தோழமையுடன்

Monday, November 4, 2013

தாஜ் தந்த உண்மை கலந்த நாட்குறிப்புகள்

 ‘பால்ய விவாஹம்’ என்ற சிறுகதையை ஆபிதீன் பக்கங்களில் படித்தேன். அதைப் பற்றிய சில எண்ணப் பகிர்வுகள் இவை.

 ‘பால்ய விவாஹம்’ என்ற உடனே அட்ட பழசு – ஹப்பி காலத்து கதை இப்ப எதுக்கு என அவசரப்பட வேண்டாம். விசயம்... புதுசு கண்ணா புதுசு!.

கதைக்குள் புகுமுன் சில முன் குறிப்புகள்….

“இந்த நாவலில் உள்ள அனைத்தும் என் மூளையில் உதித்த கற்பனை. அதிலே நீங்கள் ஏதாவது உண்மையை கண்டு பிடித்தால் அது தற்செயலானது. அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன்.” – (அ.முத்துலிங்கம் “உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ நூலின் முன்பக்கத்தில் எழுதிய வரிகள் இவை) 

அ.முத்துலிங்கம் எழுதிய “உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ என்ற நூலை ‘சுயசரித தன்மைக் கொண்ட புனைவு’ என அறிமுகம் செய்கிறது உயிர்மை பதிப்பகம்.