தோழமையுடன்

Showing posts with label தியானம். Show all posts
Showing posts with label தியானம். Show all posts

Thursday, December 6, 2012

நிம்மதி அது உங்கள் Choice!

சிந்தனையின் கால்கள் மரக்கால்கள்.
மரக்கால்களின் நடை பலகீனமானது.
                           _ மௌலானா ரூமி (ரஹ்)

சிந்திக்க மாட்டீர்களா? உங்கள் உள்ளங்கள் பூட்டியா வைக்கப்பட்டுள்ளது? என்பது சிந்தனைக்கான இறைவேதத்தின் அழைப்பு.
 
சிந்தனை செய் மனமே! என்பது எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் அருமையான உபதேசம். அதை விட அவசியம் எதை சிந்திப்பது என்பது!.

எதிரே மனைவி இருக்கும் போது அலுவலக சிந்தனை. அலுவலகத்தில் இருக்கும் போது வீட்டின் சிந்தனை.

இறைவனை முன்னோக்கி தொழுகையில் நின்றால் கூட பக்கத்தில் தொழுபவர் னிப்படி விரலை அசைக்கின்றார்?.  வாசலில் கழற்றி வைத்த புது செருப்பு பத்திரமாக இருக்குமா?. இந்த ஹஜ்ரத் ஏன் இவ்வளவு பெரிய சூரா ஓதுராரு?.

 இப்படி சிந்தனை…சிந்தனை….சிந்தனை ….எண்ணங்களின் இடை விடா கூக்குரல்.

இந்த சிந்தனை வழியே மனம்  பேசிக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையை முன்வைத்துமனதின் உள்ளே ஒரு வாய் சதா பேசிக் கொண்டே இருக்கின்றது கவனித்தீர்களா!” என்பார்கள் என் குருநாதர் ஃபைஜிஷாஹ் நூரி(ரஹ்)

Monday, June 28, 2010

உள்ளத்தில் இருக்கும் அதிசய ஊற்று!


நீங்கள் ஒன்றையும் அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்களின் தாய்மார்களின் வயிறுகளில் இருந்து உங்களை வெளியாக்கினான். மேலும் அவன் உங்களுக்கு செவிப்புலனையும், பார்க்கும் ஆற்றலையும், இதயங்களையும் நீங்கள் நன்றி செலுத்திடும் பொருட்டு அமைத்தான்.(16:78)
ஒன்றையும் அறியாத நிலை என்பது மனதில் எந்தக் கற்பனை கருத்துருவாக்கமும் இல்லாத நம் தூய இயற்கை நிலை.