப்படும் சையத் கமாலுல்லாஹ் ஷாஹ் அவர்கள் முக்கியமானவர்கள்.

கமாலுல்லாஹ் ஷாஹ் மச்லீ வாலே (ரஹ்)  
  
இவர்களின் திருப்பெயர் முஹம்மத் ஜமாலுத்தீன் என்பதாகும். கமாலுல்லாஹ் ஷாஹ் என்பது பட்டப் பெயராகும். இவர்கள் சிகந்தராபாத்தில் ஒரு மீன் கருவாட்டுக் கடையும், தானியக் கடையும் வைத்திருந்தார்கள். எனவே இவர்களை மச்லீ வாலே என்று மக்கள் அழைத்து வந்தனர். இவர்கள் அரபி, உர்து, பார்சி மூன்று மொழிகளிலும் நன்கு திறமை பெற்றிருந்தார்கள். ஒரு சில கவிதைகளும் எழுதியிருக்கிறார்கள். அதிகமாக சூபியாக்களுடன் தொடர்பு கொண்டவர்களாக இருந்தார்கள். 

    ஒரு நாள் இவர்கள் தங்கள் கடையை சாத்திவிட்டு வந்து கொண்டிருந்தார்கள். எதிரே ஷாஹ்ஜீ என்று மக்களால்  அன்புடன் அழைக்கப்படும்  ஹஜ்ரத் சையத் மஹ்மூதுல்லாஹ் ஷாஹ்  அவர்கள் அந்த வழியாக சென்று கொண்டிருந்தார்கள். இவர்களைக் கண்டவுடன் அருகிலே அழைத்து கையைப் பிடித்து அங்கேயே பைஅத் கொடுத்து,

“கமாலே ஷிர்கே ஜலீ எனும் வெளிப்படையான இணைவைத்தலை விட்டும் உன் உடலை பரிசுத்தப்படுத்துவாயாக! இன்னும் ஷிர்கே கஃபி – அக்பா எனும் மறைவான இன்னும் மிக மறைவான இணைவைத்தலை விட்டும் உன் உள்ளத்தையும், ஆன்மாவையும் பரிசுத்தப்படுத்துவாயாக!”  என்று கூறினார்கள். பின்னர் “ஹூ ஹக்” என்று கூறிய வண்ணம் அங்கிருந்து சென்று விட்டார்கள்.

 அந்த விநாடியிலிருந்து ஹஜ்ரத் அவர்களின் நிலை மாறிவிட்டது. ஷாஹ்ஜீ அவர்களின் சபைக்கு தொடர்ந்து சென்றார்கள். ஷாஹ்ஜீ ஹஜ்ரத்திற்கு ஞான பயிற்ச்சி அளித்து “கமாலுல்லாஷாஹ்” என பெயரும் சூட்டினார்கள்.
அதிலிருந்து இவர்கள் புகழ் பரவத் தொடங்கியது. உலமாக்கள், இறைகாதலர்கள், சூஃபியாக்களுடன் பெரும் செல்வந்தர்களும், அரசு உயர் பதவியில் இருப்பவர்களும் அவர்கள் சபையிலமர்ந்து ஞான அமுதினை பருகினார்கள். 

நவாப் மஹ்தியார் ஜங்க், நவாப் சயீத் ஜங்க், ஹைதராபாத் நிஜாமியா பல்கலை கழகத்தின் ஸ்தாபகர் மவ்லானா அன்வாருல்லா கான், மவ்லானா பரகத் அஹ்மத் டோங்கி, மவ்லானா மளாஹிர் அஹ்ஸன் கீலானி, மவ்லானா ஷாஹ் அப்துல் காதிர் ஹஜ்ரத் இன்னும் பல பெரும் பெரும் தீனுடைய உலமாக்கள் இவர்களின் மாணவர்களாக விளங்கினார்கள்.

ஹஜ்ரத் அவர்கள் மிகவும் கராமத் விளங்கப்பட்டவர்களாக இருந்தார்கள். உதாரணத்திற்காக ஒன்றை பார்ப்போம்:
ஒரு நாள் ஒருவர் ஒரு பெரிய பாத்திரத்தில் சர்க்கரை எடுத்து கொண்டு சென்று கொண்டிருந்தார். “அது என்ன?” என்று ஹஜ்ரத் அவர்கள் கேட்டார்கள். அவரோ விளையாட்டாக ‘மண் அள்ளிச் செல்கிறேன்’ என்றார். ‘அப்படியே ஆகட்டும்!’ என்று ஹஜ்ரத் அவர்கள் கூறினார்கள். என்ன ஆச்சரியம்! அவர் தனது இடத்திற்கு சென்று பாத்திரத்தை இறக்கிப் பார்த்தார். முழுவதும் மண்ணாகவே இருந்தது. அப்போதுதான் இவர்களின் சிறப்பை விளங்கிய அவர் ஒடோடி வந்து மன்னிப்புக் கேட்டு அழுதார். அதில் என்ன இருந்தது? என்று கேட்டார்கள். ‘சர்க்கரை’ என்றார் அவர். ‘சரி அப்படி ஆகட்டும்!’ என்றார்கள். அந்த மண் முழுவதும் மீண்டும் சர்க்கரை ஆகிவிட்டது. 
இவர்கள் ஞானப் பயிற்ச்சிகளையும் கடுமையாகச் செய்து வந்தார்கள். வெளியில் சென்று வரும்போது காட்டில் இருக்கும் பல வகைப்பட்ட மரங்களின் இலைகளை எல்லாம் பறித்து வருவார்கள். வந்து வீட்டில் அமர்ந்து ஒவ்வொரு இலையாகக் கையில் எடுத்து ‘ஹக் ஜாஹிர் பசூரத்தே ஷை’ – ‘இந்த தோற்றத்தில் ஹக்குடைய உஜூதுதான் காட்சியளிக்கிறது’ என்று ஒவ்வொன்றாக ரசித்துக் கொண்டிருப்பார்கள். 

நாடெங்கிலும் தவ்ஹீதின் ஞானத்தையும், திருக்கலிமாவின் அஸ்ரார்களையும் மணம் பரப்பிய ஷைகுனா ஹஜ்ரத் கிப்லா அவர்கள் ஹிஜ்ரி 1351 ரபீவுல் ஆகிர் பிறை 29 (கி.பி.1932 டிசம்பர் 8 ஆம் நாள்) வியாழக் கிழமை அன்று தங்கள் இக வாழ்வை முடித்துக் கொண்டு ரபீகுல் அஃலாவின் பக்கம் பயணம் சென்றனர். இவர்களின் புனித அடக்கஸ்தலம் ஹைதராபாத்தில் காசீ கோடா எனும் இடத்தில் அமைந்துள்ளது.

கமாலுல்லாஹ் ஷாஹ் (ரஹ்) அவர்களின் அடக்கஸ்தலம்

 இன்றளவும் மக்கள் அவர்களின் தர்பாருக்குச்  சென்று நல்லாசி பெற்று வருகிறார்கள். இவர்களின் பல கலீபாக்களில் பிரதானமானவர்களாக கௌஸீ ஷாஹ் (ரஹ்) அவர்கள் திகழ்ந்தார்கள்.

கன்ஜுல் இர்பான் ஹஜ்ரத் கௌஸீ ஷாஹ் அக்பரீ (ரஹ்)     

       ஹிஜ்ரி 1311 துல்ஹஜ் 16, கி.பி. 1893 ஜூலை 1 சனிக்கிழமை ஹைதராபாத் பேகம் பஜார் மஹல்லாவில் பிறந்த ஹஜ்ரத் அவர்களுக்கு பெற்றோர் கௌஸ் அலி என்று பெயரிட்டு மகிழ்ந்தனர்.

       இவர்களின் தகப்பனார் ஹஜ்ரத் கரீமுல்லாஹ் ஷாஹ் நக்‌ஷபந்தீ அவர்கள் நக்‌ஷபந்தீ ஸில்ஸிலாவின் ஷைகாக விளங்கினார்கள்.

ஹஜ்ரத் கரீமுல்லா ஷாஹ் (ரஹ்) அவர்களின் அடக்கஸ்தலம்

 தந்தையின் மூலமே மார்க்கக் கல்விகள் அனைத்திலும் தேர்ச்சி பெற்ற ஹஜ்ரத் அவர்கள் இளமையிலேயே இறைக் காதல் மிக்கவர்களாக விளங்கினார்கள்.

