தோழமையுடன்

Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Sunday, February 10, 2019

வாசிப்பின் அகமும் புறமும்


எழுதப்படாத கவிதைக்கு மொழிகள் கிடையாது

கவிதைகள் உள்ளிருப்பால் அரூபவாசிகள்

கவிஞனின் மொழியே கவிதையின் மொழியாகிறது

மொழிஎழுத்துவார்த்தைகள் எல்லாம் வெளிப்பாட்டின் சாதனங்கள்

கண்களால் வாசிக்கப்படும் வார்த்தைகளின் வழியே தான் இதயம் கவிதையில்
நுழைய  வேண்டும்

இதயத்தின் கவிதை வாசிப்பு ஆழ்மனப் பயணம்
விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே!”
எனக் காதலிக்கு பாடும் கவிஞர் வைரமுத்துவின் வரிகள் கவிதைக்கும் பொருந்தும்.

கவிதைகளைச் சுவாசித்த அரபியா மண்ணில் இறைவேதம் இறங்கியதால் 

குர்ஆன் கவிஞர்கள் வியக்கும் கவிதைகளின் வடிவத்தில் இறங்கியது

வேதங்கள் இறைவனின் பேச்சு என்பதால் அதற்கு மொழிகள் கிடையாது

நபிகளின் மொழியே வேதங்களின் மொழியானது

வேதங்கள் புலன்களுக்கு மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொண்டோருக்காக
திறந்த அற்புத வாசல்

கண்களால் வாசிக்கப்படும் வார்த்தைகளின் வழியே தான் இதயம் வேதத்தில் 
நுழைய வேண்டும்.

வேதவாசிப்பும் ஆழ்மனப்பயணம்ஆழ்கடல் முத்துக் குளியல்

"(நபியே!) நீங்கள் கூறுங்கள்கடல் நீர் அனைத்தும் மையாக    இருந்து   என் இறைவனின் வாக்கியங்களை எழுத ஆரம்பித்தால்,என் இறைவனின் வாக்கியங்கள் முடிவதற்கு முன்னதாகவேஇந்தக் கடல் மை அனைத்தும் செலவாகிவிடும்.
அதைப் போல் இன்னொரு பங்கு (கடலைச்சேர்த்துக்  கொண்டபோதிலும் கூட!"   (அல் குர்ஆன் 18:109). 


உருவங்கள்வடிவங்கள்நிறங்கள் எல்லாம் இறை வார்த்தைகளின் 
வெளிப்பாட்டின்  சாதனங்கள்

கண்களால் வாசிக்கப்படும் உருவங்களின் வழியே இதயம் உருவமற்ற 
இறையின்  அழகைப் பருக வேண்டும்

அந்த ஆழ்மன பயணத்தில் தக்வாவே வழிகாட்டி

இதயத்தின் கண்களுக்கு நீச்சலில் உதவும் கண்ணாடியும் அதுதான், சாகச பயணத்தின் கட்டுச்சாதமும் அது தான்

முள்ளில் சிக்காமல் ஆடையைக் காப்பது போல் 

இணைவைப்பில் சிக்காமல் இதயத்தைக் காக்கும் விழிப்புணர்வே 'தக்வா'

பிரபஞ்சத்தைக் கண்ணாடியாக்கி அவன் பேரழகை தரிசிக்கும் ‘இஹ்ஸான் தக்வா.

எல்லா எல்லை கோடுகளையும் அழித்து உள்ளும்புறமும் ஊடுருவி நிற்கும்  இறைமையின் தரிசனத்தில் ஒருமையின்இன்பமும்

வல்லமையின் சாட்சியாய் அவன் வெளியாக்கி வைத்த பிரபஞ்ச கோலத்தில்
இருமையின் நயமும் 

ஒருங்கே ரசிக்கும் அற்புதமான ஆழ்மன வாசிப்பு 'தக்வா'.





உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.

Sunday, September 16, 2012

மடமையின் தந்தைகள் மண்ணாய் போகட்டும்!

வழக்கம் போல் தனிதனி குழுவாய் தான்

என்றாலும்

எல்லா முஸ்லிம்களும் கருத்தொறுமித்து

பெருமானாரின் மேலுள்ள காதலை காட்டும் இந்நாளில்

எங்கள் வேதனை நிஜம்,

எங்கள் கோபம், கைசேதம் எல்லாம் நிஜமென நீ அறிவாய்!


உன்னையே வணங்குகின்றோம்!
உன்னிடமே உதவி தேடுகின்றோம்!.


Wednesday, July 18, 2012

ரமளான் வருகிறது உன் கோப்பையில் காதல் தீயை ஊற்றிக் கொள்!

 ரமளான்!
இது இறைக்காதலர்களின் மாதம்.
எட்டா? இருபதா? என்ற கத்திச் சண்டை எல்லாம்
சற்றே நிறுத்தி வைப்போம்.
முகத்தோடு முகம் நோக்கும்
காதலர்களின் நந்தவனமிது!
தயவு செய்து இந்த குளத்தில் யாரும் கல் எறிய வேண்டாம்.

Thursday, June 14, 2012

இன்னுமொரு தரிசனம்! - தாஜ்

 

மலையாளக் கவிஞர் ஐய்யப்பன் அவர்களது, 'ஐய்யப்பன் கவிதைகள்' தொகுப்பிற்கான எழுத்தாளர் தாஜின் மதிப்புரை. உன்னதம் நவ, டிச 2005 இதழில் வெளி வந்தது. அவரே செய்த சில மாற்றங்களுடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது.

சுமார் பதிமூன்று ஆண்டுகளுக்கு முன் நண்பரும் படைப்பாளியுமான ஜெயமோகனால் எனக்கோர் பின்னடைவு ஏற்பட்டது. சிற்றிதழ்களின் வழியே, தமிழ் மொழியில் மாற்றம் காணும் மலையாளக் கவிதைகளைத் தேடி ஆர்வமாய் வாசிப்பதிலிருந்து நேர்ந்த பின்னடைவு அது.

Sunday, June 3, 2012

பிரம்மராஜன் - வேறொருப் புதுக்கவிதை! - தாஜ்..

 புது கவிதை எழுத பயின்ற விதத்தை சுவராஸ்யமாக எழுதியுள்ளார் கவிஞர் தாஜ்.  தாஜ் எழுதும் கவிதைகளை விட சுவராஸ்மானவை அவரது கவிதைகளை பற்றிய கட்டுரைகள். அத்துடன் பிரம்மராஜன் அவர்களின் சுவையான பேட்டியையும் இணைத்து வ.ந. கிரிதரனின் 'பதிவுகள்' (டிசம்பர் 2006) இதழில் வெளியானது நன்றியுடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது.

Wednesday, January 25, 2012

அம்பலம் - கவிக்கோ அப்துல் ரகுமான்


அம்பலம்

பித்தன்’ ‘பித்தன்என்ற
கூச்சல்களையும்
கற்களையும்
அவன் மீது
எறிந்துகொண்டிருந்தார்கள்.
அவன் சிரித்துக்கொண்டிருந்தான்.
அவன் காயங்களும்
சிரித்துக்கொண்டிருந்தன.
அப்படித்தான் அவனை
முதன் முதலாகப் பார்த்தேன்.

Wednesday, December 7, 2011

'நிலவு ததும்பும் நீரோடை' - கவிஞர் பஜிலா ஆசாத்தின் அழகியல்! - கவிஞர் தாஜ்



கீற்று இணைய இதழில் முன்பு வெளிவந்த கவிஞர் தாஜின் விமர்சனம் நன்றியுடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது. இதோ தாஜின் அருமையான விமர்சன வரிகள் உங்கள் பார்வைக்கு....

ஒரு முறை புத்தகக் கண்காட்சிக்கு சென்னை சென்றிருந்தபோது, மணிமேகலைப் பிரசுர அலுவலகத்திற்குப் போகவேண்டிய சூழல். அவர்கள் பிரசுரித்த ஓர் கவிதைத் தொகுப்பு குறித்து அங்கே செய்தி பரிமாறப்பட்டது. நிலவு ததும்பும் நீரோடை / கவிதைத் தொகுப்பு / பஜிலா ஆசாத் / புதுக்கவிதை உலகத்திற்கு மேலும் ஓர் புதிய கவிஞர் என்றார்கள். அந்த கவிஞரின் கவிதையை நேற்றுவரை நான் வாசித்தது இல்லை. நம் சிற்றிலக்கிய இதழ்களில் எழுதியதாகவும் தெரியவில்லை. கவிஞரின் பெயரே கூட அந்த தருணம்தான் அறிய வந்தேன். பாராத அந்த கவிதைகளை வாசிக்க ஆர்வம் கூடியது. மணிமேகலையில், அந்தத் தொகுப்பு வேண்டுமே என்றபோது, என் ஆர்வத்திற்கேற்ற பதிலைத் தந்தார்கள். "அது சென்ற வருடத்தியப் பிரசுரம், விற்றுத் தீர்ந்து விட்டது!"

Monday, August 15, 2011

நாடு அதை நாடு

அழுத்தமான நேசத்தை வெளிப்படுத்தும் இஜட்.ஜெபருல்லாவின் இந்த கவிதை ஆபிதீன் பக்கங்களிலிருந்து நன்றியுடன் மீள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

எது கவிதை?

நேற்று இலங்கை வானொலியினரால் வாசிக்கப்பட்ட “எது கவிதை..?” எனும்  சபீரின் கவிதையை படிக்குமுன் ஆரம்பமாக 'கவிதைப் புரிதல்' பற்றி   சபீரின் சில விளக்கங்கள்:

Tuesday, July 12, 2011

பிரியாவிடை - சபீர்


சுஜாதாவும் அதே பிரியத்துடன் முத்து காமிக்ஸும் விழுந்து விழுந்து படிக்கும் சபீர் புதுகல்லூரியில் என் விடுதித் தோழன். படிப்பில் அதிபுத்திசாலி மாணவன். பல வருடங்களுக்கு பின் அருமையான கவிஞனாய் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் அவன் தொடர்பு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் கிட்டியது. 

Wednesday, November 24, 2010

படைக்கும் படைப்பினம்

ஆபிதீனின் பக்கங்களில் இந்த வாரம் வெளிவந்த இடுகையை அவர் முன்னுரையுடன் மீள்பதிவு செய்கின்றேன்.