தோழமையுடன்

Saturday, August 20, 2011

இறைஞான ஒளிவிளக்கு


நேற்று புல்லாங்குழலுக்கு 'பெயரில்லாமல்' ஒருவரிடமிருந்து இரண்டு கேள்விகள் வந்திருந்தன. மொட்டை கடிதாசி போன்று பெயரில்லாமல் வெளியிடும் கருத்துகளை தவிர்த்து விடலாமா என எண்ணினேன். ஆயினும் அவர் என் ஷைகு அவர்களைப் பற்றி அவர்களுடன் நேரடி அறிமுகம் இல்லாதவர் கூறிய கருத்தினால் மனம் குழம்பியிருப்பதை போல் தோன்றியது. உங்கள் ஷைகு அவர்களை பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்டிருந்தார். யாரைப் பற்றி யார் கருத்து சொல்வது என நினைத்தாலும். அதை சொல்லாமல் இருப்பதும் தவறாகலாம் என்பதால் இந்த பதிவு. மற்றபடி வேறு உள்நோக்கம் ஏதும் இல்லை.



Wednesday, August 17, 2011

நோன்பு என்பது….


சங்கை மிகும் "நூரியா தரீக்கா"(ஷிஸ்தியுல் காதிரி) ஆன்மீக பாதையில் நடைபயிலும் முனைவர் ரமீஸ் பிலாலி அவர்களின் ஞானம் தோய்ந்த சிந்தனைகள் அவரது பிரபஞ்சக்குடில் தளத்திலிருந்து நன்றியுடன் மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Monday, August 15, 2011

நாடு அதை நாடு

அழுத்தமான நேசத்தை வெளிப்படுத்தும் இஜட்.ஜெபருல்லாவின் இந்த கவிதை ஆபிதீன் பக்கங்களிலிருந்து நன்றியுடன் மீள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நோன்பாளியின் படித்தரங்கள்



நோன்பு வைப்பவர்களை மூன்று படித்தரமாக வகைப்படுத்தி கூறுகின்றார்கள் ஆன்மிக பெரியார்கள்.  

  1. உண்ணல், பருகல், உடலுறவு இவைகளை மட்டும் தடுத்து கொள்ளுதல் பாமரர்களின் நோன்பு.
  2.   உண்ணல், பருகல், உடலுறவு இவைகளை தடுத்து கொள்ளுதலுடன் அதிகமதிகம் நற்செயல்கள் புரிவதும், பொய் பேசுதல், புறம் பேசுதல், கோள் சொல்லுதல் போன்ற பாவச்செயல்களை விட்டும் தன்னை காத்து கொள்ளுவது நல்லடியார்களின் நோன்பு.  
  3. மேற் கூறிய இரண்டு நிலைகளுடன்  இறைவனைத் தவிர வேறு பக்கம் தங்கள் கவனம் திரும்புவதை விட்டும் காத்து கொள்ளுதல் நபிவழியில் அகப்பார்வை அடைந்த ஆரிஃபீன்கள் என்னும் இறைஞானிகளின் நோன்பு.

இது வேறு வேறு மூன்று வகை பிரிவினரை பற்றி கூறுவதாக  காட்சியளித்தாலும் யோசித்து பார்க்கும் வேளையில் நாமே சில நேரம் பாமர நிலையிலும், சில நேரம் நல்லடியார்களின் நிலையிலும் இருப்பதை உணர முடிகிறது. அத்துடன் இறைவனைத் தவிர வேறு பக்கம் தங்கள் கவனம் திரும்புவதை விட்டும் காத்து கொள்ளும் ஆரிஃபீன்கள் என்னும் இறைஞானிகளின் நிலையை நோக்கி முடிந்த அளவு முன்னேற முயற்சிக்க வேண்டும். ஏனென்றால் அது தான் நபிவழி அகப்பார்வையாய் இருக்கின்றது. அதைப் பற்றி இந்த கட்டுரையில் சுருக்கமாக பார்ப்போம்.

எது கவிதை?

நேற்று இலங்கை வானொலியினரால் வாசிக்கப்பட்ட “எது கவிதை..?” எனும்  சபீரின் கவிதையை படிக்குமுன் ஆரம்பமாக 'கவிதைப் புரிதல்' பற்றி   சபீரின் சில விளக்கங்கள்:

அகப்பார்வை - ஓர் அறிமுகம்


மௌலவி டாக்டர் செய்யது மஸ்வூது ஜமாலி முதல்வர், புகாரி ஆலிம் அரபிக்கல்லூரி, வண்டலூர், சென்னை அவர்கள் வழங்கிய அணிந்துரை....

நாகூர் ரூமியின் பார்வையில் “சூஃபி கோட்பாடுகள்”



இமாம் குஷைரியின் ஓர் அற்புதமான ஆன்மிக நூல் “சூஃபி கோட்பாடுகள்” என்ற பெயரில் முனைவர் ரமீஸ் பிலாலி ( தமிழ் விரிவுரையாளர், ஜமால்முஹம்மது கல்லூரி, திருச்சி) அவர்களால் தமிழில் மொழிபெயர்பு செய்யப்பட்டுள்ளது. ரமீஸ் பிலாலி அவர்கள்  ஆன்மிக பாதையில் நடை பயில்பவர் (நூரியா ஆன்மிக தொடரில் உள்ள சங்கைக்குரிய  ஷெய்க். பிலாலி ஷாஹ் ஜுஹுரி என்னும் ஆன்மீக குருவின் சீடர்) என்பதால்  மொழிபெயர்ப்பு மிகவும் கவனமுடன் செய்யப்பட்டுள்ளது.

ஆங்கில புத்தகங்களைப் போல் மிகவும் நேர்த்தியான வடிவில் வெளிவந்திருக்கும் இந்த நூலை பற்றி முனைவர் நாகூர் ரூமி அவர்களின் அறிமுகம் உங்கள் பார்வைக்கு…..


Sunday, August 14, 2011

காதலிக்க கற்றுக் கொள்ள ஒரு மாதம்


மனிதர்களை தன் காதலர்களாக – நேசர்களாக ஆக்குவதற்கு வருடந்தோறும் ஒரு மாதத்தையே கருணையுடன் தந்துள்ளான் இறைவன். அந்த மாதத்திற்கு பெயர் ரமளான்.
'இறையச்சம் கொண்டவர்களேயன்றி இறைநேசர்கள் இல்லை' என்கிறது இறைவேதம்.
அச்சம் கொண்ட இதயத்தில் எப்படி நேசம் இருக்கும் என்ற கேள்வி எழுகின்றதல்லவா?

Friday, August 12, 2011

தஸவ்வுப் - அதன் தோற்றம், வளர்ச்சி, பங்களிப்புகள்

குறிப்பிடத் தக்க இஸ்லாமிய அறிஞர்களில்  ஒருவரான டாக்டர் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்கள் இலங்கையில் உள்ள நளீமியா கல்லூரியின் டைரக்டராவார்கள். 

இஸ்லாமிய ஆராய்சியாளரான அவர்களின் 'தஸவ்வுப்' பற்றிய  கட்டுரை நன்றியுடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது. இது தஸவ்வுப் பற்றிய தவறான புரிதல்களை உடையவர்களுக்கு விளக்கம் அளிப்பதாக உள்ளது.