கன்ஜுல் இர்ஃபான் கௌஸி ஷாஹ் (ரஹ்)
       தகப்பனார் ஹிஜ்ரி 1331 ஜமாதுல் அவ்வல் பிறை 7ல் மறைந்தார்கள். அதன்பின் இவர்கள் மச்லீ வாலே ஷாஹ் என்றழைக்கப்பட்ட ஹஜ்ரத் கமாலுல்லாஹ் ஷாஹ் அவர்களிடம் பைஅத்துப் பெற்றார்கள். இறை ஞானங்களைக் கசடறக் கற்றுத் தெளிந்த ஹஜ்ரத் அவர்களுக்கு கிலாபத் வழங்கி ‘கௌஸீ ஷாஹ்’ என்ற பெயரையும் வழங்கினார்கள் அவர்களின் ஷைகு அவர்கள்.

       அரபி, பார்சி, உர்து, ஆகிய மூன்று மொழிகளிலும் பெரும் புலமை பெற்றிருந்த ஹஜ்ரத் அவர்கள் மூன்று மொழிகளிலும் ஏராளமான கவிதைகள் எழுதியுள்ளார்கள். தாங்கள் இறைவன் மேல் கொண்ட  அளவற்ற காதலை அப்படியே கவிதையாக வடித்துள்ளார்கள். இவர்களின் கவிதைத் தொகுப்பான “தைய்யிபாத்தே கௌஸீ”  எனும் நூல் இறை ஞானப் பொக்கிஷமாக இன்று வரை விளங்கி வருகிறது.
           கௌஸீ ஷாஹ் (ரஹ்) அவர்களுக்கு ஷைகுல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அரபி (ரஹ்) அவர்கள் ஆன்மீக முறையில் திருக்காட்சி தந்து  கிலாபத்தும் வழங்கி தங்களின் ஞானங்களை வெளிப்படுத்துவதற்கு அனுமதியும் கொடுத்தார்கள். எனவே இவர்கள் மூலமாக உவைஸிய்யா முறையில் அக்பரிய்யா ஸில்ஸிலாவும் தொடர்கிறது. 

         ஹஜ்ரத் அவர்கள் எழுதியுள்ள 'நூருன்னூர்' எனும் நூல் மிகவும் புகழ் வாய்ந்தது. இது தவிர ‘மக்ஸதே பைஅத்’, கன்ஜே மக்தூம், மஇய்யத்தே இலாஹிய்யா, பலாஹே முஸ்லிம் போன்ற நூற்களும் தைய்யிபாத்தே கௌஸி என்ற கவிதைத் தொகுப்பும் இவர்களது ஆக்கங்களாகும்.    

கௌஸீ ஷாஹ் (ரஹ்) அவர்களின் அடக்கஸ்தலம்
      ஹிஜ்ரி 1373 ஷவ்வால் பிறை 4ல் (கி.பி. 1954 ஜூன் 6) ஞாயிற்றுக்கிழமை இன்னுலகை நீத்த  ஷைகு அவர்களின் புனித மண்ணறை ஹைதராபாத்தில் உள்ள பேகம் பஜாரில் மஸ்ஜிதே கரீமுல்லாஹ் ஷாஹ்வில் உள்ளது. 

ஷைகு ஸஹ்வீ  ஷாஹ் (ரஹ்)

இவர்களின் மகனார் ஸஹ்வீ ஷாஹ் என்பவர்களும் பிற்காலத்தில் தரீக்கத் சம்பந்தமான நிறைய நூல்கள் எழுதியுள்ளார்கள். 

      ஹஜ்ரத் அவர்களுக்கு ஏறத்தாழ 30க்கும் மேற்பட்ட கலீபாக்கள் இந்தியா முழுவதும் இருந்தார்கள். அவர்களுள் சைய்யத் நூரி ஷாஹ் (ரஹ்) அவர்கள் மிகவும் புகழ் பெற்று விளங்கினார்கள்.  

நூருல்மஷாயிக் ஹஜ்ரத் நூரிஷாஹ் (ரஹ்)

இறந்த அன்னை இன்முகத்தை தேடவுமில்லை
பிரிந்த தந்தை உறவை எண்ணி வாடவுமில்லை
பெருமான் நபிநாதர் முஹியித்தீன் குலவழி தோன்றல்
உமை தேடி நெஞ்சம் அழுவது ஏன்? செய்யிதே நூரி
என்று ஷைகுனா பிலாலிஷாஹ் ஜுஹுரி அவர்கள் பாடினார்கள்.
ஏன் தாய், தந்தையை விட இந்த ஆன்மீக நாதரின் மீது அன்பு மிகைத்தது என்பதற்கு தொடரும் இந்த பாடல் வரிகளே பதிலளிக்கின்றது:
தன் நெஞ்சமதின் உதிரமது பாலென மாற
என் அன்னை அதை எனக்களித்தாள் உடலது வளர
தன்னைத் தானும் அறியும் உயர்ஞான அமுதினை
எனக்களித்து உயர்வளித்தீர் செய்யிதே நூரி!
லட்சக்கணக்கான நூரியா ஞானவழி சீடர்களின் இதயத்தில் என்றென்றும் எதிரொலித்து ஆனந்த கண்ணீரை கண்களில் வழியவிடும் பாடல்வரிகள் இவை.
     கேரளாவில் 1962ல் நடந்த ஜமாத்துல் உலமா மாநாட்டில் முதல் நாள் காயிதேமில்லத் இஸ்மாயில் சாஹிப்(ரஹ்) அவர்களும் இரண்டாம் நாள் ஹஜ்ரத் நூரிஷாஹ் (ரஹ்) அவர்களும் தலமை தாங்கினார்கள். பின்பு, மங்களூர் ரயிலில் சுமார் 10 மணிநேரம் ஒன்றாக பயணம் செய்தார்கள். அபோது காயிதேமில்லத் அவர்கள் ஷெய்குனாவை “ஹஜ்ரத் அவர்கள் இந்த காலத்தின் இமாம் கஜ்ஜாலியாக திகழ்கிறார்கள்” என்று சொன்னார்கள். ஹஜ்ரத் நூரி ஷாஹ் அவர்கள் காயிதேமில்லத்தைப் பற்றி சொல்லும் போது “ தலைக்கு ஏற்ற தலைமைத் தனத்தை அல்லாஹ் அவர்களுக்கு அருளியுள்ளான்” என கூறினார்கள்.

 தங்கள் பெயருக்கு ஏற்ற வண்ணம் உலகமெங்கும் பேரொளியை வீசிய சர்கார் நூரி நாயகத்தின் இயற்பெயர் அஹ்மத் முஹ்யித்தீன் என்பதாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குல வழியில் குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களின் பேரப்பிள்ளையாக ஹிஜ்ரி 1322 துல்கஅதா 28ல் ஹஜ்ரத் அவர்கள் உலகில் உதித்தார்கள். ஹஜ்ரத் அவர்களின் தந்தைப் பெயர் ‘சையத் கௌஸுத்தீன்’ என்பதாகும்.

    தங்கள் இளம் வயதிலேயே ஷைகு கௌஸீ ஷாஹ் சர்காரிடம் பைஅத் பெற்று அவர்களின் பணிவிடையிலேயே பல்லாண்டுகள் கழித்தார்கள். ஷைகு அவர்கள் கிலாபத் கொடுத்து ‘நூரீஷாஹ்’ எனும் பெயரையும் கொடுத்தார்கள்.

    கேட்பவர்களை எல்லாம் தன் வசப்படுத்தும் மிக அற்புதமான பேச்சாற்றலை அல்லாஹ் அவர்களுக்கு கொடுத்திருந்தான். ஷைகு கௌஸீ ஷாஹ் அவர்கள் தன் முரீது நூரிஷாஹ் அவர்களை சில இடங்களுக்கு அழைத்து செல்வார்கள். அங்கே தன் முரீதைப் பேசச் செய்து அவர்களின் பேச்சை ஷைகும் கேட்டு ரசித்துப் பாராட்டுவார்கள்.

