தோழமையுடன்

Saturday, August 18, 2012

என் இதயமதின் இன்னுயிரே செய்யிதே நூரி!

ஹஜ்ரத் நூரிஷாஹ் (ரஹ்)
 எந்த சிருஷ்டியும் தன் புறத்திலிருந்து கொடுப்பதாக நினைப்பவன் காஃபிராகிவிட்டான்  என சைய்யதினா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) கூறுகின்றார்கள். (த்ஹுர் ரப்பானி பக்கம் 87)

அதனால் தான் 

"அன்தல் ஹாதி அன்தல் ஹக்கு லைஸல்  ஹாதி இல்லாஹு"  என  அல்லாஹ்வைத் தவிர வழிகாட்டி இல்லை என்ற ஏகத்துவ பண் பாடினார்கள் ஆன்மீக நாதர்கள். 

 "யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட நாடி விட்டானோ அவர்களுக்கு நேர்வழியை காட்டும் வலிமார்களை (நபியே!) நீங்கள் பெற்றுக் கொள்ள மாட்டீர்கள்" என்கிறது இறைவேதம். 

அல்லாஹ்வே வலிமார்கள் மூலம் நேர்வழியில் செலுத்தும்  ஏகத்துவ மெய்ஞானத்தை அறிய இங்கே சொடுக்கி உள்நுழையுங்கள்.


Sunday, August 12, 2012

ஜகாத் ஒர்எளிய அறிமுகம் - பேரா. இஸ்மாயீல் ஹஸனீ

 அன்புடையீர்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

ஜகாத்,  இது ரமலான் காலங்களின் நாம் காதுகளில் அதிகமாக ரீங்காரமிடும் ஒரு வார்த்தை.

ஜகாத் என்பது  தொழுகையை போன்று கடமையாக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும், நாம் ரமலானில் மட்டுமே அது பற்றி ஆலோசிக்கிறோம்.


Friday, August 10, 2012

அவமரியாதையை & போலிகுற்றச்சாட்டுகளை எப்படி கையாள வேண்டும் – ஃபஜிலா ஆசாத்

 ஃபஜிலா ஆசாத்தின் இந்த மனோதத்துவ உரையை சகோதரர் முதுவை ஹிதாயத் (ஈமான் டைம்ஸ்) அனுப்பி இருந்தார். நம் பக்கத்து வீட்டு சகோதரி நம்முடன் உரையாடுவது போன்று இஸ்லாமிய வழக்குத் தமிழும், சரளமான ஆங்கிலமும் கலந்த அருமையான உரை.  

என் மனைவி மிகவும் ரஸித்து கேட்டதுடன் புண்பட்ட மனங்களுக்கு மருந்திட புல்லாங்குழலிலும் இதை வெளியிடுங்கள் என உத்தரவிட்ட போது மறுபேச்சில்லாமல் இணைத்துவிட்டேன். 

பயப்பட வேண்டாம் really worth listening கேட்டு நீங்களும் மனதை ஆற்றிக் கொள்ளுங்கள்.