தோழமையுடன்

Wednesday, February 29, 2012

நட்பு எனும் கற்பு


எனக்கு மிகவும்  நெருக்கமான பள்ளித் தோழன் ஸ்டீவன் ராஜ், இந்த அருமையான குட்டி கதையை மின்னஞ்சல் அனுப்பி இருந்தான். 'இருந்தான்' என்பது நெருக்கத்திற்காக மற்றபடி  ஸ்டீவன் ராஜ் மேனேஜ்மென்டில் டாக்டர் பட்டம் பெற்ற, ரயில்வேயில் மேனேஜ்மென்ட் பாடம் எடுக்கும் ஓர் உயர் அதிகாரி.

என்னை மிகவும் யோசிக்கவைத்த படிப்பினையூட்டும் இந்த குட்டிக் கதை உங்கள் சிந்தனைக்கு...

Monday, February 27, 2012

இறைநேசர்களை நேசிப்போம்! இறைவனை மட்டுமே வணங்குவோம்!

                   யா அல்லாஹ்! உன்னிடம் உனது நெருக்கத்தையும், உலகிலே அகக்கண்ணால் உன்னைக் காண்பதையும், மறுமையில் புறக்கண்ணால் உன்னைக் காண்பதையும் உன்னிடம் வேண்டுகின்றேன்! 
                   - சைய்யதினா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜெய்லானி (ரஹ்)
  
எந்த சிருஷ்டியும் தன் புறத்திலிருந்து கொடுப்பதாக நினைப்பவன் காஃபிராகிவிட்டான் பத்ஹுர்ரப்பானியில் (பக்கம்87ல்) சைய்யதினா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) கூறுகின்றார்கள்


படித்தவுடனே அதிர்ச்சி ஏற்படுத்தும் இவ்வளவு கடுமையான வார்த்தையை அவர்கள் ஏன் சொல்கின்றார்கள்?

Friday, February 24, 2012

தவ்ஹீதே உலூஹிய்யத் - நபி வழி வந்த ரகசியம்


தவ்ஹீத் - ஏகத்துவம் என்றால் ஒன்றுபடுத்துதல் என்று பொருள்.

தவ்ஹீதே உலூஹிய்யதின் விளக்கம் “லா இலாஹ் இல்லல்லாஹ்” என்ற கலிமாவின் விளக்கத்தை அறிவது கொண்டு தான் கிடைக்கும்.

“லா இலாஹ் இல்லல்லாஹ்” வை அறிந்து கொள்ளுங்கள் என்று திருக்கலிமாவின் ஆய்வின் பக்கம் தூண்டுகிறது இறைவேதம். அதை ஓரளவு சுருக்கமாக பார்ப்போம்.

Monday, February 20, 2012

பறவைகளின் இதயம்


நபி(ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: பறவையின் இதயங்களைப் போன்ற இதயங்களையுடைய மக்கள் சுவர்க்கம் புகுவார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) ஆதாரம் : முஸ்லிம், ரியாளுஸ்ஸாலிஹீன் ஹதீஸ் எண் 77) 


இறைநம்பிக்கையாளனின் இதயம் இறைவனின் அரியாசனம் (குலூபுல் முஃமினீன் அர்ஷுல்லாஹ்) என்று சொல்லப்பட்டிருக்கும் படைப்பினங்களில் சிறந்த படைப்பாக இருக்கும் மனித இதயத்தை விட பறவைகளின் இதயங்களுக்கு அப்படி என்ன சிறப்பு?

Wednesday, February 15, 2012

வலிமார்கள் சகவாசம் தேவையா?


 “குர்ஆனும், ஹதீஸும் இருக்க சூஃபிகளை பின்பற்றும் உங்களுக்கு நரக நெருப்பு காத்திருக்கிறதுஎன இரண்டு தினங்களுக்கு முன் ஒரு  பெயரில்லா பின்னூட்டம் வந்திருந்தது. நீங்கள் யாராயிருந்தாலும் உங்களுக்களுக்கு என் தாழ்மையான  பதிலிது. கொஞ்சம் அன்புடன் சிந்திக்க வேண்டியவனாய்….

