தோழமையுடன்

Showing posts with label ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் (ரலி). Show all posts
Showing posts with label ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் (ரலி). Show all posts

Thursday, April 26, 2012

நாகூரில் ஏகத்துவ கொடியேற்றம் 455ஆம் வருடம்


முதலில் 'இன்று நாகூர் கந்தூரி எனும் ஏகத்துவ கொடியேற்றம்' எனும் இந்த இடுகையை மீண்டும் ஒரு முறை படித்து விடுங்கள்.

படித்து விட்டீர்களா? நன்றி! தொடருங்கள்..

பாரசீக நாட்டில் வாழ்ந்த ஒரு சூஃபிக்கு  பேரழகியான ஒரு மகள் இருந்தாள். எத்தனையோ செல்வந்தர்கள் அந்த அழகியை மணமுடிக்க போட்டியிட்டனர். ஆனால் அந்த சூஃபியோ ஒரு எளிய வணக்கவாளியை அழைத்து தன் மகளுக்கு மணமுடித்தார். தந்தையின் விருப்பத்திற்கு தலை சாய்த்து அந்த ஏழையின் கைப்பிடித்த அப்பெண் தன் கணவனின் குடிலுக்கு அப்போதே புறப்பட்டு சென்றார். இரவானதும் அந்த ஏழை மணமகன் தான் வைத்திருந்த ரொட்டியை தனக்கும் தன் மனைவிக்கும் பங்கு போட ஆரம்பித்தார் அந்த பெண்ணோ அழத் துவங்கினாள்.