தோழமையுடன்

Showing posts with label அப்துல் கையூம். Show all posts
Showing posts with label அப்துல் கையூம். Show all posts

Monday, September 24, 2012

நாகூர் ஹனிபாவை நெகிழ வைத்த மதுரை ஆதீனம்


பக்ரீத்து பாய் வீட்டு பிரியாணி நம் வீட்டிற்கும் நம் வீட்டு தீபாவளி பலகாரம் பாய் வீட்டுக்கும் பரிமாற்றப்பட்ட காலங்கள் ஏக்கத்திற்குரிய இறந்த காலங்களாகி விட்டன.”என்று சகோ. ராஜாராம் கோமகன்  தன் முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருந்த ஆதங்கத்தை ஆபிதீன் பக்கங்களில்  கண்டேன்.


 இன்றைய இந்த மோசமான சமூக சீரளிவிற்கு தனிமனிதனாகிய நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் காரணம் என்ற குற்ற உணர்வும் அதன் மீட்சிக்கு நாம் செய்ய வேண்டியது என்ன? என்ற சிந்தனையும் மனதில் ஓடியது. சற்றே அந்த வேதனைக்கு ஒத்தடமாக அமைந்த இந்த பதிவை படித்ததும் இது போன்ற செய்திகள் அதிகமானவர்களை சென்றடைய வேண்டும் என எண்ணம் எழுந்தது. அந்த நோக்கத்துடன் எளிமையாகவும், நகைசுவையாகவும் எழுதும் கவிஞர் அப்துல்கையூமின்  “ நாகூர் மண்வாசனை” பக்கத்திலிருந்து இந்த பதிவை நன்றியுடன் மீள்பதிவு செய்துள்ளேன்.