தோழமையுடன்

Sunday, February 24, 2019

அமீரகத்தில் ஒன்பது தமிழ்ப் புத்தகங்களின் அறிமுக கூட்டம்

ஒரு இனிய மாலை பொழுதில் பர்துபாயில் அமீரகத்தில் ஒன்பது தமிழ்ப் புத்தகங்களின் அறிமுக கூட்டம் (22.02.2019) நடந்ததது. நிகழ்வின் சிறு குறிப்பு உங்கள் பார்வைக்கு.



நாஞ்சில் மண்ணின் மனம் பரப்பும் குட்டிகூராவின் அழகிய அறிமுகம், தொடர்ந்து காதலே சுவாசமாய் என்ற நாவலை எழுதிய தேவாவை அவரது நாவலின் கதாநாயகனுடன் ஒப்பிட்டு  நூலை அறிமுகம் செய்ய வந்த சான்யோ கலாய்த்தார்.  ‘காதலே சுவாசமாய் என்ற அவரது நாவலின் பெயரைப் பார்த்து தேவாவை அமீரகத்தின் ரமணிசந்திரன் என நினைத்தால், அவர் மேடையேறி அய்யனார் விஸ்வனாத்தின் புத்தகத்தைச் சாருநிவேதிதா பிரஞ்சு எழுத்தாளருடன் ஒப்பிட்டது, கொஞ்சம் தஸ்தயேவ்ஸ்கி, ஜெயமோகன் நாவல் கலையில் கூறும் வாசக இடைவெளி என பேசியதும்யப்பாவ்இவ்வளவு பெரிய ஆளா நீ என வியக்க தோன்றியது. ஜெஸிலா பானுவின் மூசாவைப் பற்றி ஒருவர் அழகிய முறையில் அறிமுகம் செய்தார் பெயர் நினைவில் இல்லை. அதை தொடர்ந்து ஹேமாவின் காணொளி. அதில் மூஸாவை வாழ்த்தி வரவேற்றதுடன் கலை வெளிப்பாடுகள் எல்லாம் காமத்தின் மடைமாற்றம் (sublimation) என்று சுகிசிவத்தை முன்வைத்து கூறியது எனக்கு எப்போதோ படித்த ஓஷோவின் வார்த்தைகளை நினைவூட்டியது.  அடுத்து பிரபு கங்காதரனின் காளியைப் பித்து மனோ நிலையின் கவித்துவமாக கூறியது புத்தகத்தை படிக்கத் தூண்டியது. இப்படி மூன்று நேரம் நடந்த நிகழ்வில் பேசிய தெரிசை சிவா, FM புகழ் RJ நாகா,பிலால் அலியார், ஷோபியா துரைராஜ் என ஒவ்வொருவரது பேச்சும் மிகவும் சுவராஸ்மாக இருந்தது. உச்சக்கட்டமாக பாலாஜியின் கலாய்பில் அரங்கமே அதிர்ந்தது. ஒட்டு மொத்தமாய் சொன்னால் இந்த குழுவின்  ஓரத்தில் உட்கார்ந்து நாமும் தேநீர், சம்சாவுடன் கொஞ்சம் இலக்கியமும் தெரிந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. (ஆசிஃப் பாய் your attention please.)

இதைத்தவிர, முஹைதீன் பாட்சா, மஜீத் பாயுடன் நீண்ட இடைவேளிக்குப் பிறகு அமீரகத்தின் இலக்கிய ஆளுமை விருது பெற்ற ஆபிதீன் நானாவைச் சந்தித்ததில் கூடுதல் மகிழ்ச்சி. இந்த நிகச்ழ்சிக்கு வாருங்கள் சந்திப்போம் என என்னை அழைத்து விட்டு வேலை நிமித்தம் தாயகம் சென்றிருக்கும் மணல் பூத்த காடு யூசூஃப், எஸ். ரா. வுக்கு 100 சிறுகதைகள் ஈந்த ஷென்ஸி இவர்களை சந்திக்க முடியாதது தான் எனக்கு குறை.

