தோழமையுடன்

Thursday, January 31, 2013

கமல்ஹாசனுக்கு இஸ்லாமிய சமூகத்தின் நன்றி! நன்றி! நன்றி!


அன்புள்ள கமல்ஹாசனுக்கு
இஸ்லாமிய 'பொதுஜனங்களில்' ஒருவனாக...

 உங்களின் 'விஸ்வரூபம்' தொடர்பாக பதிந்த ஒரு  மடல்.
 தாலிபான்களின் தீவிரவாதத்தை வென்றெடுக்கும்டாலர் தேசங்களின் உள்ளங்கவர் 'ஃபார்முலாவை' மையப்படுத்தி நீங்கள் கதையமைத்தது ஆஸ்கரை நோக்கிய உங்கள் காய்நகர்த்தலாக இருக்கலாம்.
 
ஆனால் மனித நேயமிக்க கலைஞரான நீங்கள்
சமூக பொறுப்புடன் நடந்து கொள்ளக் கூடிய நீங்கள்


கமல் ....நீங்களா இப்படி செய்தது?

 உங்கள் திரில்லர்திரைப்படத்தின் பார்வையாளர்களுக்கு அதிர்ச்சிசுவை சேர்ப்பதற்கு இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் தவறாக சித்தரிக்கும் காட்சிகள் தானா உங்களுக்கு கிடைத்தது!.

உங்களுக்கு தவறான உள்நோக்கம் ஏதும் இல்லாமல் இருக்கலாம்,  ஆனாலும் உங்கள் செய்கையின் விளைவு எங்களுக்கு வலிக்கிறது தோழரே!.

அந்த வலியின் எதிர் வினையாக இஸ்லாமிய அமைப்புகள் முன்னெடுத்த போராட்டங்கள்….

அதற்கு ஆதரவாக அரசாங்கம் விதித்த  தடையுத்தரவு

தொடரும் நீதிமன்ற தீர்ப்புகள்

அதனால் விளைந்த உங்கள் விரக்தியான வேதனைப் பேச்சு

இப்படி எல்லா நிகழ்வுகளுமே பொதுமக்களின் மனதில் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? என்ற கேள்வியை எழுப்பியுள்ள நிலையில்,

இந்த நிகழ்வுகளால் சில நன்மைகளும் விளைந்துள்ளன.

அதற்காக உங்களுக்கு இஸ்லாமிய சமுதாயத்தின் சார்பில் எங்கள் நன்றி!.

நன்மைகள் சில உங்கள் பார்வைக்கு:

1        எல்லா மதத்திலும் தீவிரவாதிகள் இருக்கின்றார்கள். பாகுபாடின்றி அந்த தீவிர வியாதிகளும் அதன் காரணிகளான மூலவேர்களும்அகற்றப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு இரு வேறு கருத்தில்லை. ஆனால் ஒரு இருபதாண்டு காலமாக திரைப்படங்களில் தீவிரவாதிகள் என்றாலே இஸ்லாமியர்கள்என திரும்பத் திரும்ப காட்டி இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்லது தீவிரவாத்தின் ஆதரவாளர்கள்' என ஏனைய சமூகத்தாரை நம்ப வைக்கும் வெற்றிகரமான மூளைச்சலவையால், இன்று இஸ்லாமியர்கள் சந்தித்து வரும் மன நெருக்கடி மிக மிக அதிகம். 


இது ஒரு கருத்தியல் வன்முறை, அநீதமான போக்கு என அறிவுடையோர் அறிந்திருந்தாலும் வெளிப்படையாக அதை கண்டித்த இஸ்லாமியரல்லாதவர்கள் எண்ணிக்கையில் மிகவும் சொற்பம்.


சென்ற வாரம் வரை இந்த நிலை தான் தொடர்ந்தது....


