தோழமையுடன்

Showing posts with label களந்தை பீர் முகம்மது. Show all posts
Showing posts with label களந்தை பீர் முகம்மது. Show all posts

Saturday, October 19, 2013

இஸ்லாம் - காலச்சுவடு கட்டுரையை முன்வைத்து

 காலச்சுவடு, அக்டோபர் 2013 இதழில் வந்த  கட்டுரையின் சுட்டி இதோ :  

 இஸ்லாம் சில புரிதல்களை நோக்கி” - களந்தை பீர்முகம்மது


கட்டுரையை படித்து விட்டீர்களா? 

இனி, அதைப் பற்றிய சில கருத்து பகிர்வுகள் உங்கள் பார்வைக்கு:



 “நபிகள் நாயகத்தின் ஈகை, தனி மனித உறவுகள், அறச்செயல்கள் போன்றவை நபிகள் நாயகத்தின் இரக்க உணர்வு என்பதாகக் குறுக்கப்பட்டுள்ளன. நபிகள் நாயகம் அழகிய முன் மாதிரி, இஸ்லாம் ஓர் அற்புதம் என்று பல்லாயிரமானோர் நிகழ்த்திவரும் விளக்கப் பிரச்சாரங்கள் இன்னமும் அதன் தொடக்க நிலையிலேயே நிற்கின்றன; இவ்வாறான சமயப் போதனைகளால், நடைமுறையில் நம் மனதுக்குள் எழும் சித்திரம் இஸ்லாம் - ஓர் ஆன்மீகத் தூய்மைஎன்பதாம். ஆனால் இதுவல்ல இஸ்லாம்!என கூறும் பீர் முகம்மது