அரங்கை விட்டு வெளியில் வரும் போது சந்தித்த சிவகுமார் கையில் வைத்திருந்த நீட்ஷேயின் ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்என்ற புத்தகத்தை ஆவலுடன் நான் பார்ப்பதை பார்த்ததும் , புத்தகத்தை என்னிடம் நீட்டிய வண்ணம் நீங்கள் எந்த குழுமம் (எழுத்தாளர் குழுமாமா? வாசகர் குழுமமா?) என கேட்டபோது எனக்கு எங்க ஊரில் சிறுவயதில் கேட்ட ஆன்மீக சொற்பொழிவின் நினைவு வந்தது. நான் ஆன்மீக எழுத்தாளர் என ஆசிப்மீரான் அண்ணாச்சி சொல்லி விட்டதால் ஆன்மீகம் பற்றிச் சொல்லாமல்  இந்த பத்தியை முடிக்கக் கூடாது என்பதால் அதையும் இங்கே பதிவு செய்து விடுகின்றேன்.

எங்கள் ஊரில் நாகூர் கந்தூரிக்கு முதல் நாள் வானவேடிக்கை நடைபெறும். அதில் வேடிக்கை பார்க்க வந்த ஒருவர் பள்ளிவாசல் திண்ணையில் படுத்து தூங்கி விட்டார். அதிகாலையில்பஜ்ர்தொழுகைக்கு அவரை எழுப்பியதால் தொழுகையில் சேர்ந்து கொண்டார். அத்தஹியாத் என்ற தொழுகையின் அமர்வு இருப்பில் அவரது வலது புறம் ஷாஃபி மதஹபை சேர்ந்தவர் அமர்வில் ஆள்காட்டி விரலை நீட்டி  தொழுது கொண்டிருந்தார். அவரை சைடு பார்வையில் பார்த்த வானவேடிக்கை நண்பரும் விரலை நீட்டினார். அவரது இடது பக்கத்தில் இருந்தவர் ஹனஃபி மதஹபை சேர்ந்தவர் அதனால் அவர் விரலை சிறிது நேரம் நீட்டி விட்டு மடக்கி விட்டார். இடது புறம் சைடு பார்வையால் பார்த்த வானவேடிக்கை நண்பருக்கு நீட்டனுமா? மடக்கனுமான்னு குழப்பமாய் போய்விட்டது, ஆகவே தொழுகை முடியும் வரை கொஞ்ச நேரம் நீட்டுவதும், கொஞ்ச நேரம் மடக்குவதுமாக சமாளித்தார். தொழுது முடித்ததும் பக்கத்தில் தொழுதவர் நீங்கள் ஷாஃபியா, ஹனஃபியா என்றார். வானவேடிக்கை நண்பருக்கு அவர் கேட்பது ஒன்றும் புரியவில்லை. பேந்த பேந்த விழித்தார். எந்த மதஹப் என அவர் மீண்டும் அழுத்தி கேட்கவே, அவர் ஏதாவது ஒரு பதிலை சொன்னால் தான் தன்னை விடுவார் என்பதால்நான் வாணவேடிக்கை மதஹபுஎன்றார்எழுத்தாளர் குழுமாமா? வாசகர் குழுமமா? ன்னு என்னை கேட்ட சிவக்குமார் சார், நானும் வாணவேடிக்கை மதஹப் தான் சார்.

இந்த நிகழ்வை அருமையாக நடத்திய ஆசிஃப் மீரான் பெருமுயற்சி எடுத்து அமீரக எழுத்தாளர்களின் சிறுகதைகளைஒட்டக மனிதர்கள்என்ற பெயரில் வெளியிட்டிருக்கின்றார். எனது சிறுகதை! ஒன்றும் அதில் உண்டு என்பதால் வாங்கி வந்த புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். எடுத்தவுடன் ஆபிதீன் நானாவின்     “ வாழைப்பழம்நாப்பத்தாறு பக்க சிறுகதை. நாசமத்து போற ஆபிதீன் நானா ஏன் தான் இப்டி கொள்ளை அழகான எழுத்துக்கு நடுவில் ஆபாசம்கலந்து எல்லா ஹைசியத்தையும் எழுதுராஹலோ. ஹமீது ஜெஹபர் நானாவை கேட்டால் அது தான் அபிதீனின் signature என்பார். என்ன பலாவோ என்று ஏசிய வண்ணம் ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டு அவசர அவசரமாக கனியாப்பிள்ளைங்ககண்ணுல படக் கூடாதுன்னு அலமாரியில் புத்தகத்தை ஒளித்து வைத்தேன் மீதி கதைகளை வாசிப்பதற்காக.  