     பிற்காலத்தில் நூரி நாயகத்தின் புகழ் உலகெங்கும் பரவியது. குறிப்பாக தமிழகம், கேரளா எங்கும் அவர்களின் பெயரை  அறியாதவர்கள் யாரும் இல்லை எனும் அளவுக்கு அவர்களின்  முரீதுகள் எங்கும் இருந்தனர். எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஓய்வின்றி ஊர் ஊராக பயணம் செய்து இறை ஞானங்களை போதித்து வந்தார்கள். தங்கள் கலீபாக்களைப் பார்த்து ‘நான் சிரமம் பாராது ஊர் ஊராக சுற்றியதால் அல்லாஹ் உங்களுக்கு இறை ஞானத்தை வழங்கியுள்ளான். இல்லை என்றால் தமிழகத்தில் பல்லாயிரம் இதயங்கள்  இருண்டு கிடந்திருக்கும். நீங்களும் சிரமம் பாராது ஊர் ஊராகச் செல்லுங்கள். “ஆரிப் தேங்கிக் கிடக்கும் குளம் போன்றவர் அல்ல! ஊர் ஊராகச் சென்று மக்கள் தாகம் தீர்க்கும் நதி போன்றவர்” என்று கூறுவார்கள்.

 எல்லா மக்களுக்கும் பரவலாக இறைஞானத்தை எத்தி வைக்க , ஆன்மீக பாதைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டி  பல்வேறு தரீக்கத் மாநாடுகளை நடத்தினார்கள்.
1976 சென்னை தரீக்கத் மாநாட்டின் மேடையில் சர்கார் நூரிஷாஹ், ஹஜ்ரத் கலீமிஷாஹ், P.S.K.M. அன்வாருல்லாஹ் ஷாஹ், அல்ஹாஜ் M.M.  பீர் முஹம்மது (ரவணசமுத்திரம்)


 ‘தர்ஜுமான்’ என்ற உர்து மாத இதழும் நடத்தினார்கள். அஸ்ராரே லாயிலாஹா இல்லல்லாஹ், தப்சீரே நூரி(சூரா பாத்திஹா), அஹமிய்யத்தே தரீகத், அஸ்ராரே இலாஹி, ஜுஹூரே முஹம்மத் (ஸல்) ஆகிய பல நூற்கள் எழுதியுள்ளார்கள்.

       கேரளாவில் ஜாமியா அரபிய்யா நூரிய்யா என்ற அரபிக் கலா சாலையைத் தோற்றுவித்தார்கள். ஹைதராபாத்தில் ஜாமியா இலாஹிய்யா நூரிய்யா எனும் அரபிக் கல்லூரியும், நூரி இண்டஸ்டிரீஸ், நூரிய்யா ஜூனியர் காலேஜ், அரபிக் ஓரியண்டல் ஹைஸ்கூல் போன்ற பல கல்வி நிறுவனங்களைத் துவங்கினார்கள். 

      ஹைதராபாத்தில் பண்டல்குடாவில் மஸ்ஜிதும், மத்ரஸா கட்டிடங்களும், கான்காஹ்வும் கட்டினார்கள். ஹஜ்ரத் அவர்களுக்கு 4 ஆண் மக்களும், 7 பெண் மக்களும் வாரிசுகளாவர். எனினும் தனது அனைத்து சொத்துக்களையும் மத்ரஸாவுக்கு வக்பு செய்து விட்டார்கள்.

     ஹிஜ்ரி 1411 ரபீவுல் ஆகிர் 14 சனிக்கிழமை உலகைப் பிரிந்த ஹஜ்ரத் அவர்களின் மண்ணறை ஹைதராபாத்தில் உள்ளது.

நூரி நாயகத்தின் தர்கா


நூரி நாயகத்தின் அடக்கஸ்தலம்

 ஷைகு அவர்களின் வழிதோன்றல்கள் (சஜ்ஜாதாக்கள்)




ஷைகு அஸ்ராருல்லா ஷாஹ் நூரி & ஷைகு மக்பூல்ஷாஹ் நூரி (ரஹ்)


ஷைகு அவர்களுக்கு தமிழகம், கேரளா மற்றும் பல இடங்களில் நூற்றுக்கணக்கான கலீபாக்கள் உள்ளனர். தமிழகத்தில் குறிப்பாக ஹஜ்ரத் ஜுஹுரீ ஷாஹ் கிப்லா, ஹஜ்ரத் ஆமிர் கலீமீ ஷாஹ் கிப்லா, ஹஜ்ரத் பைஜீ ஷாஹ் கிப்லா, ஹஜ்ரத் ஜமாலீ ஷாஹ் கிப்லா ஆகியோர் மிகவும் பிரபலமானவர்கள். 


     
ஸூபி ஹஜ்ரத் ஜுஹூரீ ஷாஹ் நூரி (ரஹ்)




ரயீஸுல் முஃபஸ்ஸிரீன் சையது ஆமிர் கலீமீஷாஹ் நூரி கிப்லா

ஷம்சுல் ஆரிஃபீன் தில் நவாஸ் ஃபைஜீஷாஹ் நூரி (ரஹ்)



ஜமாலுல் ஆரிஃபீன் ஜமாலிஷாஹ் நூரி(ரஹ்) அவர்கள் நூரி நாயகத்துடன்



நூரிஷாஹ் (ரஹ்)  பிரபலமான சில தமிழக கலிபாக்களின் படங்கள்:

ஷைகு டாக்டர் செய்யது கலீலுல்லாஹ் நூரி (ரஹ்)
ஷைகு ரபீக்கிஷாஹ் நூரி, லால்பேட்டை
ஷைகு செய்யது நிஜாமி ஷாஹ் நூரி, பாண்டிச்சேரி




எங்கள் உயிரினும் இனிய ஷெய்கு நாயகம் ஃபைஜிஷாஹ் நூரி(ரஹ்) அவர்களின் உரூஸ் தினத்தில் அல்லாஹ் ரஸூலை நினைவு கூறும் பயான், குர்ஆன் மற்றும் மவ்லீது மஜ்லீஸின் சில காட்சிகள்:

ஷைகுனா ஃபைஜிஷாஹ் (ரஹ்) அவர்களின் அடக்கஸ்தலம்

உரூஸின் போது கான்காயே ஃபைஜியா
ஷைகுல் அரபி வல் அஜம் சுபூரிஷாஹ் ஃபைஜி
சஜ்ஜாதா மஸ்தானீஷாஹ் ஃபைஜி





இடமிருந்து வலம்: ஷைகு இர்ஃபானுல்லாஷாஹ் ஃபைஜி (சஜ்ஜாதா), ஷைகு சுபூரிஷாஹ் ஃபைஜி(ஷைகுல் அரபி வல் அஜம்), ஷைகு ஃபைஜானுல்லாஷாஹ் ஃபைஜி(சஜ்ஜாதா நஸீன்), ஷைகு அல்லாமா ஐனீஷாஹ் ஃபைஜி (நாஜிர் ஹஜ்ரத் பொருள்வை ஃபைஜுல் ஹஸனாத் அரபி கல்லூரி)
இடமிருந்து வலம்: ஷைகு ஹக்கீமிஷாஹ் ஃபைஜி (Retired Agricultural Scientist) ஷைகு நூராணி ஷாஹ் ஃபைஜி (சஜ்ஜாதா)

ஷைகு செய்யது முஷ்தாக் அலி ஷாஹ் ஃபைஜி (Retired Head Master) & பேராசிரியர் ஷைகு ஷுஹுதிஷாஹ் ஃபைஜி



சேலம் ஹஜ்ரத் என புகழ் பெற்ற ஷைகு இர்ஃபானி ஷாஹ் நூரி (பன்னூலாசிரியர்), ஷைகு கனீமீஷாஹ் கிப்லா (நடுவில்)  அவர்களுடன் சஜ்ஜாதா (வலப்புறம்)
குளச்சல் ஹஜ்ரத் ஷைகு சூஃபிஷாஹ் ஃபைஜி அவர்கள் சஜ்ஜாதாவுடன்

கொள்ளுமேடு அலஹாபிஜ் ஃபாரூக்கிஷாஹ் ஃபைஜி
மதனிஷாஹ் ஃபைஜி, சிங்கப்பூர்
அபுபக்கர்ஷாஹ் ஃபைஜி


ஆஷிக் ஷாஹ் ஃபைஜி



ஆடுதுறை முய்னீஷாஹ் ஃபைஜி, துபாய்


நூராணி ஷாஹ் சஜ்ஜாதாவின் தலமையில் குர்ஆன், புர்தா, மவ்லீத் மஜ்லீஸ்




மூன் டிவி சுலைமான் ஹஜ்ரத் - துபாய்

சென்னை ஹைக்கோர்ட் வக்கீல் வக்காலத்ஷாஹ் ஆமிரி

தமிழக தலைமை காஜி ஜனாப் சலாஹுதீன் ஐயூபி அவர்கள்

இடது ஓரம் : இறையன்பன் குத்தூஸ் ஃபைஜி, வலது ஓரம் : அல்ஹாஜ் ஹாரூன் M.P.