இன்றோ பல்வேறு அரசியல், சமூக, வர்த்தக பிண்ணனி கொண்ட இஸ்லாமியரல்லாத சகோதரர்கள் தெளிவாக இது இஸ்லாமிய சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதி என்பதை தொலைகாட்சி பேட்டியில் வெளிப்படுத்தி வருகின்றனர். மிக பரந்த தளத்தில் இந்த உண்மை இன்று பொதுமக்களை சென்றடைய விஸ்வரூபம் ஒரு காரணமாக அமைந்திருப்பதால்
இஸ்லாமிய சமுதாயத்தின் சார்பில் உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி!.

2.       இனி வரும் காலங்களில்,  திரைப்படங்களில் பொறுப்பற்ற முறையில் எந்த சாதி, மத, இனத்திற்கும் எதிராக தவறான கருத்தை முன்வைக்க எவரும் யோசிப்பார்கள் என்பது இன்னும் ஒரு நல்ல விசயம்.

3.       தணிக்கைத் துறையினர் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதை பலர் வலியுறுத்தியிருப்பதுவும் ஒரு நல்ல விசயம்.
 

4.       இன்னும் ஒரு  தனிப்பட்ட நன்மை உங்களுக்கு:
தொலைக்காட்சிகளில், இணையத்தில் இன்னும் பிற ஊடகங்களில் ஆதரித்தும், எதிர்த்தும் இன்று அதிகம் பேசப்படுப்படும் விசயம் talk of the town உங்கள் விஸ்வரூபம் தான். அப்படி என்ன தான் எடுத்திருக்கிறார் கமல்ஹாசன்?’ என்ற ஆர்வத் தூண்டல் இன்று உலகெங்குங்கும் விதைக்கப்பட்டிருக்கிறது. இது நீங்கள் 1000 கோடி செலவழித்தாலும் கிடைக்க முடியாத ஓர் அரிய விளம்பரம். விஸ்வரூபம் படத்தின் வெற்றியை இனி உங்களால் கூட  தடுக்க முடியாது.

ஆகவே கவலையை விடுத்து, நீக்க வேண்டிய காட்சிகளை நீக்கி ஆக வேண்டிய சமரச முயற்சிகளை கையிலெடுங்கள். சமூக நல்லிணக்கம் நோக்கிய சுமூகமான தீர்வே எல்லோருடைய ஆசையும். 

அனபுடன்,

உங்கள் தமிழ்ச் சகோதரன்


முஸ்லிம்களைப் பற்றி கமல்ஹாஸன்

உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.

9 comments:

HM Rashid said...

கமல் ஒரு சிறந்த மனித நேயமுள்ள மனிதர் என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது...மேலும் பாப்ரி மஸ்ஜித் இடிப்பை கண்டித்து நரசிம்மராவிடம் தனது அதிர்ப்தியை வெளிபடுத்தியவர்த்தான் கமல்!!சில சில்மிஷ கருத்துக்களால் இஸ்லாம் அழிந்துவிடும் என்ற பயத்தில் யாரும் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை,,.முஸ்லீம்களின் மீது ஏற்பட்டிருக்கும் வெரூப்படயாளங்கள் ,பயங்கரவாத முத்திரைகள் மாற்றப்பட வேண்டும் என்ற நல்லென்னத்தில்தான் எதிர்ப்பு குரல் நடு நிலையாளர்களிடமிருந்துக்கூட எழுந்தது!!இதுப் போன்ற கருத்துக்களை அவதானிக்கும் மக்களின் பொது புத்தி மிக ஆபத்தானது!!இந்த விஷயத்தின் மீதான எனது அவதானிப்பு 1.24 அமைப்புகள் நம்மிடையே இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது2.சில தலைவர்களின் அநாகரீக பேச்சு 3.வெறுப்பரசியல் 4.பெஉம்பான்மையான இந்து நண்பர்கள் நடு நிலை தவறவிட்டு முஸ்லீம்களின் மீது மிகைப்படுத்தப்படும் தீவிரவாத முத்திரை குத்தப்படுவதை எதிர்க்காமல் மவுனம் காத்தது..5.விசுவரூபத்தின் பொருட்டால் பல பேருடைய சுய ரூபங்கள் வெளீப்பட்டது(கமலுக்கு நன்றி)ரத்தின சுருக்கமான கட்டுரை வித்தியாசமான பார்வையில் ..நன்றி ..அருமை

Anonymous said...

