பிரபஞ்சம், கடவுள்
என்பதைப் பற்றி Existence என்ற இருப்பின் அடிப்படையில் பல்வேறு கருத்துகள் உலாவுகின்றன.
வானம், பூமி, மலை,
கடல் என எங்கும் பொருள்கள் மட்டும் தான் உள்ளது. கடவுள் என்பது நமது கற்பனை. உண்மையில்
இல்லவே இல்லாத ஒன்று என்பது பொருள் முதல்வாதிகள் (Materialist) என்னும் இறைமறுப்பாளர்களின்
கருத்து.
சிருஷ்டிகள் தான்
உலகில் இருக்கிறது. சிருஷ்டிகளை விட்டும் தனியே தூரமாக சிருஷ்டித்தவன் இருக்கின்றான்
என்பது இறைநம்பிக்கையாளர்களில் சிலரின் நம்பிக்கை.
இவற்றுக்கு முற்றிலும்
மாறுபட்ட கோணத்தில் இருப்பது எல்லாம் அவனே என்பது வேறு ஒரு சிலரின் நம்பிக்கை.
உண்மையில் இருப்பது
யார் ? பொருளா? இறைவனா? இல்லை இரண்டுமா?
இந்த விசயத்தை
முன் தீர்மானங்களை கொண்டு அல்லாமல் குர்ஆன், ஹதீஸ் மற்றும் அறிவியல் விளக்கத்தின் வெளிச்சத்தில்
விளங்க முயற்சிப்போம்.