நித்தியானந்தாவின் மீது எல்லா பக்கத்திலிருந்தும் வசைச்சொற்களால் கல்லெறிகிறார்கள். ஆன்மீகத்தின் பெயரால் அவர் செய்த மகத்தான மோசடியை யாரும் ஏற்றுக் கொள்ளமுடியாது என்பதில் இருவேறு கருத்தில்லை. எல்லா ஆன்மீகவாதிகளையும் மக்கள் தவறாக நினைத்து விடக்கூடதே என்ற கவலையில் மாற்று கருத்து கூறி அவரின் நிலையை நியாயப்படுத்துவதற்காக தந்திரா, மந்திரா என பூசி மொழுகுபவர்களின் கூற்றையும் நாம் பொருட்படுத்த தேவையில்லை.நமது கவலையெல்லாம் நம்மைப் பற்றித்தான்.