ஆபாசம் மட்டும் இல்லை என்றால் ஆபிதீன் நானாவின் எழுத்துகள் முழவதையும் தொகுத்து என் சொந்த செலவுலேயே செம்பதிப்பாக வெளியிட்டிருபேன் என்றார் எனக்குள் உள்ள ஆன்மீகவாதிசும்மா இறி காலச்சுவடு வெளியிட்ட அஹடஉயிர்தலத்தைகண்ணுலயே காட்டாத மனுசன் அஹ என அடக்கினேன்.

நன்றி!

வஸ்ஸலாம்.

பி.கு. ஷாபி, ஹனபி மதஹப் என்பது இரண்டு இஸ்லாமிய சிந்தனை பள்ளி ( School of thoughts)






உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.

Thursday, February 21, 2019

கீதையை எப்படி படிப்பது? ஏன்? என்ற திரு ஜெயமோகன் கட்டுரையை முன்வைத்து

அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் எழுத்துகளை விரும்பி படிக்கும் நான் ஒரு சூஃபி சிந்தனை பள்ளியைச் சார்ந்தவன்.
கீதையை எப்படி படிப்பதுஏன்என்ற தலைப்பில் நீங்கள் பகிர்ந்திருக்கும் கருத்துகளை  நேற்று படித்தேன். அதில் உள்ள கீழ்கண்ட வரிகளின் தொடர்பில் எனது கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
/நான் பலவருடங்கள் தேடலுடனும்கண்ணீருடனும் நான்கு மதங்களின் மூலநூல்களை கற்றுள்ளேன். இன்றும் அவை என் மேஜைமீது உள்ளன. என் கருத்தில் அவை அனைத்துமே பெருங்கருணைஉலகைத்தழுவ முனையும் நீதியுணர்வு ஆகியவற்றின் மகத்தான வெளிப்பாடுகளே. பைபிளையோகுர்ஆனையோதம்ம பதத்தையோகிரந்த் சாகிப்பையோ ஆழமான மனநெகிழ்வும் கனிவும் இன்றி என்னால் வாசிக்க இயன்றதில்லை. வாழ்க்கையின் பல தருணங்களில் அவை எனக்கு பலவகைகளில் தேவைப்பட்டிருக்கின்றன. குறிப்பாக பைபிள் என் நெஞ்சில் ஓர் அணையா ஒளியாக உள்ள நூல்.
ஆனால் ஞானத்தேடல் கொண்ட ஒருவனை ஒருபோதும் ஒரு மூல நூலும் திருப்தி செய்யாது. அவனது ஞானம் அவனே அறிந்துகொண்ட ஒன்றாகவே இருக்கும். நூல்கள் அவனது பாதை ஒளிகளே ஒழிய அவன் சென்று சேரும் இறுதி வெளிச்சம் அல்ல. ஏனெனில் மண்ணில் இதுவரை உருவான எந்த நூலும் இறுதி நூல் அல்ல. ஒரு நூல் பிரபஞ்ச இயக்கத்தை விளக்குமளவு பிரபஞ்சம் சிறியதோ எளியதோ அல்ல. ஒரு மனிதனுக்கு தன் ரகசியத்தை முற்றாகச் சொல்லிவிடுமளவுக்கு அப்பிரபஞ்சத்தின் மனம் சிறுமைகொண்டதுமல்ல. ஒரு நூலை இறைவனின் சொற்களாகக் காண்பதும்அதை எக்காலத்துக்கும் எல்லாருக்கும் உரியதாக நம்புவதும்தான் மூடநம்பிக்கைகளில் தலையாயது என ஒரு ஞானத்தேடல் கொண்ட மனிதன் ஆழமாக அறிவான் என்றே நான் நினைக்கிறேன். அது எந்நூலாக இருப்பினும் சரி. கீதையோகுர் ஆனோபைபிளோ அல்லது மூலதனமோ/.


