இது ரமலான் மாதத்திற்கு முன்பு எழுதியது.
வேலை பளுவினால் சற்று தாமதமாக வெளியிடப்படுகின்றது.
சுந்தரராமசாமி தமிழ் இலக்கியத்தில் ஒரு மகத்தான ஆளுமை. அவரது ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ என்ற நாவல் என்னை கவர்ந்த அளவு அவரது ‘ஒரு புளியமரத்தின் கதை’ என்னை கவரவில்லை. எழுத்தாளர் ஜெயமோகனோ புளியமரத்தின் கதையை தமிழின் முக்கியமான நாவலாக குறிப்பிடுகின்றார். நல்ல இலக்கியம் என்று சொல்ல பட்ட வேறு சில நூல்களும் வாசிக்க சலிப்பூட்டுபவைகளாக எனக்கு இருப்பதை கண்டேன். சிந்தித்து பார்த்ததில் என் புரிதலின் போதாமை இது. இலக்கிய வாசிப்பில் எனக்குள்ள பயிற்சி குறைவின் விளைவு இது என்பதை உணர்ந்தேன்.