தோழமையுடன்

Friday, June 29, 2012

ஷாருக்கானும் அடையாள அரசியல் வேட்டையும் - அ.முத்துகிருஷ்ணன்


நம் தாயகத்தின் தவப்புதல்வர்களில் ஒருவரான தத்துவ மேதை திரு. ஜே.கிருஸ்ணமூர்த்தி அவர்கள் கேட்பது, உன்னிப்பாக கேட்பது (hearing and listening) என்பதன் வித்தியாசத்தை இப்படி விளக்குவார் :

கவனத்துடன் கேட்பது என்பதில் ஒப்புக் கொள்ளுதலோ மறுத்தலோ இல்லை. உங்களிடம் பேசுபவர் எதை சொல்ல விழைகிறார் என்பதை பேச்சளவில் மட்டுமின்றி ஆழமாக புரிந்து கொள்ளவே நீங்கள் கவனத்துடன் கேட்கிறீர்கள். அவர் சொல்வதை எதிர்த்து பேசினாலோ, உங்கள் தனிப்பட்ட கருத்தை திணிக்கப் பார்த்தாலோ கவனமாக கேட்பது என்பது இல்லாமல் போகிறது. விமர்சனங்களோ, மொழிபெயர்ப்புகளோ செய்யாமல் சொல்லப்படும் விசயத்தை கவனத்துடன் கேட்பதால் அடிப்படை மாற்றம் பெற்ற முழுமையான புரட்சி, உள்ளாழ் மனதில் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அத்தகைய புரட்சி மட்டுமே மதிப்பிற்குரியது. அடையத் தக்கது என்பார் ஜே.கே.



உயிர்மையில் வெளிவந்த அ.முத்துகிருஷ்ணன் அவர்களின் இந்த அருமையான கட்டுரை நன்றியுடன் மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது. முத்துகிருஷ்ணனின் இந்த கட்டுரை நம் அகசெவியின் கவனமாக கேட்டலை வேண்டி நிற்கிறது.

Thursday, June 21, 2012

என் பெயர் பஷீர் ( நகைச்சுவை கதை)

 “நகைச்சுவையாக எழுதி தாருங்கள் அமீன்” என ஆபிதீன் நானா கேட்டுக் கொண்டதற்காக எழுதப்பட்ட கதை. ‘ஆபிதீன் பக்கங்களில்’ வெளியிடப்பட்டது. 

“சிரிக்க தெரிந்தவர்கள் இந்த கதையை வாசியுங்கள்” என எழுத்தாளர் ஆபிதீன் நானாவும்,  “கோடையின் அவஸ்த்தையிலிருந்து கொஞ்சம் விடுப்பு தந்த சுகத்தை அனுபவித்தேன்” என எழுத்தாளர் தாஜும் பாராட்டிக் கூறியதால் சிற்சில மாற்றங்கள், கூடுதல் சம்பவத்துடன் புல்லாங்குழலில் மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Thursday, June 14, 2012

இன்னுமொரு தரிசனம்! - தாஜ்

 

மலையாளக் கவிஞர் ஐய்யப்பன் அவர்களது, 'ஐய்யப்பன் கவிதைகள்' தொகுப்பிற்கான எழுத்தாளர் தாஜின் மதிப்புரை. உன்னதம் நவ, டிச 2005 இதழில் வெளி வந்தது. அவரே செய்த சில மாற்றங்களுடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது.

சுமார் பதிமூன்று ஆண்டுகளுக்கு முன் நண்பரும் படைப்பாளியுமான ஜெயமோகனால் எனக்கோர் பின்னடைவு ஏற்பட்டது. சிற்றிதழ்களின் வழியே, தமிழ் மொழியில் மாற்றம் காணும் மலையாளக் கவிதைகளைத் தேடி ஆர்வமாய் வாசிப்பதிலிருந்து நேர்ந்த பின்னடைவு அது.

Sunday, June 10, 2012

கடந்த கால காட்சி யாவும் கண்ணில் அலையாய் மோதிடும்!

“கடந்த கால காட்சி யாவும் 
கண்ணில் அலையாய் மோதிடும்
சிறந்த காலம் எம்மை விட்டு
சென்றதை மனம் நொந்திடும்”


எங்கள் குருநாதர் (ஷைகு) ஃபைஜிஷாஹ் நூரி (ரஹ்) அவர்களின் பிரிவினால் விளைந்த இழப்பை எண்ணி வருந்தும் உள்ளங்ளில் ஒலிக்கும் பாடல் வரிகள் இவை.


Sunday, June 3, 2012

பிரம்மராஜன் - வேறொருப் புதுக்கவிதை! - தாஜ்..

 புது கவிதை எழுத பயின்ற விதத்தை சுவராஸ்யமாக எழுதியுள்ளார் கவிஞர் தாஜ்.  தாஜ் எழுதும் கவிதைகளை விட சுவராஸ்மானவை அவரது கவிதைகளை பற்றிய கட்டுரைகள். அத்துடன் பிரம்மராஜன் அவர்களின் சுவையான பேட்டியையும் இணைத்து வ.ந. கிரிதரனின் 'பதிவுகள்' (டிசம்பர் 2006) இதழில் வெளியானது நன்றியுடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது.

Saturday, June 2, 2012

அன்பு சகோதரி அஸ்மாவுக்கு!

நல்லெண்ணம் கொண்ட அன்பு சகோதரி அஸ்மாவுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தாங்கள் கேட்டிருந்த  கேள்விக்கு எழுத ஆரம்பித்த பதில் சற்றே நீண்டு விட்டதால் தனி இடுகையாய் பதிந்து விட்டேன்.

முந்தைய காலத்தில் ராபியா பஸரிய்யா ரலியல்லாஹு அன்ஹா போன்ற மகத்தான பெண்மணிகள் மார்க்க சேவையாற்றியுள்ளார்கள். இந்நாளில் பெண்கள் மார்க்க சேவைக்கு வருவது எவ்வளவு மகத்தானது!. அந்த வகையில் உங்கள் மார்க்கப் பற்றும், சேவையையும் மகிழ்ச்சியான ஒன்றாகும். தாங்கள் புல்லாங்குழலுக்கு வருகை தந்ததற்கு கூடுதல் மகிழ்ச்சி! நன்றி!

Friday, June 1, 2012

திரை விலகட்டும்!


ரகசியங்கள் பகிரங்கமாகும் மறுமை நாளில் இறைவன் பிரகடனம் செய்வான்:

 “இன்று ஆட்சியதிகாரம் யாருடையது? எல்லாவற்றையும் அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வுடையதே”. (40:16)

மிஸ்காத்துல் அன்வார் எனும் நூலில் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) இப்படி எழுதியுள்ளார்கள்.
இறைவனின் வஜ்ஹை(being) தவிர யாவும் அழிபவையாய் இருக்கின்றன. இந்த ஆத்ம ஞானம் பெற்றவர்கள், “இன்று ஆட்சியதிகாரம் யாருடையது? எல்லாவற்றையும் அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வுடையதே”. என்று இறைவன் பிரகடனம் செய்வதை கேட்க மறுமை நாளில் எழுப்பப்படும்வரை காத்திருக்க வேண்டியதில்லை. ஏனெனில் அந்த அழைப்பு சதாவும் அவர்களின் செவிகளில் ஒலித்த வண்ணமே இருக்கிறதுஎன்று.