தோழமையுடன்

Showing posts with label இப்னு அதாவுல்லாஹ் ஸிக்கந்தரி(ரஹ்). Show all posts
Showing posts with label இப்னு அதாவுல்லாஹ் ஸிக்கந்தரி(ரஹ்). Show all posts

Monday, September 15, 2014

முகநூலும் ஆன்மீகத் தேடலும்

 ஃபேஸ்புக் எனும் முகநூல் ஆன்மீகம் பகிர்வதற்கான ஊடகமா?
 
ஆன்மீகத்தின் உயர்வை வைத்து பார்த்தால் இதற்கு ‘இல்லை’ என்பது தான் மிகவும் சரியான பதில்.

ஆனால் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்று முகநூல் நல்லதையும் கெட்டதையும் மிக விரைவாக பரப்பும் ஓர் ஊடகமாக சகல துறைகளிலும் கிளைபரப்பி நிற்கிறது. 

அதில் அற்ப விசயங்களை கூட பகிர்ந்து கொள்ளும் எத்தனையோ பேர்களுக்கு மத்தியில் ஆன்மீகம் தேடும் என் முகநூல் நண்பர்களை விசேசமாக பாராட்டாமல் இருக்க முடியாது.

அவர்கள் ஆன்மீகம் அறிந்தவர்கள், அறிய முயல்பவர்கள் என ஆன்மிகத்தின் பல தரப்பட்ட நிலையில் உள்ளவர்கள். 

அவர்களுக்காகவும் இன்னும் எங்களைப் போன்ற உங்கள் அனைவருக்காகவும் இந்த பகிர்வு……

Wednesday, May 7, 2014

தூரமான நெருக்கம்!

 வீட்டுகுள் நுழைந்ததும் “என்னங்க அஹ இன்னைக்கு திரும்பி வந்தாஹங்க!” என்றாள் என் மனைவி.
 
“எஹ?” என்றதும்.

“தாவா ஆண்டிங்க!”  புன்னகையுடன் அவள் சொன்னதும், அதே கேலிப்புன்னகை என் முகத்திலும் பரவியது.

‘தாவா ஆண்டி(Dawa Aunty) ’ என அழைக்கப்படும் 65 வயது மதிக்க தக்க மூதாட்டி நேற்று தான் எங்கள் வீட்டுக்கு முதன் முறையாக வந்தார். நடுப்பகல் உச்சி வெயில் நேரத்தில் வியர்க்க விருவிருக்க வந்த தாவா ஆண்டியை மிகுந்த மரியாதையுடன் உள்ளே அழைத்து சென்று உபசரித்தாள் என் மனைவி.

அதிலும் ‘நான்’ எழுதிய ஆன்மீக புத்தகத்தை குறித்து “ ரெண்டு தடவ படிச்சேன்மா. ரொம்ப நல்ல புக்கு. உன்னட மாப்பிளை ரொம்ப புத்திசாலிம்மா” என்று தாவா ஆண்டி சொன்னதும் ‘தன் கணவனை ஆன்றோன் என சொல்லக் கேட்ட’ என் மனையாள் ‘மணந்த போதினும் பெரிதுவந்து’ தாவா ஆண்டியையும் பெரிதுவக்கத் துவங்கினாள். 

Saturday, March 31, 2012

ஞான வழி நுட்பங்கள் (“ஹிகம்”) ஒர் அறிமுகம்


ஆன்மீக வழிநடப்போர்கள் அனைவருக்கும் வழிகாட்டும் அற்புத நூல் ‘ஹிகம்’ . இது ஷாதுலியா ஆன்மீகப்பாதையின் வழி வந்த இப்னு அதாவுல்லா ஸிக்கந்தரி (ரஹ்) அவர்களால் எழுதப்பட்டது. அவர்கள் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மகத்தான ஞான மாகான் ஆவார்கள். இதன் சுருக்கத்தை உத்தம பாளையத்தை சேர்ந்த மௌலானா மௌலவி T.S. மூஸாகான் பாகவி (ரஹ்) அவர்கள் தமிழில் தந்துள்ளார்கள்.