நம் தாயகத்தின் தவப்புதல்வர்களில் ஒருவரான தத்துவ மேதை திரு. ஜே.கிருஸ்ணமூர்த்தி அவர்கள் கேட்பது, உன்னிப்பாக கேட்பது (hearing and listening) என்பதன் வித்தியாசத்தை இப்படி விளக்குவார் :
கவனத்துடன் கேட்பது என்பதில் ஒப்புக் கொள்ளுதலோ மறுத்தலோ இல்லை. உங்களிடம் பேசுபவர் எதை சொல்ல விழைகிறார் என்பதை பேச்சளவில் மட்டுமின்றி ஆழமாக புரிந்து கொள்ளவே நீங்கள் கவனத்துடன் கேட்கிறீர்கள். அவர் சொல்வதை எதிர்த்து பேசினாலோ, உங்கள் தனிப்பட்ட கருத்தை திணிக்கப் பார்த்தாலோ கவனமாக கேட்பது என்பது இல்லாமல் போகிறது. விமர்சனங்களோ, மொழிபெயர்ப்புகளோ செய்யாமல் சொல்லப்படும் விசயத்தை கவனத்துடன் கேட்பதால் அடிப்படை மாற்றம் பெற்ற முழுமையான புரட்சி, உள்ளாழ் மனதில் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அத்தகைய புரட்சி மட்டுமே மதிப்பிற்குரியது. அடையத் தக்கது என்பார் ஜே.கே.
உயிர்மையில் வெளிவந்த அ.முத்துகிருஷ்ணன் அவர்களின் இந்த அருமையான கட்டுரை நன்றியுடன் மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது. முத்துகிருஷ்ணனின் இந்த கட்டுரை நம் அகசெவியின் கவனமாக கேட்டலை வேண்டி நிற்கிறது.