ஒரு இனிய மாலை பொழுதில் பர்துபாயில் அமீரகத்தில் ஒன்பது
தமிழ்ப்
புத்தகங்களின் அறிமுக
கூட்டம் (22.02.2019) நடந்ததது. நிகழ்வின் சிறு குறிப்பு உங்கள் பார்வைக்கு.
நாஞ்சில் மண்ணின் மனம் பரப்பும் குட்டிகூராவின் அழகிய அறிமுகம், தொடர்ந்து காதலே சுவாசமாய்
என்ற
நாவலை எழுதிய தேவாவை
அவரது
நாவலின்
கதாநாயகனுடன்
ஒப்பிட்டு நூலை அறிமுகம் செய்ய வந்த சான்யோ கலாய்த்தார். ‘காதலே சுவாசமாய்’
என்ற
அவரது
நாவலின்
பெயரைப்
பார்த்து
தேவாவை அமீரகத்தின்
ரமணிசந்திரன்
என
நினைத்தால்,
அவர்
மேடையேறி
‘அய்யனார்
விஸ்வனாத்தின் புத்தகத்தைச்
சாருநிவேதிதா
பிரஞ்சு
எழுத்தாளருடன் ஒப்பிட்டது,
கொஞ்சம் தஸ்தயேவ்ஸ்கி,
ஜெயமோகன்
நாவல்
கலையில்
கூறும்
வாசக
இடைவெளி’
என
பேசியதும்
‘யப்பாவ்’
இவ்வளவு
பெரிய
ஆளா
நீ
என
வியக்க
தோன்றியது.
ஜெஸிலா
பானுவின்
மூசாவைப்
பற்றி
ஒருவர்
அழகிய
முறையில்
அறிமுகம்
செய்தார்
பெயர்
நினைவில்
இல்லை.
அதை
தொடர்ந்து
ஹேமாவின்
காணொளி. அதில் மூஸாவை வாழ்த்தி வரவேற்றதுடன் கலை வெளிப்பாடுகள் எல்லாம்
காமத்தின் மடைமாற்றம் (sublimation) என்று சுகிசிவத்தை முன்வைத்து கூறியது எனக்கு எப்போதோ படித்த ஓஷோவின்
வார்த்தைகளை நினைவூட்டியது. அடுத்து
பிரபு
கங்காதரனின்
காளியைப்
பித்து
மனோ
நிலையின்
கவித்துவமாக
கூறியது புத்தகத்தை படிக்கத் தூண்டியது. இப்படி மூன்று
நேரம்
நடந்த
நிகழ்வில்
பேசிய
தெரிசை
சிவா,
FM புகழ்
RJ நாகா,பிலால்
அலியார்,
ஷோபியா
துரைராஜ்
என
ஒவ்வொருவரது
பேச்சும்
மிகவும்
சுவராஸ்மாக
இருந்தது.
உச்சக்கட்டமாக பாலாஜியின்
கலாய்பில்
அரங்கமே
அதிர்ந்தது.
ஒட்டு
மொத்தமாய்
சொன்னால்
இந்த
குழுவின் ஓரத்தில்
உட்கார்ந்து
நாமும்
தேநீர், சம்சாவுடன்
கொஞ்சம் இலக்கியமும்
தெரிந்து
கொள்ளலாம்
என்ற
நம்பிக்கையை
ஏற்படுத்தியது.
(ஆசிஃப்
பாய்
your attention please.)
இதைத்தவிர,
முஹைதீன்
பாட்சா,
மஜீத்
பாயுடன்
நீண்ட
இடைவேளிக்குப் பிறகு
அமீரகத்தின்
இலக்கிய
ஆளுமை
விருது
பெற்ற
ஆபிதீன்
நானாவைச்
சந்தித்ததில்
கூடுதல்
மகிழ்ச்சி.
இந்த
நிகச்ழ்சிக்கு வாருங்கள்
சந்திப்போம்
என
என்னை
அழைத்து
விட்டு
வேலை நிமித்தம்
தாயகம்
சென்றிருக்கும்
‘மணல்
பூத்த
காடு’
யூசூஃப்,
எஸ்.
ரா.
வுக்கு
100 சிறுகதைகள்
ஈந்த
ஷென்ஸி
இவர்களை
சந்திக்க
முடியாதது
தான்
எனக்கு
குறை.
அரங்கை
விட்டு
வெளியில்
வரும்
போது
சந்தித்த
சிவகுமார்
கையில்
வைத்திருந்த
‘நீட்ஷேயின் ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்’ என்ற புத்தகத்தை ஆவலுடன் நான் பார்ப்பதை பார்த்ததும்
, புத்தகத்தை என்னிடம் நீட்டிய வண்ணம் நீங்கள் எந்த குழுமம்
(எழுத்தாளர் குழுமாமா? வாசகர் குழுமமா?)