இடது :  தமிழக தர்காக்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் மர்ஹூம் சச்சா முபாரக்

தேரிழந்தூர் தாஜுதீன் ஃபைஜி


Qadiria Silsila

Chishtiya Silsila

Chistiyul Qadiri
  • Khaja Haji Ishaq Chishti Qadiri (W. H: 953)
  • Khaja Haji Muhammad Chishti Qadiri (W. H: 972)
  • Khaja Junaid Thani (W. H: 985)
  • Khaja Shah Hidayatullah Ayni (W. H: 1018)
  • Khaja Sayyid Kamaludin Bukhari (W. H: 1052)
  • Khaja Sayyid Jamaludin Chishti Qadiri (W. H: 1162)
  • Sayyid Muhammad Shah Mir Chishti Qadiri (W. H: 1186)
  • Khaja Sayyid Kamaludin Sham’ Khan Dan Misht (W. H: 1224)
  • Khaja Alawudin Chishti Qadiri (W. H: 1251)
  • Khaja Sayyid Burhanudin (W. H: 1290)
  • Sayyid Sultan Mahmudullah Shah (W. H: 1311)
  • Hazrat Sheikh Kamalullah Shah Macchliwale Shah (W. H: 1351)
  • Kanzul Irfan Hazrat Ghauth Ali Shah Ghauthi (W. H: 1373)
  • Noorul Mashaikh Sayyid Ahmed Muhyiddin Noorishah Jilani (W. H: 1411)
  • Shamsul Arifeen Shiek Faizeeshah Noori Chishti Qadiri  (W.H.1426) 
பார்க்க : ஷேக் அப்துல்லா ஜமாலி அவர்களின் :

 இறை வழியில் இறைநேசச் செல்வர்கள்

தர்ஹாக்கள் இறைவனின் அடையாளச் சின்னங்கள்

நன்றி! :

 இந்த கட்டுரை எனது ஆன்மீக சகோதரர் அப்சலுல் உலமா, அதீபேஃபாஜில், பேராசிரியர் ஷைகு ஷுஹூதிஷாஹ் ஃபைஜி அவர்களின் புத்தகங்களிருந்து தொகுக்கப்பட்டது.

படங்கள் உதவி : ஹுசைன் ஃபைஜி, ஆசிரியர், ஸில்ஸிலாயே ஃபைஜியா நியூஸ் லெட்டர்.
    உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.

    39 comments:

    nagoreismail said...

    பகிர்ந்தமைக்கு நன்றி.. அருமை...

    புல்லாங்குழல் said...

    முதல் கருத்திட்ட தம்பி, வாழ்வின் எல்லா நல்ல நிலையிலும் உங்களை முதல்வனாக்க எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றேன்.ஆமீன்!.

    Shafiyath Rani said...

    Assalamu alaikkum

    shuaib said...

    உண்மை தெளிவாகி விட்டது பொய் மறைந்துவிடும்
    எந்த நல்ல நோக்கத்தோடு வெளியிட பட்டதோ அல்லாஹ் அதை பரிபூரண மாக்க போதுமானவன்!!!
    மார்க்கத்திற்கு சஹாபாக்கள் உயிரை தியாகம் செய்துவிட்டு யாரும் அடைய முடியாத அந்தஸ்தை பெற்று கொண்டார்கள் நாம் என்ன??? செய்ய போகிறோம்.தெளிவடைய நல்ல வாய்ப்பை தந்துள்ளீர்கள்.நன்றி!நன்றி!!!!!ஜசாகல்லாஹ்!!!!!!!

    shuaib said...

    அல்லாஹ்வை அறிந்து வணங்க தேடும் அடியார்களுக்கு,இது புதியது அல்ல! என்பதை தரீகத் என்ற தொடர் வழியை விளங்காதவர்களுக்கு தெளிவு
    படுத்தியதில் மிக்க மகிழ்ச்சி! சேவை தொடர வாழ்த்துக்கள்!!! ஈத் முபாரக் *அபூரமீஜா

    Anonymous said...

    அஸ்ஸலாமு அலைக்கும்


    எந்த ஒரு சில்சிலா அண்ணல் எம்பெருமானார் அவர்கள் வரை சென்று முடிய வில்லையோ அந்த சில்சிலா சம்பூரணமான சில்சிலா அல்ல,எங்கள் சில்சிலா பெருமானார் அவர்கள் வரை சென்று அடைய கூடியது என்றும் மேலும் காமிலான சில்சிலா என்பதற்கு எங்கள் சில்சிளவில் உள்ள முரீதீன்கள் பெருமானார் மீது கொண்டுல்ல உயர் காதலே சாட்சி.
    பையதிற்கு முன்பு பெருமானார் மீது எனக்கு எவ்வளவு பிரியம் இருந்தது இப்போது பெருமானாருடைய விஷயத்தில் என்னுடைய நிலை எப்படி மாறிவிட்டது என்பதை என்னால் இங்கே விவரிக்க முடியாது, பெருமானாரை மதிக்கும் விசயத்தில் நம்மிடம் குறை உள்ளதாக சிலர் நம் ஆன்மீக குருமார்களை வஹாபி என்று கூறுகிறார்கள் பெருமானார் அவர்களுடைய ஹகீகத்தை எங்களுக்கு விளக்கியதோடு மட்டும் அல்லாமல் அவ்வாறு எங்களை தவறாக விளங்கி கொண்டிருக்கும் அந்த அடியார்ஹளை கூட எப்படி மதிக்க வேண்டும்(அன மின் நூரில்லாஹ் குள்ளி ஷையின் மின் நூரி ) என்று எங்களுக்கு கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் எங்கள் ஷெய்ஹு மார்கள்.

    இது போன்று பல விஷயங்கள் பஹிர்வு செய்ய அல்லாஹ் கலிபா அவர்ஹளுக்கு அருள்புரிவானாக (ஆமீன்)

    இப்படிக்கு
    முஹம்மத் யாசீன் பைஜி

    rilvan said...

    மாஷா அல்லாஹ்!!!

    இடுகையை படிக்கும் போது மனதில் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி.இந்த மாபெரும் இறைநேசர்களோடு எங்களையும் இனைத்து வைத்தாயே என்று.!!!

    யா அல்லாஹ் இந்த இனிய ஈகைத் திருநாளின் பொருட்டால்,எங்களை உன் வழியில் ஜெயம் பெற்றவர்களோடு என்றும் நிலைத்திருக்க செய்வாயாக.
    ஆமீன்!

    Anonymous said...

    இந்த கட்டுரையின் கருவூலமே அல்லாஹ் ரசூலின் பிரியத்தையும்,அல்லாஹ் யாரை
    மதிக்கச் சொல்கின்றானோ அவர்களை மதிப்பதிலும் தான் இருக்கிறது.

    அல்லாஹ் நம்மை நேசிப்பதற்க்கு அடையாளம்?
    அல்லாஹ் நேசித்தவர்களை நாம் நேசிக்காத வரை நாம் அல்லாஹ்வை நேசித்தவர்களாக ஆகமுடியாது.
    என்ற இறை கருவூலங்களை நமக்கு இந்த ஆசிரியர் பெரும் படிப்பினையை விளங்கும் படி கல்புவரை சென்றடைய உதவிசெய்துள்ளார்கள்.
    அல்லாஹ் அவர்களின் சேவையை தொடர்ந்து செய்து கொண்டிருக்க தௌஃபீக் செய்தருள் வானாக! வஸ்ஸலாம்.

    அன்புடன்
    S.ஹாஜா நஜிமுதீன் ஃபைஜி,மஞ்சை
    ph:0559711066



    Anonymous said...

    எல்லாப் புகழும் அல்லாஹ்க்கே!

    நாம் இருக்க கூடிய இந்த மெய்யான சூஃபி பாதையின், மேலும் பல அசராருகளை அல்லாஹ் தங்களுக்கு அருள்புரியட்டும். நாம் இருப்பது உண்மையான தரீகா அதாவது ஹக்கான சூஃபி பாதை என்பதை தெளிவாக விளக்கியுள்ளீர்கள். கலிபா நூருல் அமீன் ஃபைஜி அவர்களின் நிஸ்பத்தில் நூரிய்யா (ஷிஸ்தியா) சில்சிலாவின் வழித் தொடரை மேலும் அறிய கூடிய ஓர் வாய்ப்பை அல்லாஹ் அருள் புரிந்தான் அல்ஹம்துலில்லாஹ்!

