கீற்று இனைய இதழில் திருமங்கலம்
எஸ்.கிருஷ்ணகுமார் (26 நவம்பர் 2012 ) எழுதிய கட்டுரை
நன்றியுடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது.
அப்பாவிகளை குறிவைக்கும் ‘துப்பாக்கி'
வைத்தியம்
தெரியாதவன் கையில் கத்தியை கொடுத்து, ஆபரேஷன் தியேட்டருக்கே அனுப்பியும் வைத்த கதையாக இருக்கிறது தமிழ்
சினிமாவின் இன்றைய கதி. சமீபத்திய உதாரணம், துப்பாக்கி.
மக்களிடம் நேரடியாக தொடர்பு கொள்ளக்கூடிய, மக்களின் எண்ண
ஓட்டங்களுக்குள் புகுந்து ஆதிக்கம் செலுத்தக்கூடிய தொடர்பியல் துறையில்
இருப்பவர்கள் கட்டாயமாக பின்பற்றவேண்டிய பால பாடங்கள், மரபுகள்
இருக்கின்றன. பொழுதுபோக்குவதற்காக என நேரத்தை ஒதுக்கி, பணத்தை
செலவழித்து, உள்ளே வந்திருப்பவர்கள் மூளைக்குள் எதிர்மறை
சிந்தனைகளை ஏற்றி அனுப்பாதிருக்கவேண்டும் என்பது அதில் முதன்மையானது. அதை, தப்பாக்கி விட்டது துப்பாக்கி!