மரக்கால்களின் நடை பலகீனமானது.
_ மௌலானா ரூமி (ரஹ்)
சிந்திக்க மாட்டீர்களா? உங்கள் உள்ளங்கள் பூட்டியா வைக்கப்பட்டுள்ளது? என்பது சிந்தனைக்கான இறைவேதத்தின் அழைப்பு.
சிந்தனை
செய் மனமே! என்பது எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் அருமையான உபதேசம். அதை விட அவசியம் எதை சிந்திப்பது என்பது!.
எதிரே
மனைவி இருக்கும் போது அலுவலக சிந்தனை. அலுவலகத்தில் இருக்கும் போது வீட்டின் சிந்தனை.
இறைவனை
முன்னோக்கி தொழுகையில் நின்றால் கூட பக்கத்தில் தொழுபவர் ஏனிப்படி விரலை அசைக்கின்றார்?. வாசலில் கழற்றி வைத்த புது செருப்பு பத்திரமாக இருக்குமா?. இந்த ஹஜ்ரத் ஏன் இவ்வளவு பெரிய சூரா ஓதுராரு?.
இப்படி சிந்தனை…சிந்தனை….சிந்தனை
….எண்ணங்களின் இடை விடா கூக்குரல்.
இந்த சிந்தனை
வழியே மனம் பேசிக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையை முன்வைத்து “மனதின் உள்ளே ஒரு வாய் சதா பேசிக் கொண்டே இருக்கின்றது கவனித்தீர்களா!” என்பார்கள் என் குருநாதர் ஃபைஜிஷாஹ் நூரி(ரஹ்).