தோழமையுடன்

Thursday, January 31, 2013

கமல்ஹாசனுக்கு இஸ்லாமிய சமூகத்தின் நன்றி! நன்றி! நன்றி!


அன்புள்ள கமல்ஹாசனுக்கு
இஸ்லாமிய 'பொதுஜனங்களில்' ஒருவனாக...

 உங்களின் 'விஸ்வரூபம்' தொடர்பாக பதிந்த ஒரு  மடல்.
 தாலிபான்களின் தீவிரவாதத்தை வென்றெடுக்கும்டாலர் தேசங்களின் உள்ளங்கவர் 'ஃபார்முலாவை' மையப்படுத்தி நீங்கள் கதையமைத்தது ஆஸ்கரை நோக்கிய உங்கள் காய்நகர்த்தலாக இருக்கலாம்.
 
ஆனால் மனித நேயமிக்க கலைஞரான நீங்கள்
சமூக பொறுப்புடன் நடந்து கொள்ளக் கூடிய நீங்கள்


கமல் ....நீங்களா இப்படி செய்தது?

Wednesday, January 23, 2013

அழகிய முன் மாதிரி



Dr. Aaidh al-Qarni Most Prominent Salfi Scholar. He has Written Many of Books including "Don't Be Sad". this photowas taken Dr.Abdullah al Fadq's House in Jeddah On the day Of Meeladun Nawbi Function.


Fatwa from Dubai on celebrating the Mawlid

 நபிகள் நாயகத்தின் வரலாறு அடியானுக்கும், ஆண்டவனுக்கும் இடையே இருந்த திரைகள் விலக்கப்பட்ட வரலாறு என எழுத்தாளர் நாகூர் ரூமி  ஒரு நூலில் குறிப்பிடுவது எத்தனை அர்த்தம் பொதிந்த வாசகங்கள்.

Wednesday, December 19, 2012

அப்பாவிகளை குறிவைக்கும் ‘துப்பாக்கி' - எஸ்.கிருஷ்ணகுமார்

 
கீற்று இனைய இதழில் திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் (26 நவம்பர் 2012 ) எழுதிய கட்டுரை நன்றியுடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது.

அப்பாவிகளை குறிவைக்கும் ‘துப்பாக்கி' 

வைத்தியம் தெரியாதவன் கையில் கத்தியை கொடுத்து, ஆபரேஷன் தியேட்டருக்கே அனுப்பியும் வைத்த கதையாக இருக்கிறது தமிழ் சினிமாவின் இன்றைய கதி. சமீபத்திய உதாரணம், துப்பாக்கி. மக்களிடம் நேரடியாக தொடர்பு கொள்ளக்கூடிய, மக்களின் எண்ண ஓட்டங்களுக்குள் புகுந்து ஆதிக்கம் செலுத்தக்கூடிய தொடர்பியல் துறையில் இருப்பவர்கள் கட்டாயமாக பின்பற்றவேண்டிய பால பாடங்கள், மரபுகள் இருக்கின்றன. பொழுதுபோக்குவதற்காக என நேரத்தை ஒதுக்கி, பணத்தை செலவழித்து, உள்ளே வந்திருப்பவர்கள் மூளைக்குள் எதிர்மறை சிந்தனைகளை ஏற்றி அனுப்பாதிருக்கவேண்டும் என்பது அதில் முதன்மையானது. அதை, தப்பாக்கி விட்டது துப்பாக்கி! 

Sunday, December 16, 2012

கொத்தனாரின் நோட்டுசு - பா.ராகவன்


இலவசக் கொத்தனாரின் 'ஜாலியா தமிழ் இலக்கணம்' என்ற நூலுக்கு பா.ராகவன் எழுதியிருந்த இந்த புத்தக அறிமுகம் அதன் நோக்கம் சார்ந்து எனக்கு மிகவும் மகிழ்வாக இருந்தது. இது போன்ற முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டும், இந்த நூல் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற ஆவலுடன் இதை மீள்பதிவு செய்துள்ளேன். சூட்டோடு சூடாக என் மகனை அலைபேசியில் அழைத்து எனக்கு ஒரு பிரதி வாங்கி வருமாறும் சொன்னேன். நீங்களும் வாங்கி பிள்ளைகளுக்கு பரிசளிக்கலாமே!