தோழமையுடன்

Saturday, October 19, 2013

இஸ்லாம் - காலச்சுவடு கட்டுரையை முன்வைத்து

 காலச்சுவடு, அக்டோபர் 2013 இதழில் வந்த  கட்டுரையின் சுட்டி இதோ :  

 இஸ்லாம் சில புரிதல்களை நோக்கி” - களந்தை பீர்முகம்மது


கட்டுரையை படித்து விட்டீர்களா? 

இனி, அதைப் பற்றிய சில கருத்து பகிர்வுகள் உங்கள் பார்வைக்கு:



 “நபிகள் நாயகத்தின் ஈகை, தனி மனித உறவுகள், அறச்செயல்கள் போன்றவை நபிகள் நாயகத்தின் இரக்க உணர்வு என்பதாகக் குறுக்கப்பட்டுள்ளன. நபிகள் நாயகம் அழகிய முன் மாதிரி, இஸ்லாம் ஓர் அற்புதம் என்று பல்லாயிரமானோர் நிகழ்த்திவரும் விளக்கப் பிரச்சாரங்கள் இன்னமும் அதன் தொடக்க நிலையிலேயே நிற்கின்றன; இவ்வாறான சமயப் போதனைகளால், நடைமுறையில் நம் மனதுக்குள் எழும் சித்திரம் இஸ்லாம் - ஓர் ஆன்மீகத் தூய்மைஎன்பதாம். ஆனால் இதுவல்ல இஸ்லாம்!என கூறும் பீர் முகம்மது

Wednesday, October 9, 2013

விழி பிதுங்கும் எழுத்தாளர்… கண்டு கொள்ளாத தமிழ் இலக்கிய உலகம் - என். சுவாமிநாதன்


 தமிழ் படைப்பாளி குளச்சல் மு.யூசுப்புக்கு அறிமுகம் தேவையில்லை. நாவல்கள், சுய சரிதைகள், அனுபவம் பகிர்வுகள் என 28 நூல்களை, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்.
குளச்சல் மு.யூசூஃப்

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்துக்காக இவர், சங்க இலக்கிய நூலான நாலடியாரைமலையாளத்தில் மொழியாக்கம் செய்திருந்தார். 

அந்த நூலை, பிழைத்திருத்தம் செய்து தருவதாகக் கேட்டு வாங்கிய மலையாளஎழுத்தாளர் ஒருவர், அதை தனது பெயரிலேயே வெளியிட்டு விட்டார், இச் சம்பவம் நடந்து
ஒன்பது மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இன்றைய தேதி வரை, தமிழ் இலக்கிய உலகில், அது ஒரு விவாதத்தைக் கூட ஏற்படுத்தாதுதான் சோகம்.
மு.யூசுப்பை நாகர்கோயில் அருகே உள்ள புத்தன்குடியிருப்பில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம்.

 பொதுவாகவே இலக்கிய உலகில் புத்தகங்கள் எழுதியதும் சக இலக்கியவாதிகளில் பிழை திருத்தம் செய்யக் கொடுப்பது வழக்கம்.

Tuesday, October 8, 2013

என் தந்தை ஒரு ஹீரோ! - தாரிக் அன்வர்

 சாமன்யர்களின் ஒருவராய் தன் வாழ்வைத் துவங்கி தன் முயற்சியாலும், பிறருக்கு உதவும் நற்குணத்தாலும் இன்று ஏர் இந்தியாவில் ஒரு மேனேஜராக வளர்ந்து நிற்க்கும் நூர்முஹம்மது என் நெருங்கிய நண்பர். அவரது 50ஆவது
இடது கோடியில் இருப்பது நூர் முஹம்மது
பிறந்த நாளின் போது அவரது மகன் தாரிக் எழுதிய கடிதம் என் கண்களில் ஆனந்த கண்ணீரை வரவழைத்தது. தாரிக்கின் வார்த்தைகள் கொஞ்சம் கூட மிகைப்படுத்தப்படவில்லை. எல்லோருக்கும் உதவும் அவர் இனிய குணத்தை நானே என் குடும்பத்தினருடன் பல முறை பகிர்ந்ததுண்டு. அந்த நற்குணம் தான் அவருக்கு இறையருளை பெற்றுத் தந்தது. இறைவன் அவருக்கு வழங்கிய முதல் அருட் கொடை
அவரது குணத்திற்க்கு தோதாக அமைந்தஅவரது அன்பு மனைவி நூர்ஜஹான்.

 இறைவன் என் அன்பு நூருக்கும் அவரது இனிய குடும்பத்தினருக்கும் ஆரோக்கியத்துடன் கூடிய நீண்ட ஆயுளும், இறை நம்பிக்கையுடன் கூடிய இனிய நல்வாழ்வையும் மென்மேலும் தருவானாக! ஆமீன்!  அவரது அர்த்தமுள்ள வாழ்க்கை நமக்கும் படிப்பினை என்பதால் தாரீக்கின் கடிதத்தை பதிந்துள்ளேன். சிரமம் பாராது இதை படித்து நீங்களும் இறைவனை இறைஞ்ச வேண்டுகின்றேன்!.

தாரிக் - இஞ்சினியர்  working in சிங்கப்பூர்
Dear Atha,

An Honest Message For You On Your 50th Birthday...

I ask dua to Allah SWT to grant you long, healthy and peaceful life. I am kind of an introvert. I always keep my feelings to myself. I think it is time to tell my feelings to my loved ones. People say “my father is my Hero”, this phrase is good to hear, yet only few fathers really deserve it. I am going to justify why you deserve it. When I think about you, the first thing which comes to my mind is your sacrifice to our family. I am going to split yourself in to different characters and going to find out in which character you score the most. Let’s split you into a husband, a father, a son, a brother, a friend, an uncle, a teacher/guide, an employee, a student, and a Muslim.