நீங்கள் குர்ஆனை மதிப்பவர்தேடல் கொண்ட உங்கள் மனதில் மதவெறிக்கிடமில்லைஎதையும் ஆராய்ந்தறிய முயல்கின்றீர்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டுஆகவேஉங்கள் ஆய்வின் அடிப்படையில் நீங்கள் வேதங்கள் இறைவனின் வார்த்தைகள் அல்ல என நீங்கள் நினைத்தால் அது உங்களுடைய உரிமை. ஆனால் ஞான தேடல் கொண்ட மனிதனர்கள் அனைவருமேஇறைவனின் வார்த்தைகள்’ என நம்புவதை மூட நம்பிக்கையென  அறிந்திருப்பான் என நீங்கள் தீர்ப்பு கூறுவது  உங்கள் தேடலின் வாசலை மூடி விட்டீர்கள் என்பதையும் இன்னும் உங்கள் தேடலின் முடிவே இறுதியானது என நம்கின்றீர்கள் என்பதையும் தெரிவிக்கின்றது. மேலும் இந்து ஞான மரபும்பெளத்த ஞான மரபும்,கன்பூஷிய ஞான மரபும்தாவோ மரபும் மட்டுமே அடுத்த தளங்களுக்கு வாசல் திறந்து தருபவை என்பதே என் இருபதாண்டுகால தேடலின் விளைவாக நான் கற்றது என்ற வார்த்தைகளின் மூலம் குர்ஆனிய ஞானங்களில் உங்களுக்கு பரிச்சயமில்லை என்பதும் விளங்குகிறது.
குர்ஆன் 'ஞானங்கள்' என தனியே ஒரு பகுதியை கொண்டதல்ல. அதன் ஒவ்வோரு வாசகங்களும் பல்வேறு பொருள் கொண்டவை என்பது எங்கள் நம்பிக்கை இன்னும் அனுபவம்.
ஒவ்வொரு ஞான விளக்கங்களை பற்றியும் எளிதில் விளங்கும் வண்ணம் குர்ஆனில் ஏன் Defintion இல்லை  என நண்பன் ஒருவன் ஒரு முறை   கேட்டது இங்கே இணைத்து பார்க்கத் தோன்றுகிறது.
குர்ஆன் பல்வேறு அறிவு தளத்தில் உள்ள மக்களுக்கும் பொதுவான இறைச் செய்திஅதில் ஞான விசயங்கள் இஷாரா’ எனும் குறிப்பால் உணர்த்தும்   பாணியில் தான் சொல்லப்பட்டிருக்கின்றது.
ஒரு முறை முஹம்மது நபியவர்களிடம் கிராமிய அரபியர் குழு ஒன்று வந்து நாங்கள் 'மூமீன்' என சொல்லும் போது நீங்கள் 'மூமீன்' என சொல்லாதீர்கள். முஸ்லிம் (இஸ்லாத்தை ஒப்பு கொண்டவர்கள்) என சொல்லுங்கள் என கூறினார்கள்.
நம்பிக்கையாளர்களின் முன்று வகை நிலையை சுருக்கமாக இப்படி சொல்லலாம்.
இஸ்லாம் – ஒப்பு கொள்வது அந்த நிலையில் உள்ளவர் 'முஸ்லிம்'.
ஈமான் – அதில் உறுதி கொள்வது அந்த நிலையில் உள்ளவர் 'மூமீன்'.
இஹ்சான் – அதை உணர்வாய் கொள்ளும் பிரஞ்சை நிலை ( Concious state).அந்த நிலையில் உள்ளவர் 'முஹ்சீன்'.
இந்த மூன்று நிலையையும் அடைவதே மார்க்கத்தின் சம்பூர்ண நிலை என்கின்றது நபி மொழி.
