நம் மனைவி, மக்களை விட ஏன் நம் உயிரையும் விட இறைத்தூதரை நேசிக்காதவரை நம் இறை நம்பிக்கை முழுமையடையாது என்பது ஒரு பிரபலமான நபிமொழியின் சாரம். ஏன் அந்த அளவு நபியை நேசிக்க வேண்டும்?
000
ஒரு ஞானாசியரிடம் எனக்கு இறைஞான பாடங்களை சொல்லித் தாருங்கள் என ஒரு மனிதன் வந்தான். அவனிடம் “என்னிடம் மாணவனாக ஆகுவதற்கு ஒரு தகுதி வேண்டும் என்றார்” அந்த குரு.
“என்ன தகுதி… சொல்லுங்கள்” என அவன் ஆவலாய் கேட்க,
உன் வாழ்க்கையில் யாரையாவது அல்லது எதையாவது நீ காதலிசிருக்கியா? என்றார்.