Good article
-GMNS

Anonymous said...

https://www.facebook.com/photo.php?v=147884925368387

Taj said...

அன்பு நூருல் அமீன்....
சிறப்பாக,
உங்களுக்கேயான தன்மைகளோடு
கருத்துக்களை வைத்திருக்கின்றீர்கள்.
இன்னும் கொஞ்சம்
கூடுதலாக ஆய்ந்திருக்கலாம்.
(மதப்பற்று மறுத்திருக்கக் கூடும்.
நீங்கள் என்று இல்லாமல்
பலருக்கும் அந்தப் பற்று
அவர்களது கண்களை மறைக்கத்தான்
செய்திருக்கிறது. )
எல்லாம் நன்மைக்கே
குட்

ஹமீது ஜாஃபர் said...

மிக அருமையான கருத்தை வெளியிட்டிருக்கிறீர்கள். இஸ்லாத்தின் பெயரை கெடுப்பதற்கெண்டு சில அமைப்புகள் இருக்கின்றன. அவர்கள் இயற்கையான தீவிரவாதிகள் அல்ல என்றாலும் தீவிரவாதிகளாக ஆக்கப்பட்டவர்கள். ஆனால் அந்த அமைப்பில் இணைந்துள்ள பெரும்பாலனவர்கள் மூளை சலவை செய்யப்பட்டவர்களாக இருக்கின்றனர். ஒரு கையில் துப்பாக்கியும் மறு கையில் குர்ஆனையும் ஏந்தியவர்களாக இருந்துக்கொண்டு தாங்கள்தான் தூய இஸ்லாத்தில் இருக்கிறோம் என்கின்றனர். அத்தகையவர்களை பாமரர்கள் இனங்காண்பது இத்தகைய ஊடகங்கள் மூலமாகத்தான் என்பதையும் கருத்தில் கொண்டு முள்ளின் மீது விழுந்த சீலையை சேதப்படாமல் எடுக்கும்போது தேகத்தில் கீறல் விழத்தான் செய்யும்.

Unknown said...

கொடுமை என்னன்னா சேத்துல அவன் கால வச்சாத்தான் நம்ம சோத்துலையே
கை வைக்க முடியும், அவனுடைய சாவ கூட பாவன்ம்னு சொல்லாத ஜென்மம்லாம் கூத்தாடிக்கு கூத்தடிக்க வந்தத பார்த்தா நெஞ்சு போருக்குதிலேயே ..இதுல தன்னுடைய வேதனையும் மறந்து இதப்பத்தி பேசும் அவர்களும் மூலைக்கு மூலை ...கண்வாய்ளையும் கலபுடுங்கும் போதும் ...மிக கொடுமை ல்.இந்த நிலை கேட்ட மனிதரை நினைந்துவிட்டால் ...

Anonymous said...

Dear Mr.Ameen, Fantastic article. You have explained the matter in your stride. Well done. Hereafter no film maker will dare to take film involving religions.

But at the same time ,we all should not forget Ms.Jayalalitha for her stand against minority. When we condemn Mr.Kamalahasan for his film but we should not appreciate Ms.Jayalitha and think she is fighting for the minority. It's purely (parliament) election stunt and personal vendetta in my view.

One Colleague of Mr.Ameen, Dubai

Anonymous said...

