தோழமையுடன்

Saturday, October 30, 2010

பிரிய நண்பராய் முல்லா...


மனசாட்சியின் கண்ணாடியாய் நின்று நம்மை நாமே கேலிக்கும், கேள்விக்கும் உள்ளாக்கும் சுய அலசலின் பக்கம் நம்மை அழைப்பவை முல்லாவின் கதைகள். சஃபி என்பவர் முல்லாவின் கதைகளை அறிமுகப்படுத்தி புதிய காற்று மாத இதழில்(ஜூன் 2006) எழுதிய  சுவராசியமான  அறிமுகம் நன்றியுடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது.


Thursday, October 28, 2010

ஏகத்துவம் என்னும் ஒருமையின் தரிசனம்



Hindutva is understood as a way of life or a state of mind and is not to be equated with or understood as religious Hindu fundamentalism”.- Supreme Court of India. 
- தமிழ் ஹிந்து என்ற தளத்திலிருந்து. 

Wednesday, October 27, 2010

நம்பிக்கையின் படித்தரங்கள்

'அடுத்த விநாடி’, ‘ஜாலியாக ஜெயிக்கலாம், வாங்க  ஸ்டூடண்ட்ஸ்’, ‘இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம்’ போன்ற நூல்களின் மூலம் பரவலான வாசகர்களை பெற்றுள்ள பிரபல எழுத்தாளர் நாகூர் ரூமி. இலக்கியத்தில் டக்டர் பட்டம் பெற்றவர். 



பார்வை கொண்ட நெஞ்சம்


‘ஹாபிள்’ என்பது இறைவனின் பெயர்களின் ஒன்று. அதற்கு பாதுகாப்பவன் என பொருள்.   நம் ஞாபகங்களை பாதுகாத்து அவ்வப்போது நமக்கு வழங்குபவன் நம் இறைவன்.
ஞாபகம் இல்லையேல் நமக்கு அறிவு என்பதே இல்லை .
ஒன்றைப் பற்றிய அறிவு இல்லாமல் அதை செய்ய நாட்டம் வராது.
நாட்டம் இல்லாமல் செயல் இல்லை,
ஞாபகம்,அறிவு, நாட்டம், செயல் என்பது ஒரு sequence. ஒரு விதமான தொடரமைப்பு. இவற்றில் முந்தியதும் மூல ஊற்றும் ஞாபகம் தான். 

Wednesday, October 13, 2010

தவ்ஹீத், தஸவ்வுஃப் சில விளக்கங்கள்


தவ்ஹீது என்ற வார்த்தை குர்ஆனிலோ, நபி மொழியிலோ காணப்படவில்லை. முஆத் இப்னு ஜபல் என்ற தோழர் எமன் நாட்டிற்கு கவர்னராக சென்றபோது அந்த மக்களை ஏக இறைவன் பக்கம் அழைக்கச் சொல்லும் வார்த்தையாக “யுவஹ்ஹிது அல்லாஹு” என்ற வார்த்தையை பெருமானார் கூறினார்கள். இந்த ‘யுவஹ்ஹிது’ என்பதிலிருந்து வந்தது தான் தவ்ஹீது என்ற வார்த்தை என்கின்றார் அபு ஆமினா பிலால் பிலிப்ஸ். 

Tuesday, October 5, 2010

பாங்கர் நிமித்தம்

ரமீஸ் பிலாலி எனும் அற்புத எழுத்தாளரின் கட்டுரை. அவரது பிரபஞ்சக் குடில் என்ற வலைப்பக்கத்திலிருந்து நன்றியுடன் சுடப்பட்டுள்ளது.