தோழமையுடன்

Showing posts with label ஞானம். Show all posts
Showing posts with label ஞானம். Show all posts

Thursday, February 13, 2014

விடுதலை பெற்ற அறிவு!



The Diffusion of Ibn 'Arabi's Doctrine   என்ற Michel Chodkiewicz ன் கட்டுரையின் ஒரு பகுதி இது. இதை வாசித்து பாருங்கள்;
 
இரண்டாம் உலகப் போருக்கும் சில வருடங்களுக்கு முன்பாக, புகழ் பெற்ற எழுதாளர் நிக்கல்ஸன் தன்னுடைய எகிப்திய மாணவராகிய ஒருவரிடம் இப்னு அரபி (ரஹ்) அவர்களின் படைப்புகளை படிக்கச் சொன்னார். இந்த மாணவர் தான் பின்பு வெளியான பிரபல்யமான “The Mystical Philosophy of Muhyid Din Ibnul 'Arabî” எனும் நூலின் ஆசிரியர் A.A.அஃபிஃபீ. 

Friday, June 1, 2012

திரை விலகட்டும்!


ரகசியங்கள் பகிரங்கமாகும் மறுமை நாளில் இறைவன் பிரகடனம் செய்வான்:

 “இன்று ஆட்சியதிகாரம் யாருடையது? எல்லாவற்றையும் அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வுடையதே”. (40:16)

மிஸ்காத்துல் அன்வார் எனும் நூலில் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) இப்படி எழுதியுள்ளார்கள்.
இறைவனின் வஜ்ஹை(being) தவிர யாவும் அழிபவையாய் இருக்கின்றன. இந்த ஆத்ம ஞானம் பெற்றவர்கள், “இன்று ஆட்சியதிகாரம் யாருடையது? எல்லாவற்றையும் அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வுடையதே”. என்று இறைவன் பிரகடனம் செய்வதை கேட்க மறுமை நாளில் எழுப்பப்படும்வரை காத்திருக்க வேண்டியதில்லை. ஏனெனில் அந்த அழைப்பு சதாவும் அவர்களின் செவிகளில் ஒலித்த வண்ணமே இருக்கிறதுஎன்று.

Saturday, March 31, 2012

ஞான வழி நுட்பங்கள் (“ஹிகம்”) ஒர் அறிமுகம்


ஆன்மீக வழிநடப்போர்கள் அனைவருக்கும் வழிகாட்டும் அற்புத நூல் ‘ஹிகம்’ . இது ஷாதுலியா ஆன்மீகப்பாதையின் வழி வந்த இப்னு அதாவுல்லா ஸிக்கந்தரி (ரஹ்) அவர்களால் எழுதப்பட்டது. அவர்கள் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மகத்தான ஞான மாகான் ஆவார்கள். இதன் சுருக்கத்தை உத்தம பாளையத்தை சேர்ந்த மௌலானா மௌலவி T.S. மூஸாகான் பாகவி (ரஹ்) அவர்கள் தமிழில் தந்துள்ளார்கள். 

Thursday, April 21, 2011

அல்லாஹ் என்பது யார்?



அல்லாஹ் என்ற வார்த்தைக்கு இறைவன், கடவுள் என்பது பொருள்.  அல்லாஹ் என்பது முஹம்மது நபி (ஸல்) அவர்களால் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பெயர் அல்ல. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தந்தையாரின் பெயர் அப்துல்லாஹ் என்பதே இதற்குச் சான்றாகும். ஆதி நாள் முதலே அரபு மொழியில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களாலும் இறைவனை குறிக்கும் ஒரு பொது சொல்லாகவே இது பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மாறாக அல்லாஹ் என்றால் முஸ்லிம் என்ற ஒரு குறிப்பிட்ட மதத்தவரின் கடவுள் என நினைப்பது தவறான கருத்தாகும். இதை தான் வலைப்பக்கத்தின் முகப்பிலேயே போட்டிருக்கின்றீர்களே பின் ஏன் ரிபிட்டேஷன் அவனைப் பற்றி வேறு ஏதாவது சொல்லுங்கள் என்கின்றீர்களா!

Saturday, September 18, 2010

எல்லாம் அவன்? எல்லாம் அவன் செயல்?


-->
இறைவனின் அருட் கொடையாய் கிடைத்த என் ஞானாசிரியர் (ஷெய்கு நாயகம்) சில ஆண்டுகளுக்கு முன் வெளிரங்கமாக எங்களை விட்டு பிரிந்தார்கள். என் போன்ற பலரின் வாழ்வில் இறைநேசமும், மனித நேயமும் பெருக காரணமாய் இருந்த அந்த மகத்தான தோழமையின் இழப்பு அதைப் போன்ற அறிஞர்களின் சகவாச பாக்கியம் பெற்றவர்களால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும். சரித்திரத்தில் மட்டுமே படிக்க நேரும் ஒரு மகத்தான ஆளுமையுடன் உயிரும் உணர்வுமாய் வாழ கிடைத்தது மகத்தான வரப்பிரசாதம். 

Friday, August 13, 2010

உள்ளுணர்வு என்னும் ஒளி விளக்கு


அஞ்ஞானிகளிடம் இரண்டு அறியாமைகள் இருகின்றன ஒன்று அறியாமை என்ற அறியாமை. மற்றொன்று அறிவு என்ற அறியாமை. இவ்விரண்டும் நீங்க வேண்டும். தவிர, ஒன்று நீங்கி மற்றொன்று மிஞ்ச வேண்டும் என்பது அஞ்ஞானம் என்கின்றார் ரமணர் என்ற இந்து மத ஞானி. ஜே.கிருஷ்ண மூர்த்தி அவர்களின் அறிந்தவற்றிலிருந்து விடுதலை என்பதும் இதையே குறிக்கின்றது. பத்து நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இமாம் கஸ்ஸாலி என்ற இஸ்லாமிய ஞானியின் சொல்லும் இதையே வலியுறுத்துகின்றது. நாம் அறிந்தவற்றிலிருந்து விடுதலை பெறுவதால் என்ன கிடைக்கும் என்ற கேள்விக்கு விடையாக ‘மகத்தான மெய்யறிவு என்னும் இறையருள் ஞானம்’என்கிறது ஆன்மீகம்.

Friday, July 9, 2010

மை நேம் இஸ் கான் ஆனால் நான் ஒரு பயங்கரவாதியல்ல!


'உயிர்மை' இதழில் சாரு நிவேதிதா ‘மை நேம் ஈஸ் கான்’ என்ற திரைபடத்தின் விமர்சனத்திற்கு கொடுத்த தலைப்பு தான் இது. வித்தியாசமான தலைப்பினால் கவரப்பட்டு என்ன சொல்கிறார் சாரு நிவேதிதா என வாசிக்கையில் அவரது பின்வரும் வரிகள் என்னை மிகவும் சிந்திக்க வைத்தன. சாருவின் வரிகள்….