தோழமையுடன்

Showing posts with label தஸவ்வுஃப். Show all posts
Showing posts with label தஸவ்வுஃப். Show all posts

Tuesday, October 30, 2012

சிந்தனை செதுக்கிய சிற்பம் ‘நான்’


 நாம் வளரும் சூழலுக்கு ஏற்ப நம்மைப் பற்றியும் நமக்கு வெளியே உள்ள உலகத்தைப் பற்றியும் நம் கருத்துருவாக்கம் (conception) இன்னும் கொள்கைகள்(idealogy) நமது மனதில் உருவாகின்றன. நமது பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், கேட்ட பிரசங்கங்கள், படித்த புத்தகங்கள், பார்த்த டி.வி., சினிமாக்கள், பழகிய சூழ்நிலைகள், சந்தித்த வெற்றி, தோல்வி அனுபவங்கள் அனைத்திலிருந்தும் நாம் கற்றுக் கொண்ட அல்லது கற்பித்துக்கொண்ட செய்திகள் மனதில் பிம்பங்களாக பதியப்படுகின்றன.

Wednesday, September 12, 2012

ஆன்மீகத்தை வசைபாடும் பெயரில்லாத உங்களுக்கு!

 மாற்று கருத்துகளை வைக்கும் பெயர் வெளிடாத சகோதருக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

முதலில் ஒரு சின்ன வேண்டுகோள்: குர்ஆன், ஹதீஸின்  பொருளை விருப்பம் போல திரித்து கூறி இஸ்லாமியர்களிடையே கொள்கை குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு போலிபெயர்களில் சிலர் உலாவி வரும் நேரத்தில் உங்கள் இஸ்லாமிய அடையாளத்தை - குறைந்தபட்சம் பெயர், மின்னஞ்சல் என்ற அளவிலாவது வெளியிடுங்கள். நீங்கள் வலைத் தளம் வைத்திருப்பவர் என்றால் அதன் முகவரியை தருவது இன்னும் சிறப்பு.

Friday, August 12, 2011

தஸவ்வுப் - அதன் தோற்றம், வளர்ச்சி, பங்களிப்புகள்

குறிப்பிடத் தக்க இஸ்லாமிய அறிஞர்களில்  ஒருவரான டாக்டர் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்கள் இலங்கையில் உள்ள நளீமியா கல்லூரியின் டைரக்டராவார்கள். 

இஸ்லாமிய ஆராய்சியாளரான அவர்களின் 'தஸவ்வுப்' பற்றிய  கட்டுரை நன்றியுடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது. இது தஸவ்வுப் பற்றிய தவறான புரிதல்களை உடையவர்களுக்கு விளக்கம் அளிப்பதாக உள்ளது.