தோழமையுடன்

Wednesday, June 30, 2010

கேள்விகளும் பதில்களும்: ஒளி வீசும் 'இருண்ட காலம்' - குறும்படம்

கேள்விகளும் பதில்களும்: ஒளி வீசும் 'இருண்ட காலம்' - குறும்படம்

அந்த இரண்டணா

குளச்சலை சேர்ந்த நண்பர் ஜாஹிர் ஹுசன்(துபாய்) அனுப்பிய மின்னஞலிருந்து படிப்பினைக்குரிய இந்த சம்பவம் என்னை மிகவும் கவர்ந்தது. இதோ உங்கள் பார்வைக்கு....

சிறந்த மார்க்க விற்பன்னரான அஹ்மத் ஜீவன் ஒளரங்கசீப் ஆலம்கீர் பாதுஷாவின் ஆன்மிக ஆசானாக விளங்கினார். புனித ரமழான் மாதத்தில் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசி மகிழவும் ஒன்றாகச் சேர்ந்து தொழவும் செய்துவந்தனர். ரமழான் மாதம் முடிந்து ஈத் பெரு நாளும் வந்தது. வழக்கம்போல் அன்றும் பெருநாள் தொழுகையை ஒன்றாகச் சேர்ந்து நிறைவேற்றினார்கள்.

Monday, June 28, 2010

உள்ளத்தில் இருக்கும் அதிசய ஊற்று!


நீங்கள் ஒன்றையும் அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்களின் தாய்மார்களின் வயிறுகளில் இருந்து உங்களை வெளியாக்கினான். மேலும் அவன் உங்களுக்கு செவிப்புலனையும், பார்க்கும் ஆற்றலையும், இதயங்களையும் நீங்கள் நன்றி செலுத்திடும் பொருட்டு அமைத்தான்.(16:78)
ஒன்றையும் அறியாத நிலை என்பது மனதில் எந்தக் கற்பனை கருத்துருவாக்கமும் இல்லாத நம் தூய இயற்கை நிலை.

Saturday, June 26, 2010

மனமே நீ மயங்காதே!



وَكَأَيِّن مِن دَابَّةٍ لَا تَحْمِلُ رِزْقَهَا اللَّهُ يَرْزُقُهَا وَإِيَّاكُمْ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
(இந்த உலகில்) உயிர் வாழும் பிராணிகள் எத்தனையோ இருக்கின்றன. அவை தங்கள் உணவைச்(ரிஜ்கை) சுமந்து திரிவதில்லை. அவற்றிற்கும் உங்களுக்கும் அல்லாஹ் தான் உணவளிக்கின்றான்(ரிஜ்க் அளிக்கின்றான்). அவனோ செவியுறுபவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.(29:60) 

ஏன் தேவையில்லாமல் கவலைப்படுகின்றாய். மிருகங்களுக்கு இருக்கும் பக்குவம் கூட உனக்கில்லையே என பொட்டில் அறைகின்றது இந்த திருவசனம்.

ஆலமே அர்வாஹ்!

 
(நபியே!) உம்முடைய ரப்பு (மனித இனத்தின் ஆதி பிதாவான) ஆதமின் மக்களாகிய அவர்களது (தந்தையின் )முதுகுகளிலிருந்து, அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக்கி வைத்த போது, ( அவர்களை நோக்கி,) “நான் உங்கள் ரப்பு அல்லவா?” (என்று கேட்டான்) ஆம். “நாங்கள் (அதற்கு) சாட்சி கூறுகின்றோம்” என்று அவர்கள் சாட்சி கூறியதை (நீர் அவர்களுக்கு) நினைவூட்டும், ஏனென்றால் “நிச்சயமாக நாங்கள் இதனை விட்டும் மறதியாளர்களாக இருந்து விட்டோம்” என்று மறுமை நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்காக. (7:172)

Thursday, June 24, 2010

வாழ்வில் தேவையுள்ளவர்களுக்கு மட்டும்!


“உங்களுக்கு யாதொரு நன்மையோ தீமையோ செய்ய சக்தியற்ற அல்லாஹ் அல்லாதவற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள்”, என்று (நபியே!) நீங்கள் கேளுங்கள். அல்லாஹ் நன்கு செவியுறுபவனாகவும், அனைத்தையும் அறிந்தவனாகவும் இருக்கின்றான்.(5:76)
அவர்களுக்கு எத்தகைய உதவியும் செய்திட அவை சக்தி பெறமாட்டா. (அது மாத்திரமல்ல) தமக்குத் தாமே உதவி செய்து கொள்ளவும் முடியாது. (7:192)

Wednesday, June 23, 2010

புல்லாங்குழல் என்னும் ஏகத்துவ ரகசியம் !


நாங்கள் ஒரு புல்லாங்குழல் போன்று தான் இருக்கின்றோம். அதன் ஓசையோ உன்னுடையது (இறைவனுடையது) _ மஸ்னவி ஷரீபில் மவ்லானா ரூமி (ரஹ்)
“புல்லாங்குழல்” என்பது ஓரு மகத்தான ஆன்மீகக் குறியீடு. நீங்களும் நானும் ஒரு வகையில் புல்லாங்குழலைப் போன்றவர்கள். என்ன ரூமி (ரஹ்) இப்படிச் சொல்கின்றார்கள் என அதிர்ச்சியடையாதீர்கள். இதை விளங்க நாம் திருக்கலிமாவை விளங்க வேண்டும். 

Monday, June 21, 2010

ஒவ்வொரு வினாடியும் கனி தரும் மரம்

அல்லாஹ் ஆதம் நபி முதல் வந்த ஒவ்வொரு நபியின் மூலமும் ஒரு முக்கிய செய்தியை உலத்தினருக்கு அறிவித்து கொண்டே இருக்கின்றான். அந்த தகவலை நாம் அறிய முயற்சிக்காமல் இருக்கலாமா?

அதுவும் ஒரே ஒரு வரி செய்தி தான். ஆனால் கடலையே கூஜாவுக்குள் அடைத்தது போல முழு குர் ஆனின் அடிப்படையும் தன்னகத்தே கொண்டது அந்த ஒரு வரி. அனைத்து நபிமார்களும் வந்த தூதுத்துவத்தின் அடிப்படை நோக்கமும் அந்த ஒரு வரி செய்தி தான்.

Thursday, June 17, 2010

அகப்பார்வை அத்தியாயம் 4

மறைந்த பொக்கிஷம்
மறைந்த பொக்கிஷமாக இருந்தது அல்லாஹ்வின் அகத்தே அமைந்த அவனது அருளாளன் (ரஹ்மான்), உணவளிப்பவன் (ரஜ்ஜாக்), படைப்பவன் (காலிக்) முதலிய எண்ணற்ற திருநாமங்களும் (அஸ்மாக்களும்) அந்த திருநாமங்களுக்குரிய தெய்வீக குணங்களும் (சிஃபாத்துகளும்) தான். இந்த குணங்கள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக சேர்த்து உலூஹிய்யத் என்னும் இறைத் தன்மை, ருபூபிய்யத் என்னும் ரட்ஷகத்தன்மை கொண்ட குணங்கள் எனவும் கூறுவார்கள். இந்த திருநாமங்களுக்கும், தெய்வீக குணங்களுக்கும் உரிமையாளன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய மகத்தான ஏகத்துவ ஞானத்தின் மையக் கருப்பொருளாய் இருக்கின்றது.

அகப்பார்வை அத்தியாயம் 3

மறைக்க முடியுமா
மறைவான ஒருவனை மனதில் நிறுத்துவது எப்படிஇறைவன் மறைந்தவனா? என்பதைப் பற்றி அறியுமுன் இதை விளங்க வேண்டியதன் அவசியம் என்ன என்பதை முதலில் பார்ப்போம்.
(இஹ்ஸான் என்பது) அல்லாஹுவை அவனைப் பார்ப்பது போன்று நீ வணங்குவதாக இருக்கும், அப்படி (அகப்பார்வையினால்) நீ அவனைப் பார்ப்பவனாக ஆகியிருக்கவில்லையானால், அவன் உன்னை நிச்சயமாக பார்த்தவனாகவே இருக்கின்றான்.” இது (புகாரி, முஸ்லிம் ஷரீஃபில் உள்ள) பிரபலமான நபிமொழி

அகப்பார்வை. அத்தியாயம் 2.

படைக்கப்பட்டதன் நோக்கம் என்ன 
மானிட ஆன்மாக்கள் உண்டாக்கப்படும் போதே மண்ணுக்குள் கிடக்கும் விதையைப் போல, கடல் ஆழத்தில் கிடக்கும் முத்தைப் போல, உலோக சுரங்கங்களில் கிடக்கும் வைரங்களைப் போல அரும் சக்திகளால் பதிக்கப் பட்டு விடப்படுகின்றன. கல்வி, படிப்பு இவற்றால் நாம் செய்வது யாதெனில் இப்படி ஏற்கனவே நம்மில் மறைந்து கிடக்கும் சக்தியை வெளியில் யதார்த்தத்திற்குக் கொண்டு வர முயலுவதேயாகும். “கல்விஎன்றால் ஆன்மாவை அதன் சரியான நிலைக்குக் கொண்டு வருவதேயாகும்

(அர் ரிஸாலத்துல் லதுனிய்யா - இறையருள் ஞானம் என்னும் நூலில் இமாம் கஸ்ஸாலி (ரஹ்))

அகப்பார்வை அத்தியாயம் 1

மனிதனுக்கு வானம், பூமியை வசப்படுத்திக் கொடுத்ததாக இறைவன் சொல்கின்றான்.

أَلَمْ تَرَوْا أَنَّ اللَّهَ سَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَأَسْبَغَ عَلَيْكُمْ نِعَمَهُ ظَاهِرَةً وَبَاطِنَةً
வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கின்றான் என்பதையும், இன்னும் உங்கள் மீது தன் அருட்கொடைகளை வெளிப்படையாகவும் (known and seen) மறைவானவையாகவும் (unknown and unseen) நிரப்பமாக்கி வைத்துள்ளான் என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? - அல் குர்ஆன் (31:20)

நம்மில் உள்ள இறைவன் வழங்கிய மறைவான அந்த அருட்கொடைகள் என்ன?