தோழமையுடன்

Saturday, June 15, 2013

நபியிடம் பெற்ற பேறு!


ஷெய்குல் அரபி வல் அஜம் ஃபைஜிஷாஹ் நூரி(ரலி)
முஹய்யத்தீன் அப்துல் காதர் ஜீலானி(ரலி), காஜா முய்னுத்தீன் (ரலி), ஜுனைதில் பக்தாதி(ரலி). அபுபக்கர் ஷிப்லி(ரலி) என இறைநேசர்களின் சரித்திரத்தை படித்திருக்கின்றோம். அந்த வழியில் வந்த ஒரு இறைநேசரின் சகவாசத்தில் வாழும் மகத்தான பாக்கியம் என் போன்றோருக்கு கிடைத்தது  இறைவன் வழங்கிய பெரும்பேறு."அவ்லியாக்களின் தரிசனம் பெற்றால் ஆன்மாவிற்கே சுகம் சுகம்" என்று பாடிய மறைந்த கவிஞர் நாகூர் சலீம் அவர்களின் பாடல் வரிகள் தான் இங்கே நினைவில்  வருகின்றது.

வலிகள் கோமான் முஹய்யத்தீன் ஆண்டகையின் சரிதத்திலிருந்து பெரியோர்கள் எடுத்துக் கூறிய ஒரு சம்பவம்:

கௌதுனா தன் சீடர்களுடன் ஆன்மீக சபையில் அமர்ந்திருக்கின்றார்கள். அப்போது சீடர் ஒருவர் “  இப்போது நாம் அமர்ந்திருப்பது  பெருமானாருடன் சஹாபாக்கள் வீற்றிருப்பது போல் இருக்கிறது” என கூறவும் கௌதுனாவின் அழகிய முகம் சிவந்து விட்டது.

Monday, June 10, 2013

இறைகாதல் - கலாநிதி தீன்முகம்மதுவுடன் ஓர் நேர் காணல்

மப்றூக்


லங்கையின் கல்வித்துறைசார் இஸ்லாமிய அறிஞர்களில் குறித்துச் சொல்லத்தக்க ஒருவர் கலாநிதி தீன்முகம்மத்! இவரின் சொந்த ஊர் அம்பாரை மாவத்திலுள்ள அக்கரைப்பற்றுப் பிரதேசம். இலங்கையில் வாழ்ந்ததை விடவும் கற்கவும், கற்றுக் கொடுக்கவுமென இவர் வெளிநாடுகளில் வசித்த காலமே அதிகமாகும்!

இவர் பாகிஸ்தான் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தில்:

0 இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் பீடாதிபதியாகவும்
0 மதங்கள் ஒப்பியல்துறைத் தலைவராகவும்
0 கல்வி நிர்வாகப் பணிப்பாளராகவும்

நீண்ட காலம் சேவையாற்றியிருக்கின்றார்.

அதற்கு முன்னர், 1988 இல் எகிப்திலுள்ள அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய ஆய்வுப் பிரிவில் விரிவுரையாளராகவும், ஆய்வாளராகவும் பணியாற்றியிருந்தார்!

தற்போது கட்டார் பல்கலைக்கழகத்தின் சரீஆ கற்கைத்துறை இணைப் பீடாதிபதியாக இருக்கின்றார். இந்தப் பதவிக்கு முன்னராக, இதே பல்கலைக்கழகத்தின் தவ்வா அல் இஸ்லாமியக் கலாசாரத்துறை தலைவராகவும் கடமையாற்றினார்.