‘வெல்கம் அத்வானிஜி!’ என்ற எனது கட்டுரையை படித்து
கருத்து தெரிவிக்க நண்பர் தாஜ் அவர்களை கேட்டிருந்தேன். பதிலுக்கு தாஜ் ஒரு கட்டுரையே எழுதிவிட்டார். பெரியாரின் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட தாஜின் இந்த கட்டுரை ஒரு விதத்தில்
என் கட்டுரைக்கு எதிர்வினையாக ‘கேப்பையில் நெய்வடிகிறது என்றால் கேட்பாருக்கு எங்க
போச்சு புத்தி?’ என சாடுகின்றது. அத்வானிஜியின் வார்த்தைகள் அரசியல் காய் நகர்த்தல் என்றாலும் அதை அவர்கள் உண்மையாக்கினால் எவ்வளவு நல்ல விசயம் என்பதை சிந்திக்க தூண்டுவது தான் என் கட்டுரையின் நோக்கம்.யார் ஆரம்பித்து வைத்திருந்தாலும் மதவெறி என்கின்ற
புற்று நோய் ஒழிக்கப்பட வேண்டும், மனிதநேய வெறி தளைக்க வேண்டும் என்பதில் என்னை விட
தாஜுக்கு அக்கறை அதிகம் என்பதே என் நம்பிக்கை. இருந்தும் மனதால் பலமடங்கு என்னை விட
இளையவர் என்பதால் மிகவும் உணர்ச்சி வசப்படுகின்றார். வார்த்தைகளில் இத்தனை கடுமை தேவையில்லை என்றாலும் தாஜ் பொய் சொல்லவில்லை என்பது ஒரு வருத்தத்திற்குரிய உண்மை.
ஒரு முறை முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் "ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?" என வினவினர். அதற்கு நபியவர்கள் "இல்லை. மாறாக, மனிதன் தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணை புரிவதுதான் இனவெறியாகும்" என்றார்கள். (ஆதார நூல்: அபூதாவூத்)
தோழமையுடன்
Showing posts with label அத்வானி. Show all posts
Showing posts with label அத்வானி. Show all posts
Monday, October 22, 2012
Monday, October 1, 2012
வெல்கம் அத்வானிஜி!
இஸ்லாமியர்கள்
உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு பாஜக எதிரான கட்சியல்ல என்பதை நாம் மீண்டும்
உணர்த்த வேண்டும். காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகளுக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், முஸ்லீம்களின் ஓட்டுக்களையும் பெறும் வகையில் கட்சியை நாம் முன் நிறுத்த வேண்டும்
என்று பாஜக மூத்த தலைவரான அத்வானி கூறியுள்ளார் என்பதை படித்ததும் திரு.ராமகோபாலன் மீலாது விழா மேடையில் பேசுவது போலும், நோன்பு விருந்தில் கஞ்சி குடிப்பது போலும் மனதில் ஒரு காட்சி வந்தது.
லேபிள்கள்:
அத்வானி,
அரசியல்,
இந்துத்வா,
பாபரி மஸ்ஜித்,
பாஜக,
மனித நேயம்,
ராமகோபாலன்
Subscribe to:
Posts (Atom)