    அன்புடன்
    ஹுஸைன் ஃபைஜி
    அபுதாபி

    Anonymous said...

    Masha Allah, great effort... May Almighty Allah accepts all ur intentions 4 ever n ever...

    Anonymous said...

    முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் எத்திவைத்த உண்மை தௌஹீதை சஹாபாக்கள், தாபீயீன்கள், தபோ தாபீயீன்கள், இமாம்கள், வலிமார்கள், இந்த வரிசையில் நூரி சில்சிலா வழியாக சைய்யத் நூரிஷாஹ் அவர்களின் புகழ்பெற்ற கலீஃபா ஃபைஜிஷாஹ் நூரி அவர்களின் ஃபைஜியா சில்சிலா மாறலாக முஹம்மது (ஸல்) அவர்கள் தந்த தௌஹீதை (AS IT IS ) பெற்றுக் கொள்ள முடியும் என்பதை ஆணித் தரமாக உணர முடிகிறது இந்த ஆசிரியருக்கு கிடைத்துள்ள இரு பெரும் அருளான நேரமும், ஆரோக்கியமும் மென்மேலும் தொடர வள்ள இறையோனிடம் இறைஞ்சும் அன்பன்
    A. SHEIK ABDUL KADER FAIZEE,Nagai
    I.D: faizone68@yahoo.co.in
    mob. no: 055-6150880

    Anonymous said...

    Shafiyath Qadiriyah

    http://www.facebook.com/shafiyath

    ஓசைகளின் மூலம் ,,உள்ள ஹக்கை புரிந்து கொண்டேன்!!
    மிகவும் நன்றிகள்!
    என் சந்தேகத்திற்கு,,,,இவ்வளவு ,விரிவான ,,விளக்கத்தை அளித்த தங்களுக்கு
    மிக மிக நன்றி!
    தங்கள் ,பணிகள் ,,சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
    சகோதரர் நூருல் அமீனுக்கும் ,,அவர்கள் குடும்பத்தார்களுக்கும்,
    வல்லவன் ,,ரஹ்மத் என்றும் பொழியட்டும்!
    ஈத் முபாறக்!
    Saturday at 10:11am · Like

    Unknown said...

    ASSALAMU ALAIKUM......SILSILA PONTRA MUZHU VILAKKANGALAIYUM. ARYA PUGAIPPADANGALAIYUM VILAKKATHTHAIYUM YEN PONTRA PEERPAIGALUM ANAITHTHUM ARYAKKOODIYA ORU VAAIPPAI NALGIYA THAANGALUKKU NATRYUDAN KOODIYA NALVAZHTHUDAN((((JAZAKUM ALLAH KHAIRAN)))

    Anonymous said...

    Masha Allah a very useful article!
    subhanallah!!!!...

    suvanappiriyan said...

    சலாம் நூருல் அமீன் பாய்!

    //29:69. "மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்" என்று இறைவன் கூறுகின்றான்.ஒரு வழி என்று கூறவில்லை. பல வழி என்று கூறுகின்றான்.//

    அந்த வழி எவை என்று காட்டித் தருவதற்காககத்தானே இறைத் தூதரை இறைவன் அனுப்பினான்? அந்த இறைத் தூதரின் பொன் மொழிகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு விட்டதே! பிறகு எதற்கு இந்த ஷெய்குகளின் பாராட்டு மழை. நபி அவர்களை விட சிறந்த ஞானம் கொண்டவர்களா இவர்கள்?

    சமாதிகளை இடித்து தரை மட்டமாக்கச் சொல்லி ஆதாரபூர்வமான நபி மொழிகள் கிடைத்தும் அந்த சமாதிகளை பய பக்தியோடு பதிந்ததின் நோக்கம் என்ன பாய்? தெரிந்து கொள்ளவே கேட்கிறேன். நபிகளின் சமாதி சம்பந்தமாக வந்த அறிவுரைகளுக்கு உங்களின் பதில் என்ன?

    புல்லாங்குழல் said...

    அன்பு சகோதரர் சுவனப்பிரியனுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

    அல்லாஹ் தன்னை பற்றிய விளக்கத்தை நபி (ஸல்) அவர்களின் மூலம் நமக்குத் தந்தான். அப்படி என்றால் அல்லாஹ்வை விட சிறந்தவர்களா நபி(ஸல்) என நாம் கேட்போமா. அடிப்படையில் இது எவ்வளவு பிழையான வாதம் என்பதை சிந்தித்து பாருங்கள்.

    திருக்குறளுக்கு மு.வ. தெளிவுரை எழுதினால் மு.வ. திருவள்ளுவரை விட சிறந்தவரா என கேட்க மாட்டோம் அல்லவா? குறளாவது மனித வார்த்தைகள். குர்ஆன் என்பது அல்லாஹ்வின் வார்த்தைகள் – அதுவும் அவன் தூதர் நபி(ஸல்) தன் சொல், செயல், அங்கீகாரத்தால் குர்ஆனின் விளக்கமாக, இன்னும் சொன்னால் நடமாடும் குர்ஆனாகவே வாழ்ந்து காட்டியவர்கள் . இத்தனைக்கும் பிறகு குர்ஆனுக்கு நூற்றுக்கணக்கான தப்ஸீர் எதற்கு?. அந்த தப்சீரை நமக்கு வழங்கிய சங்கைக்குரிய முபஸ்ஸிரீன்களை நாம் பெருமானாரை விட உயர்ந்தவர்களாகவா விளங்குகின்றோம். தப்ஸீர்களின் துணையில்லாமல் குர்ஆனை நம்மால் சரியாக விளங்கிக் கொள்ள முடியுமா? இந்த சரித்திரம் எல்லாம் அறியாதவர்கள் இப்படி கேட்கலாம். தங்களைப் போன்ற மார்க்க ஞானம் பெற்றவர்கள் கேட்கலாமா?


    இறைவன் தன் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மூலம் உலகிற்கு அளித்த புனித தீனை பாதுக்காக்க உலகெங்கும் தன் நேசர்கள அனுப்பிக் கொண்டே இருக்கின்றான். குர்ஆனுடைய ஓதும் முறைகளை ஏழுகாரிகள் மூலமாகவும், ஃபிக்ஹ் சட்ட திட்டங்களை நான்கு இமாம்கள் மூலமாகவும், ஹதீஸ்களை ஸிஹாஹ் சித்தாவின் ஆசிரியர்களான ஆறு இமாம்கள் மற்றும் முஹத்திஸ்கள் எனும் ஹதீஸ்கலை வல்லுனர்கள் மூலமாகவும் இன்று வரை அவனே பாதுகாத்து வருகின்றான்.

    அது போல அண்ணலாரின் புனித இதயத்தில் பொதிந்திருந்த இறைஞானத்தை அலி(ரலி) அவர்களைக் கொண்டும், அவர்களின் மாணவர் ஹஸன் பசரி(ரலி) அவர்களைக் கொண்டும் வெளிப்படுத்திய இறைவன் வரிசையாக ஆயிரக்கணக்கான் வலிமார்களைக் கொண்டு இது வரை பாதுகாத்து வருகின்றான். இந்த ஞானவழி பாதை தரீக்கா எனும் பெயரில் அறியப்படுகின்றது.

    தரீக்காவின் வலிமார்களின் தொடர்பால் தான் எங்களுக்கு குர்ஆன் கூறும் ஏகத்துவம் விளக்கம் கிடைத்தது. புல்லாங்குழலில் 'குர்ஆன் கூறும் ஏகத்துவ மெய்ஞானம் ஓர் எளிய விளக்கம்' என்ற தலைப்பில் உள்ள சுட்டியில் ஒரு pdf ஃபைல் உள்ளது. படித்து பார்க்க அன்புடன் வேண்டுகின்றேன்.

    அடுத்து ஏன் நபி(ஸல்) அவர்களை, வலிமார்களை கொண்டாடுகிறோம் என்பதை பார்ப்போம்.
    பெருமானாரை எப்படி எல்லாம் கொண்டாடினார்கள் சஹாபாக்கள் என்பதை படித்திருப்பீர்களே சகோதரா!.
    “எங்கள் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்பணமாகட்டும் யாரஸுலுல்லாஹ்!” என்பார்கள் ஸஹாபாக்கள். சுருக்கமாக சொன்னால் பெருமானாரை அவர்கள் தோழர்கள் நேசித்து போல, கொண்டாடியது போல உள்ளார்ந்த அன்போடு, அல்லாஹ்வின் பொருத்தத்தை தவிர வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தங்கள் தலைவரை கொண்டாடிய சமுதாயம் உலக சரித்திரத்திலேயே கிடையாது என்பதில் உங்களுக்கும் கருத்து வேறுபாடு இருக்காது என்றே நம்புகின்றேன். அண்ணலாரை கொண்டாடுவது சரி அதற்காக வலிமார்களை ஏன் கொண்டாட வேண்டும் என நீங்கள் கேட்கலாம்.

    அண்ணலாரை ஏன் கொண்டாடினார்கள் சஹாபாக்கள்? அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி. வலிமார்களை கொண்டாடுவதன் நோக்கமும் அதுவே!
    என் ஷெய்கு அவர்களைப்பற்றி ஒரு கவிஞர் பாடிய இந்த கவிதையை பாருங்கள்:

    “ஃபைஜியை நான் கொண்ட காதல் - அண்ணல்
    முஹம்மதர் மேல் கொண்ட காதல்.
    முஹம்மதர் மேல் கொண்ட காதல் – அது
    அல்லாஹ்வின் மீதுள்ள காதல் .”

    அடுத்து, இறைநேசர்களின் சமாதியைப் பற்றிய கேள்விக்கு மேலே இணைக்கப்பட்டுள்ள ஷேக் அப்துல்லா ஜமாலி ஹஜ்ரத் அவர்களின் தர்ஹாக்கள் ‘இறைவனின் அடையாளச் சின்னங்கள்’ என்ற விளக்கத்தை பார்வையிட வேண்டுகின்றேன்.

    அன்புடன்,
    ஒ.நூருல் அமீன்

    கிளியனூர் இஸ்மத் said...

    மாஷா அல்லாஹ்!
    நீங்கள் அளிக்கும் பதில்களில் பொருமை, நிதானம் நீதம், மிளிர்கிறது.
    வல்லரஹ்மான் உங்கள் நாட்ட தேட்டத்தை நிறைவேற்றி தருவானாக ஆமீன்.

    புல்லாங்குழல் said...

    இஸ்மத் பாய்,

    உங்களின் மேலான நல்லெண்ணத்திற்கும் துவாவிற்கும் எனது நன்றி! நம் அனைவருக்கும் ஹக்கில் நிலைத்திருக்க அல்லாஹ் தவ்ஃபீக் செய்வானாக! ஆமீன்!

    Mail of Islam said...

    Masha Allah! அருமையான விளக்கம், அல்லாஹ் நம் அனைவரையும் பொருந்திக்கொள்வானாக!

    புல்லாங்குழல் said...

    மெயில் ஆஃப் இஸ்லாம், சுவனப்பிரியன் மற்றும் கருத்துகள் பதித்த அனைவருக்கும் நன்றி!

    புல்லாங்குழல் said...

    தமிழ் short stories (http://www.blogger.com/profile/18401032673361819097) எனும் புனை பெயரில் சகோதரர் ஒருவர் இரண்டு கேள்விகளை எழுப்பி இருந்தார்.

    1. அஸ்ரப் அலி தானவி அவர்களை ஏன் மதிக்கிறீர்கள் என்பது.

    2. அடுத்தது உங்கள் தரீக்கா தப்லீக்கின் கிளையா? (I have doubt about your tareeqa whether this one branch of Tableeq jamath)எனபது.

    என் மூலம் வெளியாகும் இந்த பதிலால் நம்மிடையே ஒரு புரிந்த்துணர்வு ஏற்பட அல்லாஹ்வை வேண்டியவனாய் இந்த பதிலை பதிவு செய்கின்றேன். யாரையும் குறை கூறுவது நம் நோக்கமல்ல.

    பதில்: அன்பு சகோதரா!,

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    பெருமானாரை நேசிக்கும் நேசர்களின் பாதணிகள் எங்கள் சிரசிலாகட்டும். அஸ்ரப் அலி தானவியின் தவறான கருத்துகளை நாங்களும் வெறுக்கின்றோம். அஷ்ரஃப் அலி தானவி அவர்கள் எங்கள் வழிகாட்டியோ. சில்சிலாவை சேர்ந்தவரோ அல்ல.

    அஷ்ரப் அலி தானவி அவர்கள் வஹாபிய பாணியில் எழுதியதோடு மட்டுமல்லமல்லாமல் தஸவ்வுபிலும் பெரும் பங்களிப்பு செய்திருக்கின்றார். திறந்த வெளியில் ஒருவர் பெருமானாரை பார்த்தேன் என சொன்னால் அல்லாஹ்வுக்காக அதை நிராகரிக்க வேண்டாம் எனவும் எழுதியுள்ளார்.

    இந்த அடிப்படையில் அவர் வாழ்வின் பின்னாட்களில் தன் தவறான கொள்கையிலிருந்து மீண்டிருக்கலாம் எனபது எங்கள் எண்ணம். அவரது உண்மை நிலை என்ன என்பதை பற்றி அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

    இன்னல்லாஹு யுஹிப்புத் தவ்வாபீன வ யுஹிப்புல் முத்த்தஹ்ஹிரீன் என சொல்லும் ஆயத்தை பாருங்கள். பெருமானாரின் வரலாற்றை பாருங்கள். பெருமானாரை தன் சொல், செயல்களினால் கடுமையாக நோவினை செய்தவர்கள் பின்னாளில் திருந்தி சஹாபாக்களான சரித்திரம் நம் முன்னே இருக்கிறது.

    ஆகவே நல்லெண்ணத்தின் அடிப்படையில் அவரது தஸவ்வுஃப் சம்பந்தப்பட்ட ஆதாபே ஷெய்கு போன்ற எழுத்துகளில் சிலவற்றை சுன்னத் ஜாமாத்தின் அகீதாவுக்கு முரண்படா நிலையில் எங்கள் சில்சிலா ஷெய்குமார்கள் கையாண்டிருக்கிறார்கள். பின்னாளில் தானவி அவர்களின் மீதுள்ள controversy யான கருத்துகளினால் அவ்வாறு கையாளுவதையும் கூட தவிர்த்து விட்டார்கள்.

    (அடுத்த பின்னூட்டத்தையும் பார்க்கவும்)

    புல்லாங்குழல் said...

    அடுத்தது. தப்லீக் பற்றி: என் ஷெய்கு அவர்கள் ஆரம்பத்தில் தப்லீக் ஜமாத்தில் இருந்து மக்களை நேர்வழியின் பால் அழைத்தவர்களாக இருந்த்தார்கள். அந்த நாளில் அவர்கள் ‘அபுல் பயான்’ என அழைக்கப்பட்டார்கள். அமல்களின் விசயத்தில் அழைப்பதில் நற்பணியாற்றும் தப்லீக் ஜமாத் அகீதா விசயத்தை முற்படுத்தாதவர்களாக முரண்பாடாக இருப்பதை கண்டு தப்லீக்கிலிருந்து விலகி திருகலிமாவின் அடிப்படையில் அல்லாஹ்வின் பக்கம் அழைக்கும் சேவையில் முற்றிலுமாக தங்கள் வாழ்நாளை அர்பணித்தார்கள். அபுல்பயான் பட்டம் கொடுத்தவர்களால் திரும்ப பெறப்பட்டது. வழிகேட்டில் போய் விட்டார் மௌலானா என பிரச்சாரம் செய்யப்பட்டது. நவூது பில்லாஹ்.
    அதற்காக எங்கள் ஷெய்கு அவர்கள் யாரையும் வெருக்கவும் இல்லை. பழிக்கவும் இல்லை. அமைதியாக தன் பணி தொடர்ந்தார்கள்.

    என் ஷெய்கு அவர்கள் தொடர்பான ஒரு சிறு சம்பவம் அவர்களை பற்றிய விளக்கத்திற்காக :

    எல்லா சிருஷ்டிகளையும் அன்பான கண் கொண்டு நோக்குவது தான் இறைஞானம் வந்ததற்கான அடையாளம் என்பார்கள் என் ஷைகு மகான். ஒரு முறை அவர்களின் வீட்டு வாசலில் ஷைகு அவர்களுடன் அமர்திருந்தோம். ஈராக் யுத்த நேரம். செய்தி கேட்பதற்காக டி.வியை வைத்தபோது தரீக்கத்திற்கு எதிரான கொள்கையுடைய ஒரு பேச்சாளர் சூஃபியாக்களை சாடினார். அதிலும் குறிப்பாக எனது ஷைகு அவர்களை மறைமுகமாக சாடினார். அங்கே இருந்த சீடர்கள் கோபமடைந்தார்கள். ஷைகு அவர்கள் முகத்தில் சிறு வருத்தமும் இல்லை. புன்னகை மாறாமலே இப்படி சொன்னார்கள், “ ஐனியத்தின் அடிப்படையில் அந்த போர்வையிலும் யாரென்று பாருங்கள் என்றவர்கள். பின்னர் செயல்பாட்டில் சிருஷ்டிகளுக்குள்ள கஷபி நிஸ்பத்தை முன் வைத்து அவர் எந்த நோக்கத்துடன் இப்படி பேசுகின்றாரோ தெரியவில்லை. ஆனால் ஒருவருக்கு தவறான உள் நோக்கமில்லை. அவரது ஆய்வின் படி தவறென்று என்னை விளங்கி கொண்டுள்ளார். அதன் விளைவாக அல்லாஹ், ரசூலின் பொருத்தம் நாடி என்னை ஏசினால். அதற்காக இறைவன் அவருக்கு நற்கூலி வழங்குவான் என்பது என் நம்பிக்கை” என்றார்கள்.

