தோழமையுடன்

Wednesday, September 24, 2014

ஒரு வேளை நீங்கள் காணாமல் போனால் அதற்கு நான் பொறுப்பல்ல!.


 படைக்கப் படும் முன் சிருஷ்டிகளின் நிலை நத்திங் (Nothing) அல்ல நோ திங் (No thing) _ ஆன்மீக குருநாதர் ஹக்கிமிஷாஹ் ஃபைஜி
 

இதன் விளக்கத்தில் சீரியசாக உள்ளே புகும் முன் கொஞ்சம் முல்லா…

தி கிரேட் முல்லா நாஸீருத்தின்…

ஒரு முறை முல்லா நஸீருத்தீன் ஒரு விழாவுக்கு சென்றிருந்தார். அந்த விழாவில் கூட்டம் நிரம்பி வழிந்தது, அன்று இரவு சத்திரத்தில் எல்லோரும் படுத்துறங்கினர். அந்த கூட்டத்தில் நாம் காணாமல் போய்விட்டால் என்ன செய்வது என்ற கவலை முல்லாவிற்கு வந்தது. அதனால், தூங்கும் முன் தன் காலில் ஒரு கருப்பு கயிறை கட்டிக் கொண்டார். கயிறை கட்டிக் கொண்டிருப்பது தான் “நான்” என தன் அடையாளத்தை தனக்குத்  தானே சொல்லிக் கொண்டு, இனி நான் காணாமல் போனாலும் கயிறை வைத்து கண்டு பிடித்துவிடுவேன் என்று மன நிறைவுடன் படுத்துறங்கத்  துவங்கினார்.

 பக்கத்திலிருந்து இதை கேட்டு கொண்டிருந்த ஒருவர், முல்லா நன்கு உறங்கியவுடன் முல்லாவின் காலில் இருந்த கயிற்றை கழற்றி தனது காலில் கட்டிக் கொண்டு  உறங்கிவிட்டார்.

Monday, September 15, 2014

முகநூலும் ஆன்மீகத் தேடலும்

 ஃபேஸ்புக் எனும் முகநூல் ஆன்மீகம் பகிர்வதற்கான ஊடகமா?
 
ஆன்மீகத்தின் உயர்வை வைத்து பார்த்தால் இதற்கு ‘இல்லை’ என்பது தான் மிகவும் சரியான பதில்.

ஆனால் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்று முகநூல் நல்லதையும் கெட்டதையும் மிக விரைவாக பரப்பும் ஓர் ஊடகமாக சகல துறைகளிலும் கிளைபரப்பி நிற்கிறது. 

அதில் அற்ப விசயங்களை கூட பகிர்ந்து கொள்ளும் எத்தனையோ பேர்களுக்கு மத்தியில் ஆன்மீகம் தேடும் என் முகநூல் நண்பர்களை விசேசமாக பாராட்டாமல் இருக்க முடியாது.

அவர்கள் ஆன்மீகம் அறிந்தவர்கள், அறிய முயல்பவர்கள் என ஆன்மிகத்தின் பல தரப்பட்ட நிலையில் உள்ளவர்கள். 

அவர்களுக்காகவும் இன்னும் எங்களைப் போன்ற உங்கள் அனைவருக்காகவும் இந்த பகிர்வு……

Thursday, June 5, 2014

கண்ணியமிகு காயிதே மில்லத்- பூ.கொ.சரவணன்



விகடனில் வந்த கட்டுரையை படித்து விட்டு 


"இம்மாதிரி தற்போதையவர்களும் இருந்துவிட்டால் - ஏன் மத சண்டைகள் வரப்போகின்றன" என்கின்றார் திரு. வைத்தீஸ்வரன் என்ற சகோதரர்.

 "திரு காயிதே மில்லத் போன்றவர்கள் நம்மிடையே இல்லாததே , நாம் ஒருவரை ஒருவர் தவறாக புரிந்து கொள்ள நேரிடுகிறது. கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களை நிணைவு கூர்ந்து பெருமை கொள்வோம்" என்கின்றார் திரு ராஜு என்ற சகோதரர்.

நீங்களும் படித்து உங்கள் கருத்தை பகிருங்களேன்.

Saturday, May 17, 2014

மோடியின் ஆட்சியில் நாம் செய்ய வேண்டியது என்ன?

Enter the Dragon 
"கடந்த பத்தாண்டுகால காங்கிரஸ் ஆட்சி மீதான வெறுப்பே இப்படியொரு தேர்தல் முடிவு வர முக்கிய காரணம்.. 

மோடி அலை இருந்தது உண்மை என்றால் ஏன் அது தமிழகத்தில் எதிரொலிக்கவில்லை..

எது எப்படியாயினும் இனிவரும் 5 ஆண்டுகள் ஜனநாயகசக்திகளுக்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது என்பது மட்டும் நன்றாக தெரிகிறது" எனும் கார்டூனிஸ்ட்பாலாவின் Enter the dragon எனும் கார்டூன் தான் நாம்  இங்கே காண்பது.

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பாலாவின் கார்டூனை தொடர்ந்து மனதில் சில சிந்தனைகள் எழுந்தன...... 
  

Wednesday, May 7, 2014

தூரமான நெருக்கம்!

 வீட்டுகுள் நுழைந்ததும் “என்னங்க அஹ இன்னைக்கு திரும்பி வந்தாஹங்க!” என்றாள் என் மனைவி.
 
“எஹ?” என்றதும்.

“தாவா ஆண்டிங்க!”  புன்னகையுடன் அவள் சொன்னதும், அதே கேலிப்புன்னகை என் முகத்திலும் பரவியது.

‘தாவா ஆண்டி(Dawa Aunty) ’ என அழைக்கப்படும் 65 வயது மதிக்க தக்க மூதாட்டி நேற்று தான் எங்கள் வீட்டுக்கு முதன் முறையாக வந்தார். நடுப்பகல் உச்சி வெயில் நேரத்தில் வியர்க்க விருவிருக்க வந்த தாவா ஆண்டியை மிகுந்த மரியாதையுடன் உள்ளே அழைத்து சென்று உபசரித்தாள் என் மனைவி.

அதிலும் ‘நான்’ எழுதிய ஆன்மீக புத்தகத்தை குறித்து “ ரெண்டு தடவ படிச்சேன்மா. ரொம்ப நல்ல புக்கு. உன்னட மாப்பிளை ரொம்ப புத்திசாலிம்மா” என்று தாவா ஆண்டி சொன்னதும் ‘தன் கணவனை ஆன்றோன் என சொல்லக் கேட்ட’ என் மனையாள் ‘மணந்த போதினும் பெரிதுவந்து’ தாவா ஆண்டியையும் பெரிதுவக்கத் துவங்கினாள். 

Thursday, February 13, 2014

விடுதலை பெற்ற அறிவு!



The Diffusion of Ibn 'Arabi's Doctrine   என்ற Michel Chodkiewicz ன் கட்டுரையின் ஒரு பகுதி இது. இதை வாசித்து பாருங்கள்;
 
இரண்டாம் உலகப் போருக்கும் சில வருடங்களுக்கு முன்பாக, புகழ் பெற்ற எழுதாளர் நிக்கல்ஸன் தன்னுடைய எகிப்திய மாணவராகிய ஒருவரிடம் இப்னு அரபி (ரஹ்) அவர்களின் படைப்புகளை படிக்கச் சொன்னார். இந்த மாணவர் தான் பின்பு வெளியான பிரபல்யமான “The Mystical Philosophy of Muhyid Din Ibnul 'Arabî” எனும் நூலின் ஆசிரியர் A.A.அஃபிஃபீ. 

Tuesday, February 11, 2014

அன்பான சூஃபி வழி பயணிகளுக்கு சில வார்த்தைகள்.

 இந்த கட்டுரை ஆன்மீக ஞான பயணிகளை  ஓர் நுட்பத்தின் பக்கம் சிந்திக்க அழைக்கும்  கவன ஈர்ப்பு. அதனால் அதில் பரீட்சயம் இல்லாதவர்கள்  படிக்கும் போது சில கலைச் சொற்கள் புரியாவிட்டால் தகுந்த ஆன்மீக அறிஞர்களின் வாயிலாய் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள். சிரமத்திற்கு என்னை மன்னிக்கவும்.
 
குர்ஆனில்  இலாஹ் என்ற சொல்லும், ரப்பு என்ற சொல்லும் மிகவும் நுட்பமான வேறுபாட்டுடன் பயன் படுத்தப்பட்டுள்ளது. உலூஹிய்யத் – ருபூபிய்யத் இரண்டின் வேறுபாடு பற்றி உங்கள் சிந்தனைக்கு சில சுருக்கமான வார்த்தைகள்:

Sunday, January 19, 2014

Existence என்ற இருப்பின் அடிப்படையில் பிரபஞ்சமும் கடவுளும்

பிரபஞ்சம், கடவுள் என்பதைப் பற்றி Existence என்ற இருப்பின் அடிப்படையில் பல்வேறு கருத்துகள் உலாவுகின்றன.

வானம், பூமி, மலை, கடல் என எங்கும் பொருள்கள் மட்டும் தான் உள்ளது. கடவுள் என்பது நமது கற்பனை. உண்மையில் இல்லவே இல்லாத ஒன்று என்பது பொருள் முதல்வாதிகள் (Materialist) என்னும் இறைமறுப்பாளர்களின் கருத்து.

சிருஷ்டிகள் தான் உலகில் இருக்கிறது. சிருஷ்டிகளை விட்டும் தனியே தூரமாக சிருஷ்டித்தவன் இருக்கின்றான் என்பது இறைநம்பிக்கையாளர்களில் சிலரின் நம்பிக்கை.

இவற்றுக்கு முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் இருப்பது எல்லாம் அவனே என்பது வேறு ஒரு சிலரின் நம்பிக்கை.

உண்மையில் இருப்பது யார் ? பொருளா? இறைவனா? இல்லை இரண்டுமா?

இந்த விசயத்தை முன் தீர்மானங்களை கொண்டு அல்லாமல் குர்ஆன், ஹதீஸ் மற்றும் அறிவியல் விளக்கத்தின் வெளிச்சத்தில் விளங்க முயற்சிப்போம்.

Wednesday, January 8, 2014

வஹ்தத்துல் உஜுது பற்றிய தெளிவு - கலாநிதி தீன் முஹம்மது



உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.