Monday, February 13, 2012

அழியாச்சுடர்கள் ஓர் அறிமுகம் – முள் முடி – தி.ஜானகிராமன்


ஆபிதீன் பக்கங்களின் மூலம் எனக்கு அறிமுகமான சகோதரர் H.ராம்பிரசாத் அவர்களின் அழியாச்சுடர்கள் ஓர் அருமையான இணையத்தளம். அழியாச்சுடர்கள் குறித்து பிரபல எழுத்தாளர்களான ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணனின் அறிமுகமே இலக்கிய ஆர்வலர்களுக்கு இதன் தரத்தை சொல்ல போதுமானது.

ஆயிரம் வருட தூக்கம் - வைக்கம் பஷீரின் நேர்காணல்



முஸ்லிம்களை ஆயிர வருட அறியாமைத் தூக்கத்திலிருந்து எழுப்பும் எழுத்தாளர் வைக்கம் பஷீரின் பேட்டியை படிக்கும் முன் பஷீர் அவர்களைப் பற்றிய சிறு அறிமுகம்.

படம்:  இலங்கை நளீம்
பஷீருடன் புத்தகங்கள் மூலம் அறிமுகமான பிற எழுத்தாளர்கள் எனது ருசியும், கருத்துகளும் மாறியபோது தங்கள் நாற்காலிகளைக் காலி செய்து கொண்டார்கள். ஆனால் பஷீரும் அவரது சிம்மாசனமும் அப்படியே இருக்கின்றன” என்கின்றார் எழுத்தாளர் சுகுமாரன்.(எனதுபஷீர் – சுகுமாரன்

Sunday, February 12, 2012

முஸ்லிம்களை ஏன் எழுத நேர்ந்தது? அ.மார்க்ஸ்


சென்ற மதம் வெளிவந்த சகோதரர் அ.மார்க்ஸ் அவர்களின் “இழப்பதற்கு ஏதுமில்லைஎன்கிற நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரை நன்றியுடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது.

நான் கடந்த இருபது ஆண்டுகளாக எழுதி வருபவற்றில் சிறுபான்மையோர் பிரச்சினைகள் தொடர்பான சுமார் பத்து கட்டுரைகள் இந்நூலில் சேர்க்கப் பட்டுள்ளன. 

தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?'


 வியாழக்கிழமை தொலைக்காட்சிச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது, சென்னையில் 9-ம் வகுப்பு மாணவன் ஒருவன் வகுப்பு அறையில் ஆசிரியையை வெறித்தனமாகக் குத்திக் கொலை செய்த சம்பவம். 39 வயதான உமா மகேஸ்வரி, ஆசிரியர் பணியை மக்கள் சேவையாகக் கருதி, தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் என்பதை அறியும்போது, கொலையுண்டிருப்பது ஓர் ஆசிரியையா அல்லது தமிழகத்தின் வருங்காலமா என்று நெஞ்சம் துணுக்குறுகிறது.

Thursday, February 9, 2012

முராக்கபா எனும் இறைதியானமும், முஷாஹதா எனும் அகவிழிப்பு நிலையும்


 முராக்கபா மற்றும் முஷாஹதா என்பது ஆன்மீகத்தில் தவிர்க்க முடியாத அடிப்படை பயிற்சிகள். இதைப் பற்றி விளக்குமுன் ஆன்மீகம் பற்றி நமது சமகால இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான மௌலவி டாக்டர் செய்யது மஸ்வூது ஜமாலி முதல்வர், புகாரி ஆலிம் அரபிக்கல்லூரி, வண்டலூர், சென்னை அவர்கள் கூறுவதை கேளுங்கள்:

Thursday, February 2, 2012

கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது


புதுக்கோட்டை முனைவர் ஜெ.ராஜாமுகமது அவர்களுக்கு  2012 –ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சரின் கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது வழங்கப்பட்டுள்ளது.