பொதுவாக நம்பிக்கையாளர்கள் அனைத்தையும் ஒப்புக் கொள்கின்றார்கள்சிலருக்கு சின்ன சின்ன விளக்கங்களே போதுமானதாக இருப்பதால் அதையே போதுமானதக்கிக் கொண்டு வெளிரங்கமான வணக்க வழிபாடுகளைக் கொண்டு அவர்கள் நிறைவடைகின்றார்கள் .
நம்பிக்கையாளன் ஞானத்தேடல்கொண்டவனைவிட கீழானவன் இல்லை. அவ்வெண்ணம் விவேகானந்தருக்கு வந்தபோது ராமகிருஷ்ண பரமஹம்சர் சைதன்ய மகாபிரபு பக்தர்தானே ?'  என்று கேட்டு அவரைக் கடுமையாகக் கண்டித்ததை ராமகிருஷ்ணர் வரலாற்றில் காண்கிறோம். பொதுவாக பக்திமரபு ஞானத்தைவிடவும் அதிகமான முக்கியத்துவத்தை பக்திக்கு அளிக்கிறது. எல்லா வழிகளும் இலக்காக்குவது ஒன்றையே. ஒருவன் எதில் நிறைவுகொள்கிறான் என்பது அவனது இயல்பைச் சார்ந்தது”   என்ற உங்கள்  வார்த்தைகளை    இங்கே    அன்புடன்   நினைவு கூர்கின்றேன்.
இனி மேலே சொன்ன இஷாராக்களின் மேலான ஞான விளக்கம் வேண்டின் அந்த ஞானத்தை  பெற்ற குருவின் மூலம் தான் பெற முடியும் என்பது வேத ழி காட்டலாகும்.         
இன்று உள்ளது போல் குர்ஆன் பிரதிகளை மட்டும் வைத்துக் கொண்டு ஞானம் பெற்றவர்களல்ல நபித் தோழர்கள்.
இறைவன் வஹியின் மூலம் இறைதூதருக்கு இந்த ஞானத்தை வழங்கினான்நபியின் பணிகளின் தலையானது வேதத்தை கற்றுக் கொடுப்பதுஅதன் ஞானத்தை கற்று கொடுப்பது. இன்னும் அதன் மூலம் இதயத்தை பரிசுத்தபடுத்துவதாகும்.
இவ்வாறு நபியிடமிருந்து தோழர்கள்அவர்களிடமிருந்து அவர்களுக்கு  பின் வந்தவர்கள் என சொல்லிக் கொடுக்கும் பழக்கம் இன்றும் தொடர்கிறதுநபியிடம் தொடங்கி ம் வரை வந்தடையும் குரு பரம்பரையின் இந்த சங்கிலித் தொடர் ‘ஸில்சிலா’ என வழங்கப்படுகின்றது.
காதிரியாசிஷ்தியாநக்ஸபந்தியாசுஹ்ரவர்த்தியா என பல்வேறு ஸில்சிலாக்களின் (சூஃபி மரபின்) வழியே இந்த ஞான வழி போதனை இன்றும் தொடர்கிறது.
Toshihiko Izutsu அவர்களின் Sufism and taoism : a comparative study of key philosophical concepts  என்ற புத்தகம் வலைத்தளத்தில் PDFல் கிடைக்கிறது விரும்பினால்  படித்து பாருங்கள்இப்னு அரபி என்னும் ஞானியின் புகழ் பெற்ற ‘புசூசுல் ஹிகம்’ என்ற நூலின் கருத்துகளை தாவோவின் கருத்துகளுடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட நூல் Toshihiko Izutsu அவர்கள் குர்ஆனை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்தவராவார்.