திரு அமீன் அவர்களே ! தங்களுடைய ஆதங்கம் நியாயமானதுதான் . ஆனால் முஸ்லிம்களுக்கும் சில கடமைகள் இருக்கிறது . இந்த பன்முக சமுதாயத்தில் வாழும் முஸ்லிம்கள் தாங்கள் சார்ந்த அமைப்புகள் செய்யும் செயல்களுக்கு கண்மூடிதனமாக ஆதரவு அளிப்பதை தவிர்ப்பது நலம் . சௌதி அரேபியாவில் ஒரு சிறு பெண்ணை தலையை வெட்டி கொல்வதை ஆதரிக்கும் சிலர் இங்கு கொடுக்கப்படும் மரண தண்டனையை எதிர்க்கின்றனர் . எங்கோ நடப்பதாக எடுக்கப்படும் படத்திற்கு இங்கு போராட்டம். ஆனால் இங்கு தீவீர வாதிகள் நடத்தும் வெறி செயல்களை எதிர்த்து ஒரு நாளாவது போராட்டம் நடத்தி இருக்கின்றார்களா என்பதை யோசித்து பார்க்க வேண்டும் . இங்கு வாழும் உயிர்கள் மட்டும் மதிப்பற்றவையா ? இப்படி ஒரு தலை பட்சமாக முஸ்லிம் தலைவர்கள் நடந்து கொண்டு இருக்கும் போது, முஸ்லிம்கள் மீது வெறுப்பு ஏற்படுவது இயல்பானதே . ஆனால் உண்மையில் எல்லா முஸ்லிம்களும் அப்படி இல்லை என்பதுதான் இங்கு நிதர்சனமான விஷயம் . ஆனால் அந்த நடு நிலையான முஸ்லிம்களின் பேட்டிகளோ , போராட்டங்களோ வெளியில்(மீடியாவில் ) வருவது இல்லை .உங்கள் தலைவர்கள் நடந்து கொள்ளும் விதம்தான் எல்லா பிரச்சினைக்கும் காரணம் . யோசித்து பாருங்கள் இந்தியா மத சார்பான நாடாக இருந்தால் இந்நேரம் பி ஜே பி . தானே ஆட்சி செய்ய வேண்டும் . ஆனால் அவர்கள் என்னதான் முக்கி முனகி பார்த்தும் வர முடிந்ததா? ஏனென்றால் இங்கு இருக்கும் இந்துக்களில் ஒரு சிலரை தவிர பெரும்பாலானோர் நியாத்தைதான் பார்கின்றனர் . மதத்தை அல்ல . உங்கள் தலைவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதால் இந்தியா மத சர்ர்பாக மாறி விடுமோ என்கிற பயம் வருகிறது . விஸ்வரூபம் விஷயத்தில் ஜைனுலாப்தீன், கமலின் மகளை -நீ உன் அப்பனுடன் படுப்பாயா என்று கேட்டது ஐந்து வேளை தொழும் ஒரு மத போதகரின் பேச்சாக தெரிய வில்லை . மதம் மனதை பண்படுத்தா விட்டால் (அது எந்த மதமாக இருந்தாலும்) அதினால் இந்த சமுதாயத்திற்கு அழிவே நிச்சயம் .

புல்லாங்குழல் said...

உங்கள் அன்பான கருத்துக்கு என் நன்றி!

1. தீவிரவாதிகளுக்கு/தீவிரவாதங்களுக்கு எதிராக எல்லோரும் ஒருங்கிணைய வேண்டும். அது இன்றைய காலகட்டத்தின் உடனடி தேவை.

2. இஸ்லாமிய இயங்களின் தலைவர்கள். தான் சார்ந்த இயக்கங்களின் தலைவர்கள் தானே தவிர ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் தலைவர்கள் அல்ல.

3. தரக்குறைவான வார்த்தைகளை பேசும் இயக்கத் தலைவர் பற்றி கூற எதுவுமில்லை.

4. நீங்கள் பெயரை வெளியிட விரும்பாத ஒரு முஸ்லிம் என்பது என் யூகம்.