தோழமையுடன்

Showing posts with label மௌலானா ரூமி(ரஹ்). Show all posts
Showing posts with label மௌலானா ரூமி(ரஹ்). Show all posts

Wednesday, September 24, 2014

ஒரு வேளை நீங்கள் காணாமல் போனால் அதற்கு நான் பொறுப்பல்ல!.


 படைக்கப் படும் முன் சிருஷ்டிகளின் நிலை நத்திங் (Nothing) அல்ல நோ திங் (No thing) _ ஆன்மீக குருநாதர் ஹக்கிமிஷாஹ் ஃபைஜி
 

இதன் விளக்கத்தில் சீரியசாக உள்ளே புகும் முன் கொஞ்சம் முல்லா…

தி கிரேட் முல்லா நாஸீருத்தின்…

ஒரு முறை முல்லா நஸீருத்தீன் ஒரு விழாவுக்கு சென்றிருந்தார். அந்த விழாவில் கூட்டம் நிரம்பி வழிந்தது, அன்று இரவு சத்திரத்தில் எல்லோரும் படுத்துறங்கினர். அந்த கூட்டத்தில் நாம் காணாமல் போய்விட்டால் என்ன செய்வது என்ற கவலை முல்லாவிற்கு வந்தது. அதனால், தூங்கும் முன் தன் காலில் ஒரு கருப்பு கயிறை கட்டிக் கொண்டார். கயிறை கட்டிக் கொண்டிருப்பது தான் “நான்” என தன் அடையாளத்தை தனக்குத்  தானே சொல்லிக் கொண்டு, இனி நான் காணாமல் போனாலும் கயிறை வைத்து கண்டு பிடித்துவிடுவேன் என்று மன நிறைவுடன் படுத்துறங்கத்  துவங்கினார்.

 பக்கத்திலிருந்து இதை கேட்டு கொண்டிருந்த ஒருவர், முல்லா நன்கு உறங்கியவுடன் முல்லாவின் காலில் இருந்த கயிற்றை கழற்றி தனது காலில் கட்டிக் கொண்டு  உறங்கிவிட்டார்.