அன்புடன்,
.நூருல் அமீன் 

ஜெயமோகன் தன் வலை பக்கத்தில் இந்த மடலை வெளியிட்டுள்ளார். சுட்டி கீழே: 
பதில் தாராத உங்கள் மௌனத்தை கூட கண்ணியமான ஒரு பதிலாகவே பார்க்கின்றேன். நன்றி!

உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.

Sunday, February 10, 2019

வாசிப்பின் அகமும் புறமும்


எழுதப்படாத கவிதைக்கு மொழிகள் கிடையாது

கவிதைகள் உள்ளிருப்பால் அரூபவாசிகள்

கவிஞனின் மொழியே கவிதையின் மொழியாகிறது

மொழிஎழுத்துவார்த்தைகள் எல்லாம் வெளிப்பாட்டின் சாதனங்கள்

கண்களால் வாசிக்கப்படும் வார்த்தைகளின் வழியே தான் இதயம் கவிதையில்
நுழைய  வேண்டும்

இதயத்தின் கவிதை வாசிப்பு ஆழ்மனப் பயணம்
விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே!”
எனக் காதலிக்கு பாடும் கவிஞர் வைரமுத்துவின் வரிகள் கவிதைக்கும் பொருந்தும்.

கவிதைகளைச் சுவாசித்த அரபியா மண்ணில் இறைவேதம் இறங்கியதால் 

குர்ஆன் கவிஞர்கள் வியக்கும் கவிதைகளின் வடிவத்தில் இறங்கியது

வேதங்கள் இறைவனின் பேச்சு என்பதால் அதற்கு மொழிகள் கிடையாது

நபிகளின் மொழியே வேதங்களின் மொழியானது

வேதங்கள் புலன்களுக்கு மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொண்டோருக்காக
திறந்த அற்புத வாசல்

கண்களால் வாசிக்கப்படும் வார்த்தைகளின் வழியே தான் இதயம் வேதத்தில் 
நுழைய வேண்டும்.

வேதவாசிப்பும் ஆழ்மனப்பயணம்ஆழ்கடல் முத்துக் குளியல்

"(நபியே!) நீங்கள் கூறுங்கள்கடல் நீர் அனைத்தும் மையாக    இருந்து   என் இறைவனின் வாக்கியங்களை எழுத ஆரம்பித்தால்,என் இறைவனின் வாக்கியங்கள் முடிவதற்கு முன்னதாகவேஇந்தக் கடல் மை அனைத்தும் செலவாகிவிடும்.
அதைப் போல் இன்னொரு பங்கு (கடலைச்சேர்த்துக்  கொண்டபோதிலும் கூட!"   (அல் குர்ஆன் 18:109). 


உருவங்கள்வடிவங்கள்நிறங்கள் எல்லாம் இறை வார்த்தைகளின் 
வெளிப்பாட்டின்  சாதனங்கள்

கண்களால் வாசிக்கப்படும் உருவங்களின் வழியே இதயம் உருவமற்ற 
இறையின்  அழகைப் பருக வேண்டும்

அந்த ஆழ்மன பயணத்தில் தக்வாவே வழிகாட்டி

இதயத்தின் கண்களுக்கு நீச்சலில் உதவும் கண்ணாடியும் அதுதான், சாகச பயணத்தின் கட்டுச்சாதமும் அது தான்

முள்ளில் சிக்காமல் ஆடையைக் காப்பது போல் 

இணைவைப்பில் சிக்காமல் இதயத்தைக் காக்கும் விழிப்புணர்வே 'தக்வா'

பிரபஞ்சத்தைக் கண்ணாடியாக்கி அவன் பேரழகை தரிசிக்கும் ‘இஹ்ஸான் தக்வா.

எல்லா எல்லை கோடுகளையும் அழித்து உள்ளும்புறமும் ஊடுருவி நிற்கும்  இறைமையின் தரிசனத்தில் ஒருமையின்இன்பமும்

வல்லமையின் சாட்சியாய் அவன் வெளியாக்கி வைத்த பிரபஞ்ச கோலத்தில்
இருமையின் நயமும் 

ஒருங்கே ரசிக்கும் அற்புதமான ஆழ்மன வாசிப்பு 'தக்வா'.





உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.