    அல்லாஹ், ரசூலின் மேல் உள்ள நேசம் தான் நம் அனைத்து சில்சிலாவின் அடிப்படை. அல்லாஹ்வின் மீது ஆணையாக அது தான் எங்களின் நிலைபாடும் ஆகும்.

    பிற அமைப்புகளின் செயல்பாட்டில் நாம் குறைகண்டாலும் இஹ்லாசானவர்கள் எல்லா அமைப்பிலும் இருக்கின்றார்கள் என்பதையும் இங்கே மறந்துவிட கூடாது. அந்த நல்லடியார்களின் பொருட்டால் இஸ்லாமிய சமுதாயம் முழுவதும் சுன்னத் ஜாமாத்துடைய சூஃபியாக்களின், அறிஞர்களின் வழிகாட்டலைப் பெற்று ஏகத்துவ மெய்ஞான பாதையில் ஒன்றிணைந்து வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்வை இறைஞ்சுகின்றேன்.

    ஹக்கை ஹக்காக, பாத்திலை பாத்திலாக விளங்கவும் அதில் நீடித்திருக்கவும் அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாக! ஆமீன்!

    வாஸ்தா பீரான பீர் சில்சிலா, வாஸ்தா சர்வரே காயுனாத், சர்தாரே தோ ஜஹான் முஹம்மது சல்ல்ல்லாஹு அலைஹி வஸல்லம்.

    ஸல்லல்லாஹு அலா முஹம்மது. ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

    வஸ்ஸலாம்,


    Shafiyath Rani said...

    அஸ்ஸலாமு அலைக்கும்,,
    தப்லீக் ஜமாஅத் கடந்த சில வருடங்களாக ,,வஹ்ஹாபிய செயல்பாடுகளினால்,,இருப்பதாலும்,,,அதன் தலைவர்கள் சிலர்
    பெருமானார் புகழ் தவிர்ப்பதாலும் ,,அவர்களை நாம் வெறுக்க வேண்டியதுள்ளது!

    அதற்காக எல்லோரையும் ,,வஹ்ஹாபிகளாக ,,நினைக்க,வெறுக்க ,,நமக்கு உரிமை இல்லை!


    ஒரு தரீகா இவ்வளவு தூரம் ,,வளர்ந்து ,,அதன் கனிகளாய் ,,மிகப்பெரிய இறைநேசர்கள் ,,இருந்துகொண்டும்,,
    அதன் சுவைகளாய்....அதன் முரீதீன்கள் இருந்துகொண்டும் இருக்கிறார்கள் என்றால் ..?
    பெருமானார் ஹுப்பு.....இல்லாமல் ஒருக்காலும் முடியாது!

    யார் என்ன சொன்னாலும்,,,ஆஷிகே ரசூல்களையும்,,,ஆஷிகே ஷெய்கு களையும்...சிதைத்து விட முடியாது!

    ஆகவே,,சகோதரர் நூருல் அமீன் விளக்கங்களை நான் மிகவும் வரவேற்கிறேன்!....நேசிக்கிறேன்!
    அல்லாஹ் சகோதரருக்கு நீண்ட ஆயுளையும்,,,,லதுன்னியத்தான இல்மையும் தர ,,வேண்டுகிறேன்!

    Shafiyath Rani said...

    அண்ணலாரின் புனித இதயத்தில் பொதிந்திருந்த இறைஞானத்தை அலி(ரலி) அவர்களைக் கொண்டும், அவர்களின் மாணவர் ஹஸன் பசரி(ரலி) அவர்களைக் கொண்டும் வெளிப்படுத்திய இறைவன் வரிசையாக ஆயிரக்கணக்கான் வலிமார்களைக் கொண்டு இது வரை பாதுகாத்து வருகின்றான். இந்த ஞானவழி பாதை தரீக்கா எனும் பெயரில் அறியப்படுகின்றது. Masha Allah! Yevvalavu Haqaana vaarthaikal? அல்லாஹ், ரசூலின் மேல் உள்ள நேசம் தான் நம் அனைத்து சில்சிலாவின் அடிப்படை. அல்லாஹ்வின் மீது ஆணையாக அது தான் எங்களின் நிலைபாடும் ஆகும்.
    Alhamdulillah! பிற அமைப்புகளின் செயல்பாட்டில் நாம் குறைகண்டாலும் இஹ்லாசானவர்கள் எல்லா அமைப்பிலும் இருக்கின்றார்கள் என்பதையும் இங்கே மறந்துவிட கூடாது. அந்த நல்லடியார்களின் பொருட்டால் இஸ்லாமிய சமுதாயம் முழுவதும் சுன்னத் ஜாமாத்துடைய சூஃபியாக்களின், அறிஞர்களின் வழிகாட்டலைப் பெற்று ஏகத்துவ மெய்ஞான பாதையில் ஒன்றிணைந்து வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்வை இறைஞ்சுகின்றேன்.

    ஹக்கை ஹக்காக, பாத்திலை பாத்திலாக விளங்கவும் அதில் நீடித்திருக்கவும் அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாக! ஆமீன்!
    Ithuthaan yengaludaiya Haqaana Piraarthanai! Shafiyath Qadiriyyah! (Ashiqe Rasool)

    புல்லாங்குழல் said...

    சகோதரி ஷஃபியத் காதிரியாவுக்கு,
    உங்கள் மேலான புரிந்துணர்வுக்கும், துவாவுக்கும் நன்றி!

    இன்னொரு நிஸ்பத்தில் சோதனையை தந்தவன் தான் உங்கள் நிஸ்பத்தில் ஆறுதலும் தருகின்றான். அல்ஹம்துலில்லாஹ். மென்மேலும் உங்கள் துவாவில் ஆதரவு வைக்கின்றேன்.

    வஸ்ஸலாம்

    HM Rashid said...

    ஜஷாக்கல்லாஹ்!!!மிகவும் மதிப்புமிக்க ஒரு பதிவு..“அளவற்ற அருளாளன்
    அவனைப் பற்றி
    ஆழ்ந்து அறிந்தவர்களிடம் கேளுங்கள்(25:59)”ரப்பு சுப்ஹானஹுத்தாலாவே சொல்லிவிட்ட பிறகு இதில் வேறு மாதிரி சிந்திபதற்க்கு என்ன உண்டு???அகக்கண் விழிப்படைந்த ஒரு குருவிடம்தான் அதை நீ அடைய முடியும். அந்த அறிவை நூல்கள் தராது. நூல்களுக்கு நூலான இறைமறை திருக்குர்ஆனே இதைச் சொல்கிறது.மேலும் ஜனாப் ரமீஸ் பிலாலி அவர்கள் தனது ஒரு கட்டுரையில் //குரு-சிஷ்ய வழிமுறையை விளங்காதவர்கள் ஆயிரம் விதங்களில் விமர்சனம் செய்வார்கள். அவற்றைச் செவியில் போட்டுக்கொள்ளக் கூடாது. குழப்பங்கள் ஆன்மிக சிகிச்சையின் பத்தியத்தை முறித்துவிடக் கூடும்.

    வெறும் ஏட்டுக்கல்வியிலிருந்து உள்ளுதிப்பின் ஞானம் மிகவும் வேறுபட்டது. திருக்குர்ஆனை எந்த ஒளியில் படித்து விளங்கினால் அது சரியாக இருக்குமோ அந்த ஒளியை இதயத்தில் நிரப்பும் பயிற்சியையே ஆன்மிக குருநாதர் தருகிறார்.

    அதாவது, வெளிரங்கமான மார்க்க அறிவு மட்டுமே கொண்ட அறிஞர்கள் (ஆலிம்கள்) உங்களுக்கு மேலும் மேலும் தகவல்களை மட்டுமே தர முடியும். அவர்களால் உங்களை மாற்றி அமைக்க முடியாது. அந்தரங்கமான ஞானம் கொண்ட இறை ஞானிகள் (ஆரிஃபீன்) மட்டுமே உங்களில் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.

    இதற்கு நல்லதொரு உதாரணம் மௌலானா ரூமி (ரஹ்) அவர்கள். ஆயிரக் கணக்கான மாணவர்களுக்கு மார்க்கக் கல்வியைக் கற்பிக்கும் ஆசிரியராக (மௌலவி) அவர்கள் இருந்தார்கள். எனினும், உள்ளுதிப்பின் ஞானம் உண்டாக அவர்கள் ஒரு குருநாதரின் அடிமை ஆக வேண்டி இருந்தது. அவர்களே சொல்கிறார்கள்:

    “மௌலவி ஹர்கிஸ் ந ஷுத் மௌலாயே ரூம்
    தா குலாமே ஷம்செ தப்ரேஸி ந ஷுத்”
    (ஷம்ஸ் தப்ரேஸின் அடிமையாக ஆகாதவரை மௌலவியாக (மார்க்க ஆசிரியராக) இருந்த நான் ஆன்மிக வழிகாட்டியாக மாற முடியவில்லை)
    ஆன்மிகத்தின் மேலான படித்தரங்களை எய்தப் பெற்ற பின் மௌலானா ரூமி நமக்குச் சொன்னார்கள்:

    “ஸத் கிதாபொ ஸத் வரக் தர் நார் குன்
    சீனா ரா அஸ் நூரெ யார் குல்ஸார் குன்”
    (நீ புரட்டிக் கொண்டிருக்கும் நூறு நூறு நூல்களையும் தாள்களையும் நெருப்பில் போட்டுவிடு; உன் இதயத்தை நண்பனின் ஒளி கொண்டு பூஞ்சோலை ஆக்கிவிடு)//அல்ஹம்துல்லில்லாஹ்!!!!நமது சங்கை மிகு செய்குமார்கள் வழியுறுத்துவது இறைநேசம் ஒன்றே நல்லோர்,தீயோர் என பிறித்தறியாவண்ணம் நேசம்பாராட்ட வைக்கும்,,,என்ன ஒரு சத்திய வார்த்தைகள்!!!வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று வாடவைத்தது எது???எதிரியில்லை,எதிரியில்லை எதிரி என்பதில்லையே!எதிரி என்ற போர்வையிலும் என் இலாஹ்வின் எல்லையே என்று பாடவைத்ததுவும்,பாடிய வண்ணம் பேன வைத்ததுவும் உண்மையான ஸூஃபியாக்களின் ஆன்மிக தொடர்ப்பே!!!ரஷீத் - நாகை

    Qaseeda Tk said...

    மாஷா அல்லாஹ் உங்கள் விளக்கம் அருமையானது, தெளிவானது. நம் மக்களிடம் ஆராய்ந்து பார்த்து தெளிவு பெறும் பண்பு குறைந்து விட்டது. இதற்கு காரணம் பொறாமை என்னும் இருள் உள்ளத்தை சூழ்ந்து உள்ளது. அல்லாஹ் நம் அனைவருக்கும் தூய்மையான உள்ளத்தை தந்து தெளிவான அறிவை தந்தருள்வானாக! ஆமீன்!

    புல்லாங்குழல் said...

    கஸீதா டிகே உங்கள் புரிதலுக்கு நன்றி சகோ!

    Embroidery House said...

    Masha Allah! Nalla Vilakkam

    Mail of Islam said...

    "ஆடுகள் சண்டையிட்டுக் கொண்டால் ஓநாய் ரத்தம் குடிக்க காத்திருக்கிறது" உண்மையான வார்த்தை. ஓநாய்களிடம் இருந்து அல்லாஹ் நம் முஸ்லிம் சமுதாயத்தை பாதுகாப்பானாக!

    Unknown said...

    vum nandri!!!

    Ismail Bilali said...

    Masha Allah,
    very much pleased with the explanation, still we are expecting more n more spiritual desciplines 4m you.

    Unknown said...

    Masha Allah,

    M.Abdul Khadar said...

    அஸ்ஸலாமு அலைக்கும்.

    தங்களின் இப் பதிவைப் பார்க்க முடியாதபடி முதலில் எனது இயல்பும் அதன் பின் எனது கணினியின் IE இணைய உலாவியும் கூட்டணி சேர்ந்து கொண்டன. உங்களின் து ஆ வை இந்த விஷயத்தில் இழக்க நேரிட்டது. ஒரு நல்ல முயற்சியை உற்சாகமாய் வரவேற்கும் சொல், செயல் இல்லையே என்ற குற்றச்சாட்டுக்கு உரியவனாகி விட்டேன். ஆனால் வரவேற்கும் எண்ணம் இருப்பதை introspect செய்ய முடிகிறது.

    மர்ஹூம் அப்துறஹீம் அவர்களின் அவ்லியாக்கள் சரிதம் வாசித்து இருக்கிறேன்.சமீபத்திய வரலாறு, செய்திகளைத் தொகுத்தது பெரிய சேவை.

    தனிப்பட்ட முறையில், நம் மார்க்கத்தை குறிப்பாக நம்பிக்கை சார்ந்த விஷயங்களை சொல்பவர்களது தோற்றம், சொல்,செயல், பின் பற்றுபவர்களின் செயல்பாடுகள் ஆகியன என்னைப் பெருமளவு பாதிக்கும். ( I.Q, G.K, History, Arabic ஆகியன ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை; நான் என்ன செய்ய? தக்லீது தான்; எனது உள்ளுணர்வு- ஷைஹுமார்களின் வழிதான்.)

    இயல்பாக வருகிற சந்தேகங்களை வஹியின் மீதே கொண்டால் விளைவு என்னவாகும் என்பதை எடுத்துக் காட்டியவர்கள் எனது ஷைஹுணா அவர்கள்.

    எனக்குப் பிடித்த உங்களின் ஒரு போங்கு: "பிற அமைப்புகளின் செயல்பாட்டில் நாம் குறைகண்டாலும் இஹ்லாசானவர்கள் எல்லா அமைப்பிலும் இருக்கின்றார்கள் என்பதையும் இங்கே மறந்துவிட கூடாது. "

    அப்துல் காதிர் பிலாலி.

    Anonymous said...

    allahuvai patri neenaikum manitharkaluku mathiel allahuvai neethukundeh erupathu eppadi enbathai tharikath than sollum unkal sevai thodara duwa salam

    Anonymous said...

    masha allah oru maa perum nallorgalin nal thoguppu ...allahu allah..manathukku avargalidam duaa seya vaithu engal kangal nanaya vaitha thaangalin ...arya muyachikku alhamdlillah..allah ungalukku khair seyvaanaaga

    புல்லாங்குழல் said...

    கருத்துகளை பதிந்த உங்கள் அனைவருக்கும் என் பணிவான நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். ஜஸாகல்லாஹ் ஹைர் ஃபித்தாரைன்.

    Anonymous said...

    Jazakallahu Fidhaarain....

    Anonymous said...

    மாஷா அல்லாஹ்! ஜஷாக்கல்லாஹ்!!!மிகவும் மதிப்புமிக்க ஒரு பதிவு..“ எனது ஷைக் மார்களை பார்க்கும்போது மனதில் மனதில் அளவிட முடியாத சந்தோசம் ஏற்படுகிறது . இந்த மகான்கள் ஆரம்பித்து நடத்திய மதரஸாவில் கல்வி பயின்றேன் என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்வேன் .காரணம் எங்கள் மதரஸாவில் கிதாப்களை பார்த்து மார்க்கம் கற்று தருவதில்லை .அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வெளியான வெளியாகிக்கொண்டே இருக்கின்ற கல்வி . எனது ஷைக் நாயகம் கண்மணி ஆரிப்பில்லாஹ் ஜமாலி ஷாஹ் நூரி சர்க்கார் கிப்லா அவர்களின் கரம்பற்றிய காரணத்தினால் கிடைத்த கல்வி அது அல்லாஹ் யாருக்கு நாடுகின்றானோ அவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் கல்வி அது அந்த கல்வியை இந்த மகான்களிடமிருந்து மட்டுமே நாம் பெற்றுக்கொள்ள முடியும் .