தோழமையுடன்

Saturday, July 28, 2012

படைப்பதனால் என் பெயர் இறைவன்!

 படைத்தல் என்றால் சிருஷ்டிகளுக்கு இருப்பை (existence) வழங்குதல் என பொருள்

எந்தப் பொருளையும் படைக்க முடியாதவற்றையா (இறைவனுக்கு) இணை வைக்கின்றனர்?அவைகளும் (இறைவனால்) படைக்கப்பட்டவையே.(7:191) என்கிறது இறைவேதம்.

‘படைக்குதல்’ என்பதை இறைத் தன்மையென்கிறது இந்த இறைவசனம்.

அதே நேரத்தில், இறைவன் தன்னை ‘படைப்பாளர்களில் அழகிய படைப்பாளன்’ என பல படைப்பாளர்களை தன்னுடன் ஒப்பிட்டு கூறுகின்றான்.

அப்படி என்றால் படைக்கும் சிருஷ்டிகளும் இறைத் தன்மை பெற்றவையா? 

Friday, July 27, 2012

இலக்கிய வாசிப்பும் குர்ஆன் வாசிப்பும்

இது ரமலான் மாதத்திற்கு முன்பு எழுதியது. 
வேலை பளுவினால் சற்று தாமதமாக வெளியிடப்படுகின்றது.

 சுந்தரராமசாமி தமிழ் இலக்கியத்தில் ஒரு மகத்தான ஆளுமை. அவரதுஜே.ஜே. சில குறிப்புகள்என்ற நாவல் என்னை கவர்ந்த அளவு அவரதுஒரு புளியமரத்தின் கதைஎன்னை கவரவில்லை. எழுத்தாளர் ஜெயமோகனோ புளியமரத்தின் கதையை தமிழின் முக்கியமான நாவலாக குறிப்பிடுகின்றார். நல்ல இலக்கியம் என்று சொல்ல பட்ட வேறு சில நூல்களும் வாசிக்க சலிப்பூட்டுபவைகளாக எனக்கு இருப்பதை கண்டேன். சிந்தித்து பார்த்ததில் என் புரிதலின் போதாமை இது. இலக்கிய வாசிப்பில் எனக்குள்ள பயிற்சி குறைவின் விளைவு இது  என்பதை உணர்ந்தேன்

Wednesday, July 18, 2012

ரமளான் வருகிறது உன் கோப்பையில் காதல் தீயை ஊற்றிக் கொள்!

 ரமளான்!
இது இறைக்காதலர்களின் மாதம்.
எட்டா? இருபதா? என்ற கத்திச் சண்டை எல்லாம்
சற்றே நிறுத்தி வைப்போம்.
முகத்தோடு முகம் நோக்கும்
காதலர்களின் நந்தவனமிது!
தயவு செய்து இந்த குளத்தில் யாரும் கல் எறிய வேண்டாம்.