தோழமையுடன்

Thursday, November 17, 2011

மாலேகான் குண்டுவெடிப்பு: அப்பாவிகளை சிறையில் அடைத்த அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்களா?


 இஸ்லாமிய தீவிரவாதி, இந்து தீவிரவாதி என தீவிரவாதிகளுக்கு மதவர்ணம் பூசி நேசமும், பகையும் பாராட்டும் நோய் மனப்பான்மை ஒழியட்டும். தீவிரவாதத்தை ஒழிப்பதில் அனைவரும் ஒன்றுபடுவோம். அதே நேரத்தில் ஆயிரம் குற்றவாளிகள் தப்பி விடலாம் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது என்பதையும் நினவில் கொள்வோம். ஒரு சாதாரண மனிதனின் நிம்மதியான வாழ்வு தவறான குற்றச்சாட்டுகளால் சிறைகம்பிகளுக்கிடையே சிதைக்கப்படும் போது அவனும் அவன் குடும்பமும் படும் வலியை,வேதனையை போக்கி எது தான் ஈடு செய்யும்.  

Wednesday, November 16, 2011

கலைந்து போன கனவு ராஜ்ஜியம் –சிதம்பர பிள்ளை சிவக்குமார்


 'ஆபிதீன் பக்கங்களில்' வந்த இந்த சிறுகதையை படிப்பதுடன் கட்டாயமாக அதன் பின்னூட்டங்களையும் அவசியம் படியுங்கள். இலங்கையை சேர்ந்த நம் அன்பு சகோதர சகோதரிகளின் உணர்வுகள் மாம்சம் வார்த்தையானது போல் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. 


Thursday, November 10, 2011

வழிகாட்டுகிறது கோவை! - ஆளுர் ஷா நவாஸ்



நாடு அதை நாடு
இந்தியா…
என் தாய்நாடும் அல்ல
தந்தைநாடும் அல்ல
இந்தியா…
என் நாடு!
                   கவிஞர் இஜட். ஜபருல்லா

இந்து, கிருஸ்தவ சகோதரர்களுடன் முஸ்லிம்கள் கைகோர்த்து சகோதரர்களாக இந்தியாவின் முன்னேற்றத்திற்கு உழைக்க வேண்டும்  என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை. அதே நேரத்தில் கல்வி, வேலை வாய்ப்பு என எல்லா வகையிலும் போதிய பிரதி நிதித்துவம் இல்லாமல் பின் தங்கி நிற்கும்  சிறுபான்மை சமுதாயம் ஒருங்கிணைந்த ஓட்டு வங்கியாக தங்களை நிறுவிக் கொள்வதை நியாய உணர்வு உள்ளவர்கள் பிரிவினைவாதமாக கருதமாட்டார்கள். 


Thursday, October 20, 2011

அன்னா ஹஸாரேவின் ஜனலோக்பால் இப்படி இருந்தால் எப்படி இருக்கும்!

 
ஆபிதீன் பக்கங்களின் வெளிவந்த எனது இந்த கட்டுரையை அவரது அறிமுகம் மற்றும் போனசாக இணைத்த குறிப்புகளுமாய் நன்றியுடன் மீள்பதிவு செய்துள்ளேன்.