என கேட்டபோது எனக்கு எங்க ஊரில் சிறுவயதில் கேட்ட ஆன்மீக சொற்பொழிவின்
நினைவு வந்தது. நான் ஆன்மீக எழுத்தாளர் என ஆசிப்மீரான் அண்ணாச்சி
சொல்லி விட்டதால் ஆன்மீகம் பற்றிச் சொல்லாமல் இந்த பத்தியை முடிக்கக் கூடாது என்பதால்
அதையும் இங்கே பதிவு செய்து விடுகின்றேன்.
எங்கள் ஊரில் நாகூர் கந்தூரிக்கு முதல் நாள் வானவேடிக்கை நடைபெறும். அதில் வேடிக்கை பார்க்க வந்த ஒருவர் பள்ளிவாசல் திண்ணையில் படுத்து தூங்கி
விட்டார். அதிகாலையில் ‘பஜ்ர்’ தொழுகைக்கு அவரை எழுப்பியதால் தொழுகையில் சேர்ந்து கொண்டார். அத்தஹியாத் என்ற தொழுகையின் அமர்வு இருப்பில் அவரது வலது புறம் ஷாஃபி மதஹபை
சேர்ந்தவர் அமர்வில் ஆள்காட்டி விரலை நீட்டி தொழுது கொண்டிருந்தார். அவரை
சைடு பார்வையில் பார்த்த வானவேடிக்கை நண்பரும் விரலை நீட்டினார். அவரது இடது பக்கத்தில் இருந்தவர் ஹனஃபி மதஹபை சேர்ந்தவர் அதனால் அவர் விரலை
சிறிது நேரம் நீட்டி விட்டு மடக்கி விட்டார். இடது புறம் சைடு
பார்வையால் பார்த்த வானவேடிக்கை நண்பருக்கு நீட்டனுமா? மடக்கனுமான்னு
குழப்பமாய் போய்விட்டது, ஆகவே தொழுகை முடியும் வரை கொஞ்ச நேரம்
நீட்டுவதும், கொஞ்ச நேரம் மடக்குவதுமாக சமாளித்தார். தொழுது முடித்ததும் பக்கத்தில் தொழுதவர் நீங்கள் ஷாஃபியா, ஹனஃபியா என்றார். வானவேடிக்கை நண்பருக்கு அவர் கேட்பது
ஒன்றும் புரியவில்லை. பேந்த பேந்த விழித்தார். எந்த மதஹப் என அவர் மீண்டும் அழுத்தி கேட்கவே, அவர் ஏதாவது ஒரு பதிலை சொன்னால் தான் தன்னை விடுவார்
என்பதால் “ நான் வாணவேடிக்கை மதஹபு” என்றார். எழுத்தாளர் குழுமாமா? வாசகர் குழுமமா? ன்னு
என்னை கேட்ட சிவக்குமார் சார், நானும் வாணவேடிக்கை மதஹப் தான்
சார்.
இந்த நிகழ்வை அருமையாக நடத்திய ஆசிஃப் மீரான் பெருமுயற்சி எடுத்து
அமீரக எழுத்தாளர்களின் சிறுகதைகளை ‘ஒட்டக மனிதர்கள்’ என்ற
பெயரில் வெளியிட்டிருக்கின்றார். எனது சிறுகதை! ஒன்றும் அதில் உண்டு என்பதால் வாங்கி வந்த புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன்.
எடுத்தவுடன் ஆபிதீன் நானாவின் “ வாழைப்பழம்” நாப்பத்தாறு பக்க சிறுகதை. நாசமத்து போற ஆபிதீன் நானா
ஏன் தான் இப்டி கொள்ளை அழகான எழுத்துக்கு நடுவில் ‘ஆபாசம்’
கலந்து எல்லா ஹைசியத்தையும் எழுதுராஹலோ. ஹமீது
ஜெஹபர் நானாவை கேட்டால் அது தான் அபிதீனின் signature என்பார்.
என்ன பலாவோ என்று ஏசிய வண்ணம் ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டு
அவசர அவசரமாக ‘கனியாப்பிள்ளைங்க’ கண்ணுல
படக் கூடாதுன்னு அலமாரியில் புத்தகத்தை ஒளித்து வைத்தேன் மீதி கதைகளை வாசிப்பதற்காக.
நன்றி!
வஸ்ஸலாம்.
பி.கு. ஷாபி, ஹனபி மதஹப் என்பது இரண்டு இஸ்லாமிய சிந்தனை பள்ளி ( School of
thoughts)
உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.