தோழமையுடன்

Wednesday, November 30, 2011

‘மனம் நவீனமடையாமல் கவிதைகளும் நவீனமடையமாட்டாது’ - அனார் பேட்டி


கவிதை எழுதும் ஆர்வமுள்ளவர்களுக்கு சகோதரி அனாரின் பேட்டியில் விசயமிருக்கிறது என்பதால் வார்ப்புகள் இதழிலிருந்து நன்றியுடன் மீள்பதிவு செய்துள்ளேன்.

Tuesday, November 29, 2011

இஸ்லாத்தில் இசை – நூல் அறிமுகம் : ஏபிஎம். இத்ரீஸ்


இஸ்லாத்தில் இசைஎன்ற கருத்தாக்கம் அறபு முஸ்லிம் சிந்தனைப் பரப்பில் மட்டுமல்ல இஸ்லாம் பரவிய ஆசிய சமூகங்களிலும் பெரும் வாதவிவாதங்களை இன்றுவரை கிளறிவிட்டுள்ள ஒரு விவகாரம் என்பதை நாம் நன்கறிவோம்.

Saturday, November 26, 2011

கடவுளுக்கு உருவம் இல்லை - வாரியார் சுவாமிகள்


கடவுளுக்கு உருவம் இல்லை என்பது தான் இந்து மத கொள்கை என்கிறார் வாரியார் சுவாமிகள்.  

அருட்கொடையாளர்கள் என்ற தலைப்பில் மகத்தான ஆளுமைகளைப் பற்றி ஆபிதீன் பக்கங்களில் தொடர் கட்டுரை எழுதி வரும் மஞ்சக்கொல்லை ஹமீது ஜெஹபர்அண்ணன் அவர்கள் தந்துதவிய தினமணி கட்டிங் இணைப்பு நன்றியுடன் கீழே தரப்பட்டுள்ளது.

நக்கீரர் குலாம் காதிறு நாவலர் - ஜே.எம். சாலி


'சமநிலைச் சமுதாயம்' இதழுக்கும், அதில் வந்த இந்த தகவலை மின்னஞ்சலில் அனுப்பிய  நண்பர் ஈமான் டைம்ஸ் முதுவை ஹிதாயத்துக்கும் நன்றியுடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது.

Saturday, November 19, 2011

இறந்தவர் பேசிய வார்த்தைகள்


நான் எவ்வளவு உரக்க கத்தி பேசினாலும் மனிதர்கள் யாருக்கும் கேட்கப் போவதில்லை. நான் இறந்து போய் எத்தனை காலம் கடந்தது எனக்குத் தெரியவில்லை. ஒரு வேளை இப்போது தான் நான் இறந்து போனேனோ…..

Thursday, November 17, 2011

மாலேகான் குண்டுவெடிப்பு: அப்பாவிகளை சிறையில் அடைத்த அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்களா?


 இஸ்லாமிய தீவிரவாதி, இந்து தீவிரவாதி என தீவிரவாதிகளுக்கு மதவர்ணம் பூசி நேசமும், பகையும் பாராட்டும் நோய் மனப்பான்மை ஒழியட்டும். தீவிரவாதத்தை ஒழிப்பதில் அனைவரும் ஒன்றுபடுவோம். அதே நேரத்தில் ஆயிரம் குற்றவாளிகள் தப்பி விடலாம் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது என்பதையும் நினவில் கொள்வோம். ஒரு சாதாரண மனிதனின் நிம்மதியான வாழ்வு தவறான குற்றச்சாட்டுகளால் சிறைகம்பிகளுக்கிடையே சிதைக்கப்படும் போது அவனும் அவன் குடும்பமும் படும் வலியை,வேதனையை போக்கி எது தான் ஈடு செய்யும்.  

Wednesday, November 16, 2011

கலைந்து போன கனவு ராஜ்ஜியம் –சிதம்பர பிள்ளை சிவக்குமார்


 'ஆபிதீன் பக்கங்களில்' வந்த இந்த சிறுகதையை படிப்பதுடன் கட்டாயமாக அதன் பின்னூட்டங்களையும் அவசியம் படியுங்கள். இலங்கையை சேர்ந்த நம் அன்பு சகோதர சகோதரிகளின் உணர்வுகள் மாம்சம் வார்த்தையானது போல் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. 


Thursday, November 10, 2011

வழிகாட்டுகிறது கோவை! - ஆளுர் ஷா நவாஸ்



நாடு அதை நாடு
இந்தியா…
என் தாய்நாடும் அல்ல
தந்தைநாடும் அல்ல
இந்தியா…
என் நாடு!
                   கவிஞர் இஜட். ஜபருல்லா

இந்து, கிருஸ்தவ சகோதரர்களுடன் முஸ்லிம்கள் கைகோர்த்து சகோதரர்களாக இந்தியாவின் முன்னேற்றத்திற்கு உழைக்க வேண்டும்  என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை. அதே நேரத்தில் கல்வி, வேலை வாய்ப்பு என எல்லா வகையிலும் போதிய பிரதி நிதித்துவம் இல்லாமல் பின் தங்கி நிற்கும்  சிறுபான்மை சமுதாயம் ஒருங்கிணைந்த ஓட்டு வங்கியாக தங்களை நிறுவிக் கொள்வதை நியாய உணர்வு உள்ளவர்கள் பிரிவினைவாதமாக கருதமாட்டார்கள்.