“தன்னை அறிந்தவன் தன் நாயனை (ரப்பை)
அறிவான்” என்பது ஆன்மீகத்தின் அடிப்படைப் பாடம். உங்களில் (பல அத்தாட்சிகள் உள்ளன) நீங்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா? (51:21) என்கிற வேதவரிகளின் விளக்கமேயிது. பல நூற்றண்டுகளாக ஆன்மீக அறிஞர்களால்
எடுத்தாளப்படும் இந்த வாசகம் நபிமொழி எனவும், அலி ரலியல்லாஹுத்தாலாவின்
கூற்று எனவும் இரு வகை கருத்துகள் உண்டு. இதன் விளக்கமாய் அமைந்த பாடமோ மிகவும் ஆழ்ந்த கருத்துகளடங்கியது. அதில் ஒரு
சிறு பகுதி அதன் முக்கியத்துவம் கருதி
உங்கள் பார்வைக்கு முன்வைக்